ஜாதகம்:1
பெயர்: எஸ்.
கார்த்திகேயன். 25.11.1977 வெள்ளிக்கிழமை.
காலை மணி
07.23 நிமிடம். சென்னையில் பிறப்பு.
கேள்வி: இது என்
மகனின் ஜாதகம்.
இவர்க்கு திருமணம்
எப்போது நிகழும்.
தற்போது கேஸ்
ஏஜென்சிஸி எடுத்து
நடத்திவருகிறான். அவனின்
எதிர்காலம் எப்படி
இருக்கும். கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள்.
கேது
|
|
சந்
|
குரு (வக்)
|
|
இராசி
|
செவ்
|
|
|
சனி
|
||
மா
|
இல
சூரி புத
|
சுக்கி
|
இராகு
|
பிறப்பில்
தசா இருப்பு.
சூரியன் மகாதசாவில்
வருடம் 03, மாதம் 06 நாள்01 ஆகும். தற்போது நடப்பில்,
இராகுதசாவில் சந்திரபுக்தி
11.11.2014 வரை இருக்கும்
அதற்குமேல் செவ்வாய்புக்தி
24.11.2015 வரை நடப்பில்
இருக்கும்.
வணக்கம் திரு
சாய்ராம் அவர்களே! உங்களின் மகனின் ஜாதகத்தில், இலக்கினம் விருச்சிகம், இராசி இரிஷபம்.
நட்சத்திரம் கார்த்திகை ஆகும். மனைவியைத்தரும் ஸ்தானாதிபதியும், காரகனும் சுக்கிரனாகவே இருந்து, அவர்
தனக்கு முன்னும் பாவக்கிரகங்கள் மத்தியில் சிக்கியுள்ளார். மனைவியைக் குறிக்கும் இடமான ஏழாமிடத்தில் சந்திரனும், எட்டில் வக்கிரக் குருவும் உள்ளதால், திருமணம் காலதாமதமாகிறது. தற்போது ஏழில் இருக்கும் சந்திரனே புக்தியை நடத்துவதால், மதுரை
மீனாட்சி அம்மனை வழிபட
திருமணம் கைகூடும். தன்னிலும் அழகிலும், வசதியிலும் தாழ்ந்த பெண்ணை
மணமுடிக்க வாழ்க்கை சிறக்கும்.
தொழில்காரகன் சனி பத்தில் இருக்க, நிலையில்லாமல் அடிக்கடி தொழில் மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். தற்போது துவங்கியுள்ள கேஸ் ஏஜென்ஸிஸ் நன்றாகவே இயங்கும். வாயுப்புத்திரனை வழிபடுங்கள் வழிபிறக்கும்.
ஜாதகம்:2
பெயர்: காயத்ரி.
சென்னை. 22.01.1983 சனிக்கிழமை.
முன்னிரவு மணி
07.30 நிமிடம்.
கேள்வி: ஐயா,
திருமணம் முடிந்து
நான்குவருடங்கள் ஆகிவிட்டன.
நானும் மருத்துவமனைகளிலும் பார்த்துதான் வருகிறோம் ஆனால்,
இதுவரை புத்திரப்பாக்கியம் கிட்டவில்லை. ஜோதிடத்தின் மேலுள்ள
நம்பிக்கையால் உங்களிடம்
கேட்கிறோம். எங்களுக்கு
பாக்கியம் கிட்டுமா?
|
சந்தி
|
|
இராகு
|
செவ்
|
இராசி
|
இல
|
|
சூரி சுக்
|
|
||
புத(வ)கேது
|
குரு
|
சனி மா
|
|
பிறப்பில்தசா
இருப்பு கேது
தசா வருடம்
00 மாதம் 03 நாள் 20 ஆகும். தற்போது நடப்பில் சந்திர
தசாவில் சனிபுக்தி
27.09.2014 வரை அதற்கு
மேல்19.02.2016 வரை
புதன்புக்தி நடப்பில்
இருக்கும்
இலக்கினம் கடகம். இராசி
மேஷம். நட்சத்திரம் அசுவினி ஆகும். உங்களின் ஜென்மலக்கினத்திற்கு ஐந்தாமிடத்திலே, புத்திரகாரகன் குரு
இருப்பதால், அந்த
புத்திரபாவகத்தை நாசப்படுத்தி விட்டார். மேலும்,
காரகக்கிரகமான குருவுக்கு முன்பின்ராசிகளில் பாவக்கிரகங்களான சனி,கேது
நிற்கவும் புத்திரபாக்கியம் தடைபடும் அமைப்பாகும். இன்னும் சொல்ல
வேண்டும் என்றால்,
உங்களின் ஜென்ம லக்கினத்துக்கு விரையாதிபதி புதன் வக்கிரன் பெற்று பின்னோக்கி சுழல்வதால் குருவோடு இணைத்துத்தான் பலன்கள் நடக்கும்.
