Monday 20 July 2015

என் கேள்விக்கு என்னபதில் .... முத்துப்பிள்ளை. 91501 06069



ஜாதகம்.1.

பெயர்; வெங்கடேஷ். 10.07.1979 இரவு மணி 07. 12 நிமிடம் திருச்சிராப்பள்ளி

ஐயா, வணக்கம் நான் தற்போது துபாயில் வேலை செய்து வருகிறேன். என் மனைவி என்னைவிட்டு பிரிந்து இருக்கிறார். இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளோம். அதற்குள்ளாக என் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கிறாள். இவளிடமிருந்து முழுமையாக எப்போது விடுதலை கிடைக்கும். தயவு செய்து கூறுங்கள்.




செவ்வா
சூரி  சுக்கி
கேது


                இராசி
புதன்  குரு
இல  சந்  மாந்
சனி   இரா






பிறப்பு காலத்தில்  சூரியதசா இருப்பு வருடம் 00 மாதம், 11 நாள் 11 ஆகும். தற்போது, குருதசாவில் குருபுக்தி 24.01. 2017 வரை நடப்பில் இருக்கும். 

தங்களின் ஜாதகத்தை முழுமையாய் ஆய்வு செய்ததில், இரண்டில் கேதுவும், ஒன்றுக்கொன்று சப்தமத்தில் குருவும், சந்திரனும் கூடியிருப்பதுவும், ஏழில் இருக்கும் உச்சக்குருவுடன் பகைபெற்ற புதன் இருப்பதும், எட்டில் இராகு, சனி இருப்பதுவும், குடும்பவாழ்வுக்கு எதிரான கிரக அமைப்பாகும். வழக்கை குறிக்கும் ஆறுக்குடைய புதன் ஏழில் மனைவியின் ஸ்தானத்தில் இருப்பதால், மனைவிக்கு தரவேண்டிய உரிமைகளைத் தந்து பிரியவேண்டியதை காட்டுகிறது. அதனால், இப்போதே பிரிவினை ஏற்படும். மனம் கலங்கவேண்டாம்.

ஜாதகம் 2.

பெயர்; ஆனந்த குமார். 12.04.1987 காலை மணி 10.30 நிமிடம். திண்டுக்கல்.

ஐயா, இது என்மகனின் ஜாதகம். இவனுக்கு திருமணம் எப்போது செய்யலாம். இவனின் திருமணத்திற்கு பின், வாழ்க்கை எப்படியிருக்கும். கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் ஐயா.

சூரி  புத  குரு இரா

செவ்வா
இல
சுக்கி





                இராசி



சனி  வக்

சந்  கேது மா

பிறப்பில் சூரியன் தசா இருப்பு வருடம் 02 நாள் 04 தேதி 05  ஆகும். தற்போது இராகுதசாவில் புதன் புக்தி 22. 09. 2016 வரை நடப்பில் இருக்கும்.

வணக்கம், தங்கள் மகனின் ஜாதகத்தில் மனைவியைத் தரும் ஏழுக்குடைய குரு கெட்டநிலையில் உள்ளது. இரண்டுக்குடைய குடும்பாதிபதி சந்திரன் கேதுவுடன் கூடி பாதிப்படைந்துள்ளார். உங்களின் வாழ்க்கையை குழப்பிமில்லாமல் கொண்டு செல்லவேண்டும். தற்போது திருமண காலம்தான். அன்னையின் அருளோடு வாழ்க்கையைத் துவக்க சொல்லுங்கள்.

ஜாதகம். 3.

பெயர்; கருப்பையா. 23.09.1978 மாலை மணி 04.15 நிமிடம்.  திண்டுக்கல்.

ஐயா, எனக்கு கடன் அதிகமாக உள்ளது. அது எப்போது தீரும். என் மனைவியிடமிருந்து கடனை அடைக்க எந்த ஒத்துழைப்பும் இல்லாமல் வேதனைப்படுகிறேன். என் கவலைகள் எப்போது தீரும். விளக்கமாகப் பதில் கூறுங்கள் ஐயா.

