Monday 20 July 2015

என் கேள்விக்கு என்ன பதில் .... முத்துப்பிள்ளை. 91501 06069




ஜாதகம் 1.

பெயர்; நஞ்சுண்டேஸ்வரன். 05.08.1942  முற்பகல்  மணி 11.05 நிமிடம். மேட்டுப் பாளையம்.

கேள்வி; அன்புடையீர். என் மனைவியின் உடல்நலம் குணமடைந்து, வீட்டில் அமைதியும் சுமூகமும் ஏற்படுவது எப்போது?
ஐயா, வணக்கம்.தங்களின் இலக்கினம் துலாம். இதற்கு ஏழாமிடம் மேடமே உங்களின் மனைவியின் இலக்கினமாகும். அதன் அதிபதி  செவ்வாய், சிம்மத்தில் திதி சூன்யமடைந்த இராசியில் அமர்ந்துள்ளது. நீங்கள் தேய்பிறை நவமியில் பிறந்துள்ளீர்கள். அதனால் தீரா நோயால் அவதிப்படவேண்டும்.  தற்போது செலவினங்களும் அதிகமாகவே இருக்கும். அதிக சிரத்தையுடன் கவனித்து வாருங்கள். இது கடுமையான காலகட்டம். உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும், வைணவக் கோவிலில் பெருமாளுக்கு பச்சை ஆடை சாற்றி, புதன்கிழமைதோறும் வழிபட்டுவர நன்மை உண்டாகும். 
                          



சந்    சனி
சுக்  குரு
கேது


                 இராசி
சூரி  புத


செவ்  இரா



இல மாந்


பிறப்பு காலத்தில் தசா இருப்பு சூரியன் வருடம் 02 மாதம் 11 நாள் 11 ஆகும். தற்போது புதன்தசாவில் புதன்புக்தி 27.11.2016 வரை நடந்துவரும்.

ஜாதகம் 2.

பெயர் ;அம்சவள்ளி சின்னசேலம். 25.03.1979 நள்ளிரவு மணி 02.30 நிமிடத்திற்கு பிறப்பு.

கேள்வி : என் கணவருடன் பிரிந்து வாழ்கிறேன். மீண்டும் இணைந்து வாழமுடியுமா?

சகோதரி வணக்கம். உங்களின் இலக்கினமும், இராசியும் மகரம் தான், உச்சக்குருவும், சந்திரனும் ஒன்றுக்கொன்று ஏழாக நின்று பார்த்துக் கொள்கின்றன. மேலும், இரண்டாமிடமான குடும்ப வீட்டில் பாவகிரகங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதும், இலக்கினத்திற்கு எட்டாமிடத்தினில் பாவக்கிரகங்களான சனி, இராகு நிற்பதும் குடும்பவாழ்வுக்கு சரியான அமைப்பல்ல. தற்போது நடக்கும் சந்திரபுக்தி நடந்து முடியும்வரை, நீங்கள் விலகி இருப்பது நல்லது. சஞ்சலமும், மனசந்தேகமும் இல்லாமல் வாழ, அன்னை மீனாட்சியை வழிப்பு வாருங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும்.

சூரி  புத வக்



சு  செவ் கே




இராசி
குரு  வக்
இல சந்
சனி வக் இரா


மா



பிறப்பு காலத்தில் செவ்வாய் மகாதசா வருடம் 05. மாதம் 09. நாள் 16 ஆகும். தற்போது, குரு தசாவில் சந்திரபுக்தி 10.04.2015 வரை நடக்கும்.

ஜாதகம் 3.

பெயர்: கணேசன். 22.01.1985 மாலை மணி 04. 20 நிமிடம். திருச்சி.

கேள்வி: ஐயா, எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதை விபரமாகக் கூறுங்கள்.

உங்களின் இலக்கினம் மிதுனம். இராசி மகரம். உங்களின் மனைவியைத்தரும் ஏழாமதிபதியான குரு தான் தற்போது தசாவையும் நடத்துகிறார். ஏழில் இருக்கும் கிரகமான புதன்தான் புக்தியை நடத்துகிறது. இக்காலம் திருமணகாலம்தான். வலுவற்ற புதனால், சில சிரமங்களுக்கு இடையில் திருமணம் நடக்கும். வாழ்த்துகள்.




