பெயர்: கே. வனிதா, எம்.ஏ; எம்.எட் (தமிழ்) 12.10.1976 நேரம் இரவு மணி 09.54 நிமிடம் சென்னிமலை
கேள்வி;
நான் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறேன். மீண்டும்
இணைந்து வாழ வழியுண்டா? நான் படித்த படிப்புக்கு, அரசு வேலை கிடைக்குமா?
|
கேது மாந்
|
சந் இல
குரு
வக்
|
|
|
இராசி
|
சனி
|
|
|
|
||
|
|
சுக் செவ் இரா
|
சூரி புத
|
பிறப்பில் சந்திர தசா இருப்பு வருடம். 06 மாதம் 06 நாள் 02 ஆகும். தற்போது குருதசாவில் கேது புக்தி 04.10.2014 முதல் 05.09 2015 வரை நடக்கும்.
வணக்கம் சகோதரி. உங்களின் கணவனைக் குறிக்கும் கிரகமான செவ்வாய், இராகுவுடன் கூடி எதிரியைக் குறிக்கும் ஆறாம் வீட்டில் இருப்பது உங்களுக்குள் பிரிவினையை அதிகப் படுத்தும் அமைப்பாகும். மேலும், செவ்வாய் இருக்குமிடத்திற்கு விரையத்தில் குடும்பாதிபதி புதன் இருப்பதும், குருவும், சந்திரனும் ஏழாமிடத்தைக் காண்பதும் திருமண வாழ்வைப் பாதிக்கும் அமைப்பாகும். இந்த நிலை மாற ஆலோசனைகள் உங்களுக்கு அவசியம் தேவை. என்னை தொடர்பு கொள்ளுங்கள். தனியார் நிறுவன்ங்களில் தான் வேலைவாய்ப்பு உள்ளது. தற்சமயம் பணியில் தடங்கலும், சிரமங்களும் மற்றும் பிரச்சனைகளும் அதிகம் இருக்கும். உங்கள் ஊரில் இருக்கும் வினைதீர்க்கும் பிள்ளையார் கோவில் அருகம்புல் மாலை சாற்றி வழிபட வழிபிறக்கும். நன்றி.
ஜாதகம்; 2
பெயர்; எம். சிவக்குமார். 14.08.1971 நேரம் அதிகாலை மணி 04.20 நிமிடம்.
கேள்வி;
எனக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதை தெரியப் படுத்துங்கள்.
|
|
சந் சனி மா
|
|
|
இராசி
|
இல
சூரி சுக் கேது
|
|
செவ் வக் இரா
|
புதன் வக்
|
||
|
குரு
|
|
|
பிறப்பில் தசா இருப்பு வருடம் சூரியன் வருடம் 02 மாதம் 10 நாள் 09 ஆகும். தற்போது குருதசாவில் புதன் புக்தி 27.07. 2013 முதல் 21.10. 2015 வரை நடப்பில் இருக்கும்.
அம்மா, தங்களின் மகனின் ஜாதகத்தில் அதிகாலையில் பிறந்ததாக இலக்கினம் குறிக்கப்பட்ட்டுள்ளது. ஆனால், நீங்கள் மாலையில் பிறந்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இச்சாதகத்தை திருக்கணித முறையில் மாற்றியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜாதகத்தில் இருப்பதைவிட இலக்கினமும், சில கிரகங்களும் மாறியுள்ளன.
மனைவியைக் குறிக்கும் இடமும், குடும்பத்தைக் குறிக்குமிடமும் சில பாவக்கிரகங்களால் பாதிப்படைந்துள்ளது. இது திருமணத்திற்கான காலக் கட்டம்தான். தன்னைவிட தகுதி குறைந்த இடத்தில் இருந்து, பெண்வர வாய்ப்புள்ளது. மேலும், சில விடயங்களுக்கு, என் அலைபேசியைத் தொடர்பு கொள்ளுங்கள்.
ஜாதகம்: 3.
பெயர்; ஸ்ரீதர் சென்னை. 27.11.1976 நேரம் காலை மணி 11.55 நிமிடம்.
கேள்வி;
ஐயா, நான் மீண்டும் தொழில் செய்யலாமா? என்பதை விபரமாகத் தெரிவிக்கவும்.
|
கேது
|
குரு வக்கி
|
|
இல
|
இராசி
|
|
சனி
|
சந்
|
|
||
சுக்கி
|
சூரி
புதன் செவ் மாந்
|
இராகு
|
|
பிறப்பு காலத்தில் செவ்வாய்திசா இருப்பு வருடம் 05 மாதம் 02 நாள் 01 ஆகும். தற்போது குருதசாவில் இராகு புக்தி 03.08.2015
வரை
இருக்கும்.