கேது


சந்

இலக்



              இராசி
குரு


சனி



சுக்கி செவ்
சூரி  புத இரா மாந்

பிறப்புகாலத்தில் செவ்வாய் தசாவில் இருப்பு வருடம் 04 மாதம் 05 நாள் 12 ஆகும். தற்போது குருதசாவில் 07.09.2016 வரை இராகுபுக்தி நடப்பில் நடப்பில் இருக்கும்.

உங்கள் குடும்ப வாழ்க்கை எதற்கும் ஒத்துவராத நிலையில் இருக்கும். நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். ஏழில் சனியிருப்பது பிரிவினையைத் தூண்டும் மனநிலையைத் தரும் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் கடனுக்கும், வாழ்க்கைக்கும் நீங்கள்தான் பொறுப்பு. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எப்பாடு பட்டாலும் நீங்கள்தான் கட்டியாகவேண்டும். தற்சமயம் கோச்சார கிரகங்களின் பெயர்ச்சியும், புக்திகாலமும் சரியில்லை. ஆனாலும், வெகுவிரைவில் கடன் அடைய வாய்ப்புள்ளது. காலம் வருகிறது. காத்திருங்கள்.

ஜாதகம். 4.

பெயர்; இராமசாமி. 10.08.1978 காலை மணி 08.46 நிமிடம். சிவகங்கை

ஐயா, வணக்கம், எனக்கு இதுவரை திருமணம் நிகழவில்லை. அந்த நல்ல நிகழ்வு எப்போது நடக்கும்.

கேது








                இராசி
சூரி   குரு


புத  வக்
சனி



சந்
இல செவ் இரா மா சு

பிறப்புகாலத்தில் செவ்வாய் தசாவில் இருப்பு வருடம் 02 மாதம் 00 நாள் 05 ஆகும். தற்போது சனிதசாவில் சனிபுக்தி 04.02 2017 வரை நடப்பில் இருக்கும்.

உங்கள் ஜாதகத்தில் குடும்பத்தை தரவேண்டியவனும், மனைவியைத்தரும் காரகனுமான சுக்கிரன் இலக்கினத்தில் நீசம் அடைந்துள்ளார்.ஏழுக்குடைய பாதகாதிபதி குரு, விரையாதிபதிபதியுடன் கூடி பதினொன்றில் உள்ளார். அதனால் குடும்பஸ்தானமும், மனைவியைத் தருமிடமும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. வரக்கூடிய சனிப் பெயர்ச்சியில் குரு சிம்மத்திற்கு வருங்காலத்தில் திருமணம் நடக்கும்.

ஜாதகம். 5.

பெயர்; பாலாஜி 26.09.1961 நள்ளிரவு மணி 01.20 நிமிடம். சென்னை.

ஐயா, என் வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும். என் வேதனைகளுக்கான விடிவு காலம் எப்போது? விரிவாகப் பதில் கூறுங்கள்.

சந்

மாந்


கேது



              இராசி
இலக்
குரு 
சனி வக்
சுக் இரா



புத செவ்
சூரி

பிறப்பு காலத்தில் தசா இருப்பு வருடம் புதன்தசாவில் இருப்பு வருடம்  02 மாதம் 09 நாள் 07 ஆகும். தற்போது இராகுதசாவில் இராகு புக்தி 12.06.2016 வரை நடப்பில் இருக்கும்.

உங்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமலே வீணாகியிருக்கும். உங்களின் வருமானம் எல்லாம்,  விருப்பப்படி செலவாகாது. எல்லாம் எல்லை மீறிய வாழ்க்கைதான். உங்கள் சந்ததிக்காக உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். இறையருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும். உங்களின் சேமிப்பிலும் இருப்பது நல்லது. எல்லோரிடமும் இணங்கி வாழமுயலுங்கள்.

4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். 624 701 (அஞ்சல்)
ஆத்தூர் வட்டம்
திண்டுக்கல். மாவட்டம்
கைபேசி. 91501 06069
.++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment