இந்த
மனிதகுலத்தில் எல்லோரும் ஒரேவிதமான செயல்பாடுகள் கொண்டவர்களாக இருக்கமுடியாது. இந்த
நிலைதான் எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும். பிறகு ஏன் மனிதனைப் பற்றி மட்டும் இவ்வளவு
விமர்சனங்கள் ஏற்படுகின்றன. காரணம், மனிதன் மட்டுமே சிந்திக்கிறான். வெவ்வேறு கோணங்களில்
செயல்படுகிறான். தனக்கென்று மொழியையும், கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் வைத்துக்
கொண்டு, தன்போக்கில் வாழ்கிறான். அதனால், அவனை இறைவனின் விருப்பப் படைப்பு என்று வேதங்கள்
சொல்கின்றன. இவ்வளவு உயரியப் படைப்பான மனிதன்
எல்லா நிலைகளிலும் உன்னதமான நிலையில் அல்லவா? இருக்கவேண்டும். ஆனால், அப்படி இருப்பதில்லையே. நூறு சதவீதம் பூர்த்தியான
மனநிலையில் எந்த மனிதனும் இருப்பதில்லை. மனக்குழப்பங்களும், சிந்தனை தடுமாற்றங்களும்,
புத்திப் பேதலிப்பும், மனிதனுக்குள் உள்ள குறைபாடுகளை சொல்லி மாளாது. இதற்கு ஜோதிடம் கூறும் காரணம் தான் என்ன? அதையும்
பார்ப்போம்.
தேய்பிறை மந்தனோடு சேர்ந்துமே வாடி
நொந்து
தோய்ந்திட விரயம் வந்தோர் சுபகுரு
பார்வை இன்றேல்
தூயமனத் திறம் இழந்து சொல்குழப்ப
சிந்தையாலே
பேய்ப்பிடித்து அலைவர் போலப் பித்தராய்த்
திரிவராமே!
இலக்கினத்திற்கு பனிரெண்டாமிடத்தில்
அதாவது சயன வீட்டில் தேய்பிறை சந்திரனோடு, சனி கூட, சுபக்கிரகமான குரு அவர்களைக் காணாவிடில்,
ஜாதகன் பேய்பிசாசு பீடித்தவன் போல, பித்துப் பிடித்தவனாய் அலைவான். இன்னும் வரும்.
முத்துப்பிள்ளை.
91501 06069, 91506 65878
விதிகளும்
விளக்கங்களும் .. . 6
இந்த பதிவு முந்தையயப் பதிவின் தொடர்ச்சிதான். மனக்குழப்பத்தால்
ஏற்படும் பேதலிப்பைச் சுட்டிக்காட்டும் பாடல்தான்.
கூறப்பா செவ்வாய் ஏழில் குடிபுக
ஆசான் ஏகி
சேரப்பா லக்கினத்தில் தெளிவிலா
புத்தி என்றே
யாரப்பா உயிரில் மந்தன் ஏழினில்
செவ்வாய் நிற்க
தேரப்பா மதிமயங்கித் திரிந்திடல்
ஆகு மன்றோ
எந்த மனிதனுக்கு பாதிப்பைத் தரும்
நிலையில் இலக்கினமும், அதன் அதிபதியும் இருக்கக்
கூடாது. காரணம், இவைகள் புனிதமானவை. அந்த மனிதனின் கர்மச் செயல்களின்படி, இறப்பு காலம்வரை
வழிநடத்திச் செல்வதாகும். அதனால், இப்பாடலின் கருத்துப்படி, அறிவின் விழிப்பைப் தரும்
கிரகமான குரு, இலக்கினத்தில் நிற்க, அவசரமும், மூர்க்கத்தனமும் கொண்ட செவ்வாய் ஏழில்
நிற்க, இருவரும் பார்வை பரிவர்த்தனை செய்து கொண்டால், அறிவுக்கும், அவசரத்திற்கும்
நடக்கும் போட்டியில், அறிவு திணறி செயல்படாமல், ஜாதகன் புத்தி பேதலிப்பார்.
