Sunday 12 July 2015

66 இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா ?



66

நம்மில் சிலரிடம் வாய்ப் பேச்சுப்பேசி மீளமுடியாது. அவர்கள் கேட்கும் கேள்வியும், சொல்லும் பதிலும் திக்குமுக்காட வைத்துவிடும். வாதாடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். பலபேர் கூடிப்பேசும் சபையில், இவர் வாதாம் திறன்தான் எடுபடும். வழக்காடு மன்றங்களில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள அமைப்பாகும்.
இலக்கினத்திற்கு நான்கு, ஐந்து, ஏழு என்கிற இந்த மூன்று இடங்களிலும், புத்திக்காரன் புதனும், பிரமாண்ட மாயக்கோளான இராகுவும் கூடியிருக்க, பலவிதமான நுணுக்கங்களுடன் பேசி, வாதம் செய்வதில் வல்லவனாக இருப்பான் என்கிற தகவலுடன்


67-

நாமொரு ஜாதகத்தை ஆய்வு செய்யும் போது, இராசிக் கட்டங்களில் அமர்ந்துள்ள கிரகங்களையும், அவர் பெற்ற சாரத்தையும்,  அக்கிரகத்திற்கு வீடு கொடுத்த கிரகம் என்னநிலையில் உள்ளது, அவரோடு கூடியவர்கள் யார் என்றும் பார்த்து, அதன்பின் என்ன பலன் கூறலாம் என்று, நம் மனதுக்குள் தீர்மானித்து அதன்படி கூறுவோம் அல்லவா? சரி.
இலக்கினத்திற்கு நான்காமதிபதி எந்த வீட்டில் அமர்ந்துள்ளாரோ, அந்த வீட்டின் அதிபதி ஆட்சி பெற்றிருந்தால், ஒரு ஜாதகனுக்கு நன்மையைத்தானே செய்ய வேண்டும். அதற்கு மாறாக, தீமையை செய்கிறது. என்ன தீமை என்றால், அந்த வீட்டில் சூன்யம் இருக்கும் என்கிறார், சித்தர் ஒருவர். இவர் வார்த்தைகள் நடைமுறையிலும் சரியாகத்தான் உள்ளது என்கிற தகவலுடன்,

91501 06069 87548 73378

No comments:

Post a Comment