இரா மாந்
இல
சுக்  செவ்


                               
        இராசி


சந்  சூரி  குரு


புதன்

சனி  கே



பிறப்பு காலத்தில் செவ்வாய் மகாதசா வருடம் 06 மாதம் 01 நாள் 21 ஆகும். தற்போது,  குருதசாவில் புதன் புக்தி 10.10.2015 வரை நடக்கும்.

ஜாதகம் 4

பெயர் : மகேசுவரி. 18.03.1980 முற்பகல் மணி 11.55 நிமிடம். திருச்சியில் பிறப்பு.

கேள்வி; என் திருமண வாழ்க்கை முறிந்து விட்டது. இனியும் பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை விளக்கிச் சொல்லுங்கள் ஐயா.

சகோதரி வணக்கம். உங்களின் இலக்கினம் மிதுனம். இராசி மீனம். இலக்கினத்திற்கு ஏழுக்குடைய கணவனைத் தரும் கிரகமான குரு, களத்திரக்காரகனான செவ்வாயும் கூடி, அட்டமாதிபதியுடன் சம்பந்தமுடன் வக்கிரம் பெற்று அமர்ந்துள்ளனர். தற்போது சூரியதசாவில் குருபுக்தி வேறு நடப்பில் உள்ளதால், உங்கள் திருமணம் தோல்வியடையும். இந்த தசா முடிந்து சந்திரதசா துவங்கியதும் உங்களின் போராட்ட வாழ்க்கை ஆரம்பிக்கும். இப்போது கிடைத்திருக்கும் வாழ்வும், அப்போது முடிவுக்கு வரும். எண்ணங்களை சீர்படுத்தி வாழ முயற்சி செய்யுங்கள். நன்றி.

சூரி  சந்
சுக்

இல  மாந்

புதன் வக் கேது

               
       இராசி




செவ் வக்
குரு வக்
சனி வக் இரா






பிறப்பு காலத்தில் புதன் தசா இருப்பு வருடம் 05 மாதம் 10 நாள் 01 ஆகும். தற்போது, சூரியதசாவில் குரு புக்தி 20.06.2016 வரை நடப்பில் இருக்கும்.

ஜாதகம் 5.

பெயர்: அருண்.  05.05.1989 நண்பகல் மணி 01.15 நிமிடம் திண்டுக்கல்லில் பிறப்பு.

கேள்வி: ஐயா, வருகிற வரன் எல்லாம் தள்ளிச் செல்கிறது. எனக்கு திருமனம் எப்போது? சற்று விளக்கமாகக் கூறுங்கள்.

உங்களின் இலக்கினம் சிம்மம். இராசி மேடமாகும். மனைவியைத் தரும் களத்திர வீடான கும்பத்தில், இராகு அமர்ந்துள்ளார். களத்திர ஸ்தானாதிபதியான சனி வக்கிரமடைந்து, பஞ்சமஸ்தானத்தில் உள்ளார். வக்கிரமடைந்த சனியின் பார்வையில் குடும்பாதிபதி புதனும், அட்டமாதிபதி குருவும் சிக்குகின்றனர். திருமணவாழ்வில் சங்கடங்கள் வரவாய்ப்புள்ளது. சர்ப்பதோஷம் உண்டு. பரிகாரங்கள் செய்து கோள்வது நல்லது. உங்களுக்கு செவ்வாய் தசா வந்தபின்தான் திருமணம் நடக்கும். அன்னை பெரியநாயகியை வணங்கி வாருங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும்.  



சந் சூரி சுக்
புத  குரு  மாந்
செவ்
இரா






இல கேது
சனி வக்





பிறப்பு காலத்தில் சுக்கிரன் தசா வருடம் 11 மாதம் 07 நாள் 03 ஆகும். தற்போது, சந்திர தசாவில் சுக்கிரப்புக்தி 18.03.2016 வரை நடப்பில் இருக்கும்.

அனுப்பவேண்டிய முகவரி.
முத்துப்பிள்ளை,
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். 624 701 (அஞ்சல்)
ஆத்தூர் வட்டம்
திண்டுக்கல். மாவட்டம்
கைபேசி. 91501 06069

No comments:

Post a Comment