அதேபோல்
இலக்கினம் என்பது தலைப்பகுதியைக் குறிக்கும். அதனுள் இருக்கும் மூளையின் செயல்பாட்டிற்கும்,
இலக்கினமே காரணம். அந்த இடத்தில் மிகவும் மந்தநிலையில் சுழலும் கிரகமான சனியும், ஏழாமிடத்தினில் நல்லதோ, கெட்டதோ துரிதமாய் செயல்படும்
செவ்வாயும் நின்று, பார்வை பரிவர்த்தனை செய்தால் புத்தி பேதலித்து வருத்தத்திற்கு ஆட்படுவார்.
கார்க்கேயர் நாடி எனும் அற்புத ஜோதிட நூலை வாசிக்கும் பெரும்பேற்றைப் பெற்றேன். அதில் சில பாடல்கள் என்னை பிரமிக்கவைத்தன. அதில் ஒன்றிரண்டை உங்களோடு பகிர்ந்து வருகிறேன். நான் பெற்ற இன்பத்தை நீங்களும் அனுபவிக்க, உங்கள் பார்வைக்கு…….
விதிகளும்
விளக்கங்களும் .. . 7
நேசித்த ஏழின் கோட்போய்
நிற்க ஆறெட்டீராறில்,
காசித்த பாவர் ஏழில்
கலந்திட நோக்குங்காலே
யோசித்த ஸ்ரீ இல்லானாம்.
இலக்கினத்திற்கு ஏழிற்குடையக்கோள் 6,8,12 ல் அமர்ந்திருக்க, மனைவியைத்தரும் ஏழாமிடத்தில் பாவக்கோள்கள் இருக்க, ஜாதகனுக்கு, திருமணம் முடிந்து மனைவியாக யாரும் வரமாட்டாள். அவனுக்கு பெண் கிடைப்பது கடினம் என்கிறார். மேலும்,
உறைத்த ஏழுடையோன்வெள்ளி
தேசித்த பாவராசி
தெகிட்டிடாக் காமியாமே.
இலக்கினத்திற்கு ஏழுக்குடையக் கோளும், சுக்கிரனும் கூடி பாவக்கோள்களின் வீட்டினில் அமர, ஜாதகன் காமக்கடலில் நீந்திக்கொண்டே இருப்பான். கரையேறவே மாட்டான். விரித்த பாயை மடக்கிவைக்கவே மாட்டான். அடங்காத ஆசை கொண்டவன். என்கிறார். கார்க்கேயர் முனிவர்.
விதிகளும்
விளக்கங்களும் .. . 8
பொன் உறையும் வேத புராணம் ஆகமம் தனக்கு
முன் உறையும் அத்தி முகவன் அது
பொன்னடியைத் தோத்தரிப்போம் இங்கு நாம்
சோதிடமாம் வீமகவி சாத்திரத்தை முற்றிலும் ஓத.
இந்து மதம் என்பது வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கிய வழிபாட்டுக்குரிய இராஜ கோபுரமாகும். இக் கோபுரத்தின் கருவறையே இறைவன் உறையுமிடமாகும். இந்த இராஜகோபுரம் ரிக் யஜூர், சாமம், அதர்வணம், எனும் நான்கு வேதங்களை அடித்தளமாக்கி, அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள புனிதகோபுரமாகும். இக்கோபுரத்தின் நுழைவு வாயிலாக, நான்கு வேதங்களை உள்ளடக்கிய ஞானமும், கர்மாவும் உள்ளது. அடித்தளமான வேதத்தின் மேல் பதினெட்டுப் புராணங்கள் மண்டபங்களாக அமைந்துள்ளன.
1.இலைங்கம் 2. காந்தம் 3. கூர்மம் 4. சைவம் 5. பிரமாண்டம் 6.பெடிகம் 7. மச்சியம் 8.மார்க்கண்டேயம் 9. வராகம் 10. வாமனம் 11.காகுடம் 12. காரதீபம் 13. பாகவதம் 14. வைணவம் 15.பதுரம் 16.தருமம் 17. ஆக்கினேயம் 18பிரமகைவர்த்தம் ஆகும்
இந்த
பதினெட்டு
மண்டபங்களில்
சிவபுராண
மண்டபங்கள்
பத்தும் , வைணவ புராணமண்டபங்கள் ஆறும், பிரம்ம புராணமண்டபங்கள் ஒன்றும், அக்னி புராணமண்டபங்கள் ஒன்றுமாகக் கட்டி எழுப்பப்பட்டுள்ளன.
