96.
நம்மில் சிலர்
செய்யும் ஈனத்தனமான செயல்களை தட்டிக்கேட்டாலும், உணர்வதில்லை. கண்மூடித்தனமாக நியாயப்படுத்தி,
தன்னை எதிர்ப்பாளர்களை நிர்மூலபடுத்தவே முயற்சி செய்கின்றன. ஆனால், இறைசக்தியை தவிர
மற்றொன்றாலும் முடியாது என்பது ஏன்? புரிவதில்லை.
இலக்கினத்திற்கு
இரண்டுக்குடையவன் பாவிகளுடன் கூடி, பனிரெண்டில் இருக்கவும், ஆறுக்குடையக்கோள் உச்சமடையவும்
பெற்ற ஜாதகர், தன் கீழ்த்தரமான எண்ணங்களாலும், செய்கைகளாலும் ஈனத்தனமாய் வாழ்வான் என்கிற
தகவலுடன், உங்கள்
97.
இந்த பூவுலகில்
தோன்றிய ஜீவன்களையும் மனிதர்களையும் ஈவிரக்கமற்று கொலை செய்வதையும், அவரின் உடமைகளை
சூறையாடுவதையும், மற்றும் தன்னுடைய சுயநன்மைக்காக பொய்பேசி ஆதாயமும் தேடுவதையும், இன்றும்
கண்கூடாக பார்த்து வருகிறோம்.
ஒருவரின் உயிரைப்
பறிப்பது மட்டும் கொலையல்ல. அவரின் சிந்தனையை, ஆற்றலை சிதைப்பதும்கூட, கொலைதானே!.
இலக்கினத்திற்கு
இரண்டு, பதினொன்றுக்குரியவர்கள், இரண்டிலே இருந்து, ஒன்பதாமதிபதி பார்வையால் தொடர்பு
கொள்ள, நான்குக்குரியவர்கள் மூன்றிலே அமர, பிறரை கொலையும் செய்வார். அவரின் உடமைகளை
தனதாக்கிக் கொள்வார் என்கிற தகவலுடன், உங்கள் …
9150106069
No comments:
Post a Comment