இப்போது விரையாதிபதி குருவோடு கூட, கருவும் விரையமாகும். இதற்கு “ கருகாத்த அம்மனை” வழிபட, தடைபட்டு நிற்கிற புத்திரபாக்கியம் கிட்டும்.
ஜாதகம்:3.
பெயர்: இரமேஷ்.
09.10.1071 சனிக்கிழமை
காலைமணி.10.40 நிமிடத்திற்குப் பிறப்பு.
கேள்வி: எங்களுடைய சொத்து
எப்போது விற்பனைக்கு
வரும்? கடன்கள் முழுமையாகத் தீர்க்கப்படுமா?
விளக்கமாகப் பதில்
கூறுங்கள்.
|
|
சந் சனி
|
|
|
இராசி
|
கேது
|
|
செவ் இரா
|
|
||
|
இல
குரு
|
சுக்கி
மாந்
|
சூரி புத
|
பிறப்பில்
தசாபுக்தி இருப்பு.
செவ்வாய் தசாவில்
வருடம் 05 மாதம் 00 நாள் 10 ஆகும். தற்போது, சனிதசாவில்
04.12.2015 வரை புதன்புக்தி
நடப்பில் இருக்கும்.
உங்களின் இலக்கினம் விருச்சிகம். இராசி
இரிஷபம். நட்சத்திரம்,
மிருகசீரிடம். உங்களின் அசையும் மற்றும் அசையா
சொத்துக்களையும், மூதாதையர் சம்பாதித்த சொத்துக்களைப் பற்றியும், நான்காமிடத்தைக் கொண்டு
அறிந்து விடலாம்.
இந்த நான்காமிடத்தின் அதிபதி
சனியாகும். இந்த
சொத்துக்களை பூர்வபுண்ணியம் இருந்தால் மட்டுமே அனுபவிக்கமுடியும். உங்களின் பூர்வ புண்ணியாதிபதி குருவாக இருக்கிறார்.
சொத்துக்கதிபதி சனி, அதை
அனுபவிக்கும் குருவும் ஒருவரையொருவர் ஏழாம்பார்வையாகப் பார்த்துக் கொள்கின்றனர். இது
சொத்தை மட்டும் குறிப்பிடுகிறது என்றால், அது
தவறு. உங்களின் ஜீவன், உங்களின் கர்மாவைக் காண்கிறது என்றும், உங்கள்
கர்மா, உங்கள்
ஜீவனைப் பிரியாமல் அதாவது குறையாமல் பார்த்துக் கொள்கிறது என்றும் அர்த்தம்.
இப்போது கர்மாவைக் குறைத்தால், அதாவது சொத்தை
இழந்தால், ஜீவனை
கர்மாவிலிருந்து விடுபட வைக்கலாம்.
உங்கள் மூதாதையரின் சொத்தை விற்கும் காலம்தான். மனதை
அடக்கினால் (சந்திரன்),
ஜீவன்(குரு)
கர்மாவின்(சனி)
பிடியில் இருந்து விடுபடமுடியும்.
குடந்தை அருகில் உள்ள திருவிடைமருதூர் எனும் திருத்தலத்தில்,
நுழைவுவாசலில் உள்ளே சென்று,
இறைவனை தரிசித்துவிட்டு, மறுவாசல் வெளியே வரவும். இதனால்,
பிரம்மஹத்திதோஷம் நிவர்த்தியாகும்.
ஜாதகம்:4
பெயர்:ஆர்.கே.
மகேந்திரபாபு. 14.03.1976 ஞாயிற்றுக்கிழமை சென்னை.
