Monday, 20 July 2015

என் கேள்விக்கு என்னபதில் ... முத்துப்பிள்ளை. 91501 06069





ஜாதகம்.1.
பெயர். தேவப்பிரியன். 13.10.1979 காலை மணி 06.14 நிமிடத்திற்கு திருநெல்வேலியில் பிறப்பு.

ஐயா, வணக்கம், என்னுடைய பொருளாதார நிலை மிகவும் தேக்கமடைந்து இருக்கிறது. இதற்கு விடிவுகாலம் எப்போது என்பதைத் தெளிவாகக் கூறுங்கள்






சந்
கேது


                இராசி
செவ்


குரு சனி ராகு



புதன் சுக்கி மா
இல சூரி

பிறப்பு காலத்தில் குருதசா இருப்பு வருடம் 07 மாதம் 03 நாள் 13 ஆகும். தற்போது புதன்தசாவில் செவ்வாய்புக்தி 23,02 2015 வரை நடக்கும்.

 ஐயா வணக்கம். உங்களின்லக்கினம் கன்னி. இலக்கினத்திற்கு இரண்டில் (துலாமில்) புதனும், ஆட்சிபெற்ற சுக்கிரனும் இருக்கின்றனர். இரண்டில் சுபக்கிரகங்கள் இருக்க, அதனால், ஜாதகர் என்னமோ அழகாகத்தான் இருப்பார். கண்களும், முகமும் கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், வாழ்க்கை நடத்த வருமானமும், தொழில் முடக்கமும் இருக்கும். இது ஏன் என ஆய்வு செய்த போது, விரைய வீடான சிம்மத்தில் இருக்கும், இராகுவும், சனியும் தன் மூன்றாம் பார்வையால், இரண்டில் இருக்கும் புதனையும் சுக்கிரனையும் காண,  ஜாதகரின் பொருள்வரவைக் குறிக்கும் தன வீடு இருள் சூழ்ந்து காணப்படும். கிரகங்கள் வீடுகளில் இருப்பது மட்டுமல்ல. சாரங்கள் பெறுவது மட்டுமல்ல. பார்வைகளும் பலன்களை மாற்ற வல்லது, என்பதை வாசகர்கள் உணரவேண்டும். உங்களுக்கு தற்போது லக்கினாதிபதி புதனின் தசா என்றாலும், வெற்றியில் முனைப்பைக் காட்டும் மூன்றாமதிபதியான நீச செவ்வாயின் புக்தி முடியும் காலம்வரை சற்றே பொறுத்திருங்கள். காலம் மாறும். நன்றி.

ஜாதகம்; 2,  

பெயர்; சுஜலதா, 14,05.1983 மதியம் மணி 02,29 நிமிடத்தில் சேலத்தில் பிறப்பு.

சுக்

சூரி புதன்
கேது
 மாந்
சந்  சனி


               இராசி
செவ்





 இரா

இல  குரு         
        வக்

பிறப்பு காலத்தில் இராகு மகாதசாவில் இருப்பு வருடம் 14 மாதம் 01 தேதி 27ஆகும்.   தற்போது 11.04.2015 வரை குருதசாவில் கேது புக்தி நடந்து வரும்.

சகோதரிக்கு வணக்கம். தங்கள் ஜாதகத்தில் இலக்கினம் கன்னி.  இலக்கினத்திற்கு ஏழுக்குடைய குரு இலக்கினத்திலே இருந்து, தனது ஏழாம் வீடான மீனத்தைக் காண்கிறார். மீனத்தில் சுக்கிரன் உள்ளார். பெண்களுக்கு கணவனைக் குறிக்கும் கிரகமான செவ்வாய் நீச்சமடைந்து, ஆசைக்களைக் குறிக்கும் பதினோறாம் வீட்டில் அமர்ந்துள்ளார். தங்களுக்கு காலம்தாழ்ந்த திருமணமே நடக்கும். அதுதான் உங்கள் வாழ்க்கைக்கும் நல்லது. வரும் வைகாசிக்கு மேல் திருமணம் நடக்கும். வாழ்த்துகள். திருச்செந்தூர் முருகனை வணங்கி வாருங்கள். நல்லதே நடக்கும்.

ஜாதகம்; 3. இராஜா:  25.10.1992 இரவு மணி 07.15 நிமிடத்திற்கு திண்டுக்கல்லில் பிறப்பு.

கேள்வி;
ஐயா வணக்கம். என்னை ஒரு பெண் விரும்புகிறாள். நானும் விரும்புகிறேன். நாங்கள் இணைந்து வாழ வழியிருக்கிறதா? பின் வாழ்க்கை என்றதும் பயமாக இருக்கிறது. நல்ல தீர்வை சொல்வீர்கள் என்று உங்களை நாடி வந்தேன்.




இல
செவ் கே மா



               இராசி

சனி


இரா

புத சுக்கி
சந்  சூரி
குரு

பிறப்பு காலத்தில் செவ்வாய் தசா இருப்பு வருடம் 00 மாதம் 10 நாள் 24 ஆகும். தற்போது 21.01.2016 வரை குருதசாவில் சனி புக்தி நடப்பில் இருக்கும்.

