Tuesday 28 October 2014

மந்திரமும்…கோலமும். புதன்.

                   
இன்று  புதனைப்பற்றி அறிந்து கொள்வோம்உங்கள் ஜாதகத்தில்  புதன் இருக்கும் நிலையில்என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம்அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.

 சூரியனிலிருந்து சில கிரகங்கள் பிரிந்து சென்றனஅதேபோல்பிரிந்து சென்ற கிரகத்திடம் இருந்துசில கிரகங்கள் பிரிந்து சென்றனஅந்த வரிசையில்பூமியிடமிருந்துசந்திரன் பிரிந்து சென்றதுசந்திரனிடமிருந்து புதன் பிரிந்ததுஅதனால்புதனுக்கு சந்திரன் தந்தையாகிறான்.

சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதால்அதிக வெப்பத்தால் தகிக்கும் கிரகமாகும்சுக்கிரனைவிட மிக வேகமாகசூரியனை சுற்றிவருவார்மற்ற கிரகங்களை கண்ணால் காண்பதைப்பொலபுதனை நாம் காணமுடியாதுஏனெனில்சூரியனுக்கு மிக அருகில்   சுற்றிவருவதால்சூரிய பேரொளியில் புதன் மறைந்தே போய்விடும்.  

சூரியனை சுற்றிவருவதில் மிகவேகமாக இருப்பதால்சுறுசுறுப்புக்கும்ஒருசெயலை விரைந்து முடிப்பதற்கும்,  இளைஞர்களுக்கும்குழந்தைகளுக்கும் புதனே காரகனாகும்புத்திகூர்மைசமயோசித சிந்தனைகல்வியில் சிறந்து விளங்குபவர்கள்நடுநிலை தருபவர்கள்சமாதான தூதுவர்கள்கணிதம்புள்ளிவிபரம்காவியம்சிற்பம்மாணவர்கள்விகடகவிநிபுணர்கள்பலமொழி கற்றவர்கள்ஒரு விடயத்தை சரியாக திட்டமிடல்சாணக்கியத்தனம்,வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்புதுமையை விரும்பும் நபர்கள்வியாபாரிகள்ஜோதிடர்தூதுவர்கள்ஒரேநேரத்தில் பல செயல்களைச் செய்பவர்தசாவதானிநரம்பு மண்டலம்உணர்வுபுலன்கள்உறவுமுறையில் மாமன்பொது அறிவுதவணைமுறைநுட்பமான பொருட்கள்,  ஒப்பந்தம்நிபுணத்துவம்பலகுரலில் பேசுபவர் முதலிய புத்திசாலித்தனமான செயல்கள் அனைத்திற்கும் புதனே காரகனாவார்.

பொதுவாக ஆண்,பெண் இருபாலர் ஜாதகங்களில் மாமனை அறியவைக்கும் கிரகம் புதன்தான்தன்னுடைய குழந்தையின் ஜாதகத்தை வைத்தேதன் உடன்பிறந்த சகோதரங்களைஅதாவது,  மாமன்வர்க்கத்தை அறிந்துகொள்வதில்பெண்களுக்கு இணை பெண்கள்தான்தன் குழந்தையை முன்னிட்டுதன் வீட்டில் நடக்கப்பொகும்காதுகுத்துசடங்கு முதல் கல்யாணச் செய்முறைவரைவிருந்துவிசேடங்களென அனைத்து நல்லக்காரியங்களுக்கும்குடும்பத்துடன் இருந்து சிறப்பிக்கக்கூடியமிகப்பெரிய உறவே மாமன் உறவுதான்தன் சகோதரியின் இறப்புகாலத்தில் அறுப்புக்கோடி போடும்வரை இணைத்துப்பிடித்து இருக்கும் உறவுக்கு சொந்தக்காரனே புதன்தான்.
இந்த உறவு நிலைத்திருக்க வேண்டுமென்றால்புதன் ஒருவரின் ஜாதகத்தில் நல்லநிலையில் இருக்க வேண்டும்.ம்.  இலக்கினத்திற்கு மறைவு ஸ்தானங்களான, 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கக்கூடாதுபகைநீசம் பெறக்கூடாதுநீசமடைந்த மற்றக்கிரகங்களுடனும் கூடக்கூடாதுமேலும்,  யாருடைய ஜாதகத்திலும் தேய்பிறை சந்திரக்கிரகத்துடன் புதன் இணைந்திருக்கக் கூடாதுஇலக்கினத்திற்கு ஐந்தாமிடத்தில் இராகுகேதுசனி கூட மாமன் உறவு பாதிக்கும்அதேபோல்ஐந்தாமிடத்தின் அதிபதி பகைநீசம்பெறவோநீசம்பெற்ற கிரகத்துடன் கூடவோ கூடாதுஇது போன்ற அமைப்புடைய ஜாதகிகள் தங்கள் சகோதர உறவை கெடுத்துக்கொள்ளாத சூழலை உருவாக்கிக் கொள்ளவும்.

