Sunday 19 July 2015

78. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?




இந்த முகநூல் பலரையும் உயர்த்தி இருக்கிறது. பலரையும் தாழ்த்தியும் இருக்கிறது. இங்கே இவர்கள் தன்னிலையை அறியாமல், தாவிக் குதித்து அலைகின்றனர். அது கூட பரவாயில்லை. தான் மூடிக் கொண்டிருக்கும் உள்ளங்கையை விரித்துக் காட்டும் வரைக்கும் தான், அது வெறும் கைதான் என்று தெரிந்து விட்டால், கூடிக் குலாவிய அனைவரும் ஓடியே போய்விடுவர்.

உங்களின் இலக்கினத்திற்கு பாக்கியவீடான, ஒன்பதாம் வீட்டில் சனி, இராகு, கேது என்று இருளோ, நிழலோ எவரேனும் ஒருவர் கூடியிருந்தால், உங்களின் குழந்தைச் செல்வத்தால், வறுமையில் வாடுவீர்கள். உறவுகள், சொந்த பந்தம் அனைத்தும், இகழ்ந்து பேசும் நிலைக்கு ஆளாகி, ஊரைவிட்டே போகும் நிலை ஏற்படும் என்கிற தகவலுடன், உங்கள்…..

79. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?
ஒவ்வொரு மனிதனுக்கும், தன் பருவங்கள் ஒவ்வொன்றையும் முடிக்கும் போதும், அவனுக்கென்று நியதியாக்கப்பட்ட கடமைகளை முடித்தாக வேண்டும். அதில் தொய்வொன்றும் வந்து விடக்கூடாது. சரியானப் பருவ வயதில் இல்லற வாழ்வுக்குள் இணைந்து விட வேண்டும்.

இலக்கினத்திற்கு எந்த ராசியிலேனும், சனியும், செவ்வாயும் கூடியிருந்தால், பருவம் தவறிய திருமணம் தான் நடக்கிறது. அதேபோல, சந்திரனுக்கோ, காரகன் சுக்கிரனுக்கோ ஏழாமிடத்தினில் சனியும், செவ்வாயும் இருக்க, திருமணமே இல்லாத பிரம்மச்சர்ய வாழ்வையும் தருகிறது என்கிற தகவலுடன், உங்கள் ….

No comments:

Post a Comment