கேள்வி: எனக்கு
திருமணம் காலதாமதமாகிறது.
என் ஜாதகத்தில்
ஏதேனும் பாதகங்கள்
உண்டா? இருப்பின் அதற்கான பரிகாரங்களைக்
கூறுங்கள்.
சூரி
|
குரு
கேது
|
|
செவ்வா
|
புத சுக்கி
|
இராசி
|
இல
சனி(வக்)
|
|
|
சந்
மாந்
|
||
|
|
இரா
|
|
பிறப்பில்
இருப்பு கேதுதசா
வருடம் 03 மாதம் 06 நாள் 05 ஆகும். தற்போது சந்திரதசாவில்
சுக்கிரப்புக்தி 14.09.2014 வரை
நடக்கும். அதன்பிறகு சூரியபுக்தி 13.03.2015 வரை
நடக்கும்.
உங்களின் இலக்கினம் கடகம். இராசி
சிம்மம். நட்சத்திரம் மகம். களத்திரஸ்தானாதிபதியெனும் மனைவியைத் தரும் சனி
வக்கிர நிலையில் உள்ளார். மேலும் களத்திரகாரகன் சுக்கிரன் எட்டில் விரையாதிபதியுடன் கூடியுள்ளதால், வந்த
வரனெல்லாம் விரையமாகிப் போய்விடும். தற்போது திருமணகாலம்தான் நடக்கிறது. நீங்கள் திண்டுக்கல் அருகிலுள்ள செளந்தர்ராஜபெருமாள் கோவிலில் “இரதிமன்மதன்”
க்கு அபிஷேகமும்,
“சக்கரத்தாழ்வார்” சன்னதியில் ஆராதனையும் செய்ய, குறைகள் யாவும் தீரும். மேலும்,
சனிதோஷமும் உள்ளதால், அருள்மிகு ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்ரஹ யோக
ஆஞ்சநேயர் திருத்தலத்தில் வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள்,
குங்குமம், தாலிச்சரடு,
பூச்சரம் முதலியனவைகளை வெள்ளி அன்று
வழங்க நினைத்த நன்மையே நடக்கும்.
ஜாதகம்:5
பெயர்: ஸ்ரீதர்.
27.11.1976 சென்னை. சனிக்கிழமை. காலை மணி
11.55 நிமிடத்திற்கு பிறப்பு.
கேள்வி: ஐயா,
வணக்கம். நான்
மீண்டும் தொழில்
துவங்கலாமா? விரிவான
பலன்களை தாருங்கள்.
|
கேது
|
குரு (வக்)
|
|
இல
|
இராசி
|
சனி
|
|
சந்
|
|
||
சுக்கி
|
சூரி
புத செவ் மாந்
|
இராகு
|
|
பிறப்பில்
தசா இருப்பு.
செவ்வாய் வருடம்
05. மாதம் 01 நாள் 26 ஆகும். தற்போது குருதசாவில் 28.07.2015 வரை இராகு
புக்தி நடந்துவரும்.
வணக்கம். உங்களின் இலக்கினம் கும்பம். இராசி
மகாம், நட்சத்திரம் அவிட்டம். உங்கள் ஜாதகத்தில் ஜீவனகாரகன் சனியுடன், சூரியன்,
செவ்வாய், புதன்
தொடர்பு கொண்டிருப்பதால், உங்கள்
தொழில் திறமையின் மேலுள்ள நிர்வாகக் கண்டிப்பால், பல
கூட்டாளிகளை எதிரிகளாக உருவாக்கிக் கொள்வீர்கள். அந்த
பிடிவாதக் குணத்தை மாற்றுங்கள்.
கோள்சாரம் எல்லாம் சாதகமாகவே உள்ளது. நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.
தொழில் துவங்குங்கள்.
கூட்டுத் தொழில் வேண்டாம்.
இறைவனை தொழுங்கள்.
நல்லதே நடக்கும்.
அனுப்பவேண்டிய முகவரி.
முத்துப்பிள்ளை,
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். 624 701 (அஞ்சல்)
ஆத்தூர் வட்டம்
திண்டுக்கல். மாவட்டம்
கைபேசி. 91501
06069
No comments:
Post a Comment