இந்த பதினெட்டு புராண மண்டபங்களும், உலகம் தோன்றியது முதல் இந்நாள் வரைக்கும் உருவான பஞ்சலட்சணங்களின் தத்துவத்தில் தான் உருவாகி உள்ளது.
1.பழங்கதை 2. பூர்வம் 3. உலகத்தோற்றம் 4.கேடுகளை அறிவித்தல் 5.மந்வத் அந்தரம் ஆகிய பஞ்சலட்சணத்தில் உருவாகி உள்ளன
‘ஆகமம்’எனும் இரு பெரும் பிரகாரங்களை உள்ளடக்கியதாய் இருபெரும் சந்நிதிகளாய் மந்திரக்கலையும், தந்திரக்கலையும் உள்ளன. மேலும், வேதங்களின் அங்கங்களான 1. நிருத்தம் 2.சிக்ஷை 3.கற்பம் 4.வியாகரணம் 5.சந்தோபிசிதம் 6.சோதிடம் ஆகிய ஆறும் ஆதிபகவானை துதித்துப்போற்றும் அர்ச்சனை மந்திரங்களாகும்.
இவ்வளவு
சிறப்பு
மிகுந்த
இந்துமதத்
தத்துவத்தின்
முழுமுதல்
நாயகனான
ஓங்கார
வடிவுடைய ‘ஆகமன்’ வினைதீர்க்கும் பெருமானின் பொன்னடியை வீமகவி எனும் ஜோதிட அர்ச்சனை மந்திரத்தால் முற்றிலும் ஓதுவோமே!
நேற்று (07.01.2015) அன்று காஞ்சிபுரம் கூடுவாஞ்சேரியில் இருந்து, தவத்திரு. ஆசிரியர் மாருதிதாசன் அவர்கள் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர்க்காக கம்பராமாயணப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அதை உங்களுடன் இலக்கியச்சுவையுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அறிந்து காப்பான்.
இப்பாடல்
கம்ப
இராமாயணம். பாலகாண்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இதன்
அர்த்தம்
என்னவென்றால்,,
1.ஆகாயம், 2.காற்று, 3.நெருப்பு, 4.நீர், 5.நிலம் என்கிற ஐம்பூதங்களில் ஒன்றான, காற்று தேவனால் மாருதி என்று அன்புடன் அழைக்கப்படும் அனுமன் பெற்றெடுக்கப்பட்டு, ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாயவெளி வழியாய் பறந்து, ஐம்பூதங்களில் ஒன்றான நீரைக் கடந்து, ஐம்பூதங்களில் ஒன்றான தென்னிலங்கை நிலத்தை,
இராமபிரானின்
மனைவியான
சீதையைக்
காக்க, ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்து எரித்த, அந்த அனுமன், எம் செயல் இனிதே முடிய கருணையோடு காப்பானாக என்று பாடியுள்ளார். அதையே நானும் விளைகிறேன்.
“ பொருந்திய
ஏழின் கோளும்
புண்ணிய வாக்கின்
கோளும்
நெருங்கிய பாபராக
நேமித்த இரண்டு
பேரும்
இருந்திட ஏழில்
தானே”
இதுவும் ஒரு பழைய தமிழ் ஜோதிடப் பாடாகும்.
இலக்கினத்திற்கு
இரண்டாமதியும், ஆறாமதியும் பாவரோடு கூடினாலும், அல்லது பாவர்களின் சாரம் பெற்று ஏழாமிடத்தினில்
இருந்தாலும், இந்த அமைப்புடைய ஜாதகர்க்கு, “கட்டுக் கடங்காத காமம்” மிகுந்தவனாக இருப்பான்.
இந்த அமைப்பு
ஏழில் மட்டுமல்ல, இரண்டில் இருந்தாலும், காமம் மிகுந்தவனாக இருப்பான்.
முத்துப்பிள்ளை.
91501 06069, 91506 65878
No comments:
Post a Comment