உங்களின் இலக்கினம் இரிடபம். தற்போது குருதசாவில் சனி புக்தி நடக்கிறது. இந்த ஸ்திரலக்கினத்துக்கு ஒன்பதுக்குடைய சனி பாதகத்தைத் தருவார். அதனால், தற்போது திருமணம் செய்யவேண்டாம். காரணம், ஒன்பதில் வலுவுள்ள சனி, உங்களின் தந்தைக்கு உயிர் ஆபத்தையோ, அல்லது செயல்படாத முடக்க நிலையையோ தந்து இருப்பார். அதே புக்தி இப்போது நடப்பில் உள்ளதால், உங்கள் வாழ்க்கைப் போக்கையும் மாற்றிவிடலாம். அதுமட்டுமல்லாமல், இலக்கினத்திற்கு ஏழாம் வீட்டில் புதன், சுக்கிரன் இருந்து, அக்கிரகங்களுக்கு இருபுறமும் பாவக்கிரகங்கள் இருப்பது பாவகர்த்தாரி அமைப்பாகும். இதுவும் திருமண வாழ்க்கைக்குத் தடையாக அமையும். அதனால், திருமணத்தைத் தள்ளிப்போட்டுவிட்டு, தொழிலை தேடிச் செல்வது நல்லதாகும்.

ஜாதகம்; 4.

மணிவண்ணன். 18.07.1992 காலை மணி 08.25 நிமிடத்திற்கு சென்னையில் பிறப்பு.

கேள்வி; ஜோதிடக்கவிஞருக்கு வணக்கங்கள் பல. நான் பி. படித்துள்ளேன். இதுவரை வேலைவாய்ப்பே அமையவில்லை. அதனால், திருமணமும் தள்ளிப் போய்கொண்டு உள்ளது. எனக்கு எப்போது இவையெல்லாம் அமையும்.




செவ்
கேது
சந்


             இராசி
சூரி புத சுக் மாந்
சனி  வக்

இல  குரு
இராகு





பிறப்புகாலத்தில் இராகுதசாவில் இருப்பு, வருடம் 15 மாதம் 05 நாள் 09 ஆகும். தற்போது 27. 09.2015 வரை குருதசாவில் கேது புக்தி நடப்பில் இருக்கும்.

உங்களின் இலக்கினம் சிம்மம். ஐந்து, எட்டுக்குடைய குரு தசா நடப்பில் உள்ளது. தசாநாதன் குரு இலக்கினத்தில் அமர்ந்துள்ளார். மறைந்த புதன் நிறைந்த பலனைத் தருவார் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, நல்லகல்வியைத் தந்துள்ளார்.  இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு மேல், நல்லவேலையும், அதைத் தொடர்ந்து திருமணவாய்ப்பும் உண்டாகும். அதன்பின்வரும் காலங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றம் தரும். வாழ்க்கையை முறையாக வாழ்ந்து வாழ்வில் முன்னேறுங்கள். வணக்கம்.

ஜாதகம்; 5 . 

பெயர். பாலசரவணன், 02.02.1984 அதிகாலை மணி 03. 30 நிமிடத்தில் திருச்சியில் பிறப்பு.

ஐயா, வணக்கம். எனக்கு எப்போது திருமணம் நடக்கும்.  இதை கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்.




இரா




              இராசி

சூரி சந்


இல புத சுக் குரு மாந்
கேது
செவ் சனி


பிறப்பு காலத்தில் சந்திரன் தசாவில் இருப்பு வருடம் 04 மாதம் 00 நாள்12 ஆகும். தற்போது, குருதசாவில் சனி புக்தி 12.05.2017 வரை நடக்கும்.

உங்களின் இலக்கினம் தனுசு. மனைவியைத் தரவேண்டியக் கிரகங்களான காரகக்கிரகம் சுக்கிரனும், ஏழுக்குடைய புதனும் குருவுடன் கூடி இலக்கினத்தில் இருக்க, இரண்டில் சூரியனும், பனிரெண்டில் கேதுவும் இருந்து பாவகர்த்தாரியாகி திருமணத் தடையைத் தருகின்றன. எட்டுக்குடைய சந்திரன் குடும்ப வீட்டில் இருப்பதும் திருமணத்தடையாகும். பொதுவாக சூரியன் இரண்டில் இருபத்தும் குடும்பவாழ்வு அமைவதில் சுணக்கத்தைத் தரும். இவ்வருடம் ஜீன்மாதத்திற்கு மேல், திருமணம் நடக்கவாய்ப்புள்ளது. உங்களுக்கு மனைவியாக வரக்கூடிய பெண்ணுடன் உடன் பிறந்தவர் இருவருக்கு ஒருவர் இருப்பார். உங்களுக்கு மனைவியாக வரக்கூடிய  பெண்ணின் வீட்டிற்கு தெற்குப்பக்கம் புதர்மண்டிக்கிடக்கும். அல்லது காளி கோவில் இருக்கும். வடக்குப்புறம் காலி இடமும், கிழக்குப்பக்கம் மூன்று தொடர்வீடுகளும் இருக்கும். இந்த அடையாளங்களோடு தான் உங்களுக்கு வாழ்க்கைத்துணை அமையு. வாழ்த்துகள்.
       
முத்துப்பிள்ளை. 91501 06069
 4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். 624 701 (அஞ்சல்)
ஆத்தூர் வட்டம்
திண்டுக்கல். மாவட்டம்
கைபேசி. 91501 06069
.+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
   

No comments:

Post a Comment