ஐயா, வணக்கம். நீங்கள் பல தொழில் மன்ன்ன் என்பதை, உங்கள் ஜாதகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. உங்களின் கோபத்தையும், ஆத்திரமான செயல்பாடுகளையும் முதலில் குறையுங்கள். உங்களின் தந்தையாரின் தொழிலைக் கவனித்து வந்ததன் மூலம் கடன் சுமை ஏற்பட்டிருக்கும். அதை இன்னும் சிலகாலங்கள் சுமந்துதான் தீரவேண்டும். அதன்பின் பிறருக்கு தொழில் துவங்க ஆலோசனைகள் வழங்கி, அதன் மூலம் வருமானம் ஈட்டலாம். காலம் கனியட்டும். நன்றி.
ஜாதகம்; 4
பெயர்; எம்.ஆர்.இரமேஷ். மதுரை. 09.10.1971 காலை மணி 10.40 நிமிடம் பிறப்பு.
கேள்வி;
என்னுடைய பூர்வீகச் சொத்துக்கள் எப்போது விற்பனையாகும். அதன் மூலம் என்னுடையக் கடன் யாவும் தீர்க்கப்படுமா?
|
|
சந் சனி வக்
|
|
|
இராசி
|
கேது
|
|
செவ் இரா
|
|
||
|
இல குரு
|
சுக் மாந்
|
சூரி புத
|
பிறப்பு காலத்தில் இருப்பு செவ்வாய்தசாவில்
வருடம்
05 மாதம்
00 நாள்
16 ஆகும்.
தற்போது
சனிதசாவில்
புதன்புக்தி
10.12.2015 வரை
நடக்கும்.
ஐயா, வணக்கம். தங்களின் ஜாதகத்தில் வக்கிர சனிப் பார்வையில் பூர்வீகாதிபதி குரு சிக்கியுள்ளார். தற்போது சனிதசா வேறு நடப்பில் உள்ளது. அதனால், தங்களின் சொத்துக்கள் கையைவிட்டுப் போகவே அதிகம் வாய்ப்புள்ளது. அதனால், விற்பனைக்கு ஏற்பாடுகள் செய்யுங்கள். இனிவரும் கோச்சாரக் கிரகங்களும் சாதகமான பலனைத் தரப்போவதில்லை. விரைவில் விற்பது நல்லது. நன்றி.
ஜாதகம்; 5
பெயர்; விஜயகுமார் சேலம். 20.04.1989 நேரம் மதியம் மணி 01.57 நிமிடம்.
கேள்வி;
ஐயா, நான் எம்.சி.ஏ முடித்துள்ளேன். எனக்கு வேலை வாய்ப்பு எப்போது அமையும். மேலும் ஜோதிடக் கலையின் மேல் ஆர்வம் ஏற்பட்டு அதைக் கற்று வருகிறேன். என்னாலும் பலன்கள் சொல்லமுடியுமா?
|
சூரி புத
சுக்
|
குரு
|
செவ் மாந்
|
இராகு
|
இராசி
|
|
|
|
கேது இலக்
|
||
சனி
|
|
|
சந்
|
பிறப்பு காலத்தில் இருப்பு செவ்வாய்தசாவில்
வருடம்
04. மாதம்
05 நாள்
16 ஆகும்.
தற்போது
குருதசாவில்
சனி
புக்தி
08.08.2013 இருந்து
06.02.2016 வரை நடக்கும்.
ஐயா, வணக்கம். தங்களுக்கு பணியிடம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், மற்றவர்கள் பார்வைக்குத் தென்படாத இடமாக, நீங்கள் வேலை பார்க்கும் இடம் இருக்கும். மேலும், ஜோதிடம் கற்பதைப் பற்றிய கேள்வி கேட்டு இருந்தீர்கள். இலக்கினத்திற்கு ஒன்பதில் சூரியன், புதன் இருப்பது ஜோதிட ஞானத்தைத் தரும். போதாக்குறைக்கு இரண்டுக்கு
உடையவர் புதனாகவே உள்ளார். ஆனால், ஜோதிட பலன் உரைக்கும் இடத்தில் உள்ள சந்திரன், ஜோதிடப்பலனை தீர்க்கமாகச் சொல்ல விடமாட்டார். சொல்லும் பலன் சரியாக இருக்குமோ, தவறாக இருக்குமோ என்கிற குழப்பத்தில், தெரிந்த பலனையும் தவறாகவே சொல்லவேண்டிவரும். அதனால், சொற்களை குழப்பமில்லாமல் பயன்படுத்துங்கள். அன்னை உஜ்ஜையினி மாகாளியை வணங்கி வாருங்கள். அவளருள் பெறுங்கள். நன்றி.
அனுப்பவேண்டிய முகவரி.
முத்துப்பிள்ளை,
4/7/1 வடக்கு
வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். 624 701 (அஞ்சல்)
ஆத்தூர்
வட்டம்
திண்டுக்கல். மாவட்டம்
கைபேசி. 91501 06069
|
No comments:
Post a Comment