Wednesday 22 July 2015

85. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?







நம்மில் பலர் திருமணம் முடிப்பதற்கு முன் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்வர். ஆனால், திருமணம் முடிந்து, ஒரு குழந்தை பிறந்த பின், அவர் மெல்ல மெல்ல தொழிலில் முன்னேறத் துவங்குவர். அதுவும் ஒரு கட்டத்தில்   செல்வநிலையில் உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டே திரும்பிப்பார்த்தால், அவர் நிற்கும் உயரம் வானாளவி நிற்கும். உங்களின் தொழில் வெற்றிக்கு காரணம் என்னவென்று யாராவது கேட்டால், என் மகளோ, மகனோ பிறந்த ராசி என்பார்கள். இதற்கு ஜோதிடரீதியான காரணம், என்னவென்றால்,

இலக்கினத்திற்கு ஒன்பதாமான தகப்பன் ஸ்தானத்தில், இரண்டுக்கு மேற்பட்ட சுபக்கிரகங்கள் அமர்ந்திருந்தால், அப்பனுக்கு வாழ்வு தப்பாமல் உயர்வைத் தரும், என்கிற தகவலுடன், உங்கள் …. 


86. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?

நம் மனம் இலயிப்புத்தன்மையுடன் இருந்தால் மட்டுமே, உடலும் நலமுடன் இருக்கும். ஒன்றை விட்டு மற்றொன்று, பலமிழந்தால், நாடி தளர்ந்தது போல் ஆகும். ஒரே சங்கிலியில் இணைக்கப்பட்ட இரண்டு கண்ணிகள் தான், உடலும், உள்ளமுமாகும்.

இலக்கினத்திதற்கு நான்காமிடம் என்பது, மனதையும், சுகத்தையும் ஒருங்கே சொல்லக்கூடிய இடமாகும். இங்கே சுபக்கிரகங்கள் கூட, ( வளர்பிறை சந்திரன், புதன், சுக்கிரன், குரு இவர்களில் இரண்டுக்கு மேற்பட்டக் கோள்கள் கூட) உடலும், உள்ளமும் நலமுடன் இருக்கும் என்கிற தகவலுடன்


 87. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?

நம் வாழ்க்கையின் ஏற்றம் உள்ள அளவுக்கு இறக்கமும் இருக்கும். இன்பத்தை துயித்துக் கொள்ளும் போதே, துன்பம் வாசலில் நிற்கிறது என்ற எதிர்பார்ப்பும் இருக்கவேண்டும்.

இலக்கினத்திற்கு நான்காமிடமான சுகவீட்டில் சுபக்கிரகங்கள் நின்றால், இன்பமான வாழ்வு அமையும் என்று, நேற்றுக் கண்டோம். அப்படியானால், சுகவீட்டில் பாவக்கிரகங்கள் நின்றால், ஏழ்மையும், வறுமையும், தன்னினத்தால் ஏச்சுப் பேச்சுக்கும் ஆளாக வேண்டும். அவர்களே நம்மை அற்பப்புழுவைப் பார்ப்பது போன்ற பார்வையையும் பார்ப்பார்கள் என்கிற தகவலுடன், உங்கள் …  


88. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?

தன் சிறுவயது பருவத்தில் இருந்து ஏழ்மையில் தவிக்கும் பெண்பிள்ளைகள், திருமணத்துக்குப் பின், தன் கணவனுடன் வாழ்கிற காலத்தில், சிறுகச்சிறுக வறுமை மாறி, உயர்ந்த நிலைக்கு செல்வதைப் பார்க்கிறோம்.

பெண்களின் ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சுபக்கிரகங்கள், ஏழாமிடத்தில் இருந்தால், தக் கணவனின் உழைப்பால், கல்வியால், மற்றும் திறமையால், இவளின் வறுமை நிலை மாறி வாழ்வின் உயர்ந்த நிலைக்கு செல்வாள் என்கிற தகவலுடன், உங்கள் …
#  அனைவருக்கும் காலை வணக்கம் #

91501 06069

No comments:

Post a Comment