பாரம்பர்ய ஜோதிடத்தின் சூட்சுமப்
பாடல்கள்;1
--------------- உயிர்க்கு
ஆறோனும்
நாமே கேள் மூன்றோனும் ஒரு ராசியிலேறி
நல்லுறவு இல்லாமல் பகையோடே
கூடில்
ஓமே இந்திரசாலம் மயேந்திரசாலம்
ஓகோ கோவவனுக்கே பலிதமாமே.
இலக்கினத்திற்கு ஆறுக்குடையவனும்,
மூன்றுக்குடையவனும், ஒரு ராசியில் ஏறி நின்று, ஒன்றுக்கொன்று உறவில்லாமல் பகையுடன்
கூட, இந்திரஜாலம், மகேந்திரஜாலம் எல்லாம் கற்று தெளிந்து இருப்பான்.
சித்தனும், யோகியும் யார்?
பாரம்பர்ய ஜோதிடத்தின் சூட்சுமப்
பாடல்கள்; 2
லிக்க உயிர்க்குத் தசத்தோன்
நாலோன் ஓர்ராசியில்
பாங்குடனே தாமிருக்க
அவனுடனே மைந்தா
கெலிக்க சந்திரன் அல்லது
சுக்கிரன் ஆவதிருக்க
கேள்மகனே! அந்தவீடு நட்பு
ஆட்சியாக
வலுக்கவே அதிகவித்தை
கற்று மகுத்துவனாய்
மாற்ற சித்தன் என ஒருவர்
கண்களிலே காணான்.
இலக்கினத்திற்கு பத்துக்குடைய
கோளும், நான்குக்குடையக் கோளும் ஒருராசியில் இருக்க, அவருடன் சந்திரனோ, அல்லது சுக்கிரனோ
உடனிருக்க, அந்த வீடு நட்பு, ஆட்சியாக இருக்க, இதுபோன்ற ஜாதக வலுவுடையவன் எல்லா கலைகளையும்
கற்று மகத்துவம் மிக்கவனாகவும், சித்தனாகவும், எவருடைய கண்பார்வைகளிலும் சிக்காதவனாகவும்
இருப்பான்.
சித்தனும், யோகியும் யார்?
பாரம்பர்ய ஜோதிடத்தின் சூட்சுமப்
பாடல்கள்; 3
சொலிக்கவே உயிரோனும்
நாலோனும் கூடி
சுகமுடனே ஒன்பதிலே பிலத்திருக்க
அவரை புதன் அல்லது வியாழம்
பெருமையுடன் பார்க்க,
அன்றிக் கூடிருக்க
வலுத்த பாதாள அஞ்சன வித்தை
கற்பான்.
இலக்கினதிபதியும், நான்காமதிபதியும்
ஒன்பதாமிடத்தினில் பலத்திருக்க, இவர்களை புதனோ அல்லது வியாழக்கோளோ பார்க்க, ஜாதகன்
பாதாள அஞ்சன வித்தை எனும் அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றான மறைந்திருக்கும் பொருளை
அறிந்து சொல்லும் கலை கற்பான்.
சித்தனும், யோகியும்
யார்?
பாரம்பர்ய ஜோதிடத்தின் சூட்சுமப்
பாடல்கள்; 4.
மகிழும் உயிருக்கு நாலோனும்
ராசியோனும்
சொலித்து பத்தினில் இருக்க
மதிபார்க்கப்பட
சுகமுடனே கூடியிருக்க
ஆகரணம் கோகரணமும்
தலத்துடனே பலிதம் இன்னம்
நவிலக்கேளு.
இலக்கினத்திற்கு நான்கின்
அதிபதியும், சந்திரன் நிற்கும் இராசிக்கு அதிபதியும் ஒன்றாய் கூடி பத்தாமிடத்தினில்
இருக்க, இவர்களை சந்திரன் பார்த்தாலும், அல்லது கூடியே நின்றாலும் ஆகர்ணம் எனும் ஏவல்,
தேவதைகளை அனுப்பி மனமயக்கச் செய்தலையும், கோகர்ணம் எனும் அடுத்தவர் செல்வங்களை கவர
வழி வகுக்கம் செயலையும் செய்வான் என்கிறார்.
91501 06069
No comments:
Post a Comment