புதனும்சூரியனும் நட்புக்கிரகமாகும்இவர்கள் 1, 2, 4, 5, 7, 8, 12 கூடினால்கெட்டபலன்களே நடத்தித்தருவர். 3, 6, 9, 10, 11 கூட நல்லபலன்களே நடக்கும்.
புதன் சந்திரனுடன் பகைபெற்ற கிரகமாகும்.  இவர்கள் 3, 6, 8, 12 ல்கூடமிகக் கொடுமையான பலன்களே நடக்கும்மற்ற இடங்களில் கூடகெடுபலன்கள் குறைவாக நடக்கும்.

புதனும் செவ்வாயும்சமக்கிரகமாகும்இவர்கள் கூடினால் என்னபலன் என்பதைசெவ்வாயைப்பற்றிய கட்டுரையில் அறிந்துகொள்ளுங்கள்.
 புதனும்குருவும் சமக்கிரகமாகும்இவர்கள் 1, 2, 4, 5, 6, 9, 10, 11, கூடினால் மிக நல்லபலன்களே ஏற்படும்ஆனால்,3, 7, 8, 12 கூடினால்மிகவும் கெட்டபலன்களே நடக்கும்.

புதனும்சுக்கிரனும் நட்புக்கிரகமாகும்.  இவர்கள்1, 2, 4, 5, 6, 7, 9, 10, 11, மிகவும் நல்லபலன்களே நடக்கும்ஆனால்,    3, 8, 12 கூடினால்மிகவும் கெட்டபலன்களே நடக்கும்.

புதனும்சனியும் சமக்கிரகமாகும்இவர்கள், 1, 2, 4, 5, 6, 7, 8, 12 ல்கூடியிருக்க கேடான பலன்களே நடக்கும். 3, 9, 10, 11ல் கூட நல்லபலன்களே நடக்கும்.

உங்களில் யாரும்  மேடம்கடகம்விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களாக இருந்தால்உங்களுக்கு புதன் அதிக பாவத்தைச் செய்யும் கிரகமாக இருக்கும்.

புதனுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும்யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும்,    புதனைப்பற்றி அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள்இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலேஉங்கள் ஜாதகத்தில்       புதன்  எங்கே உள்ளது என்பதை அறிந்துஇங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும்கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.

வீடு வாசலை சுத்தம் செய்தபின்குளித்து முடித்து      புதன்  கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை     புதனுக்குரிய ஓரையான    புதன்  ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும்.  ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.(   வியாழக் கிழமை என்றால்  வியாழ ஓரையாருடைய ஜாதகத்தில் வலுக் குறைந்த புதன் உள்ளாரோ அவர் மட்டும்பூஜைநேரத்தில்    பச்சைநிற வேட்டியோசேலையோஅணிந்து கொண்டுஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய்பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டுபஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும்.

சார்ட்அட்டையில்  புதனுக்காக  வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல் பச்சைபயறு மாவினால் பூஜையறையிலோவழிபாட்டுத்தளத்திலோகால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும்மேலும்,     பித்தளைத்தகட்டில்,  குதிரைநரிபோல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும்தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்துஅதில் இடுவதற்காக   கற்பூரத்தை  எடுத்து வைத்துக் கொள்ளவும்பின்னர் புளியோதரையைநாம் