69-
உங்களின்
உள்ளம் எதை சிந்திக்கிறதோ, அதை முகம் மட்டுமே
பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. அகம் நிறைவாய் இருக்கும் போது, முகமும் எப்போதும்
அழகாகத்தான் இருக்கும்.
இலக்கினத்திற்கு
இரண்டாமிடம் முகத்தைக் குறிக்குமிடமாகும். இதன் அதிபதி இலக்கினக் கேந்திரங்களில் இருந்து,
நல்லக்கிரகப் பார்வையிலும் இருந்தால், அழகான முகம் அமைந்தவராக இருப்பார். இதுவே, இரண்டுக்குடையவன்
ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால், பிறர் கண்ணே பட்டுவிடும் அளவுக்கு அழகாய் இருப்பார்
என்கிற தகவலுடன்….
70-
கோள்களின்
சலனத்தில் தான் , நம் சுவாசமே சுழன்று கொண்டிருக்கிறது. நேர்த்தியாய் வடிவமைக்கப் பட்ட
இயந்திரத்தைப் போல, இந்த உலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இயக்கலுக்கும், இயங்கலுக்கும்
நெருங்கிய தொடர்பில் உலகம் உயிர் வாழ்கிறது. இயக்கும் சக்தியை இறைவன் என்றும் சொல்லலாம்.
நமக்கு மேலே ஒரு சக்தி என்றும் சொல்லலாம்.
சூழ்ரியன்
என்கிற இயக்கு சக்திக்கு, நான்கு, ஐந்து, ஒன்பது, பத்து இந்த இடங்களில் இயங்கு சக்திகளாக
சந்திரன், செவ்வாய், குரு ஆகிய மூவரும் கூடியிருந்தாலோ, அல்லது இவ்விடங்களில் தனித்தனியாக
இருந்தாலோ, தனக்கு கீழே இயங்குவதற்கான, பல வேலையாட்களையும், அரசுக்கு நிகரான வல்லமை
கொண்டவனாகவும் இருப்பான். இதே போல்தான் செவ்வாய்க்கு நான்கு, ஐந்து, ஒன்பது, பத்தினில்
சந்திரன், குரு, சூரியன் இருக்கவும், இதேபலன்கள் தான் நடக்கும் என்கிற தகவலுடன் உங்கள்
….
91501 06069 87548 73378
No comments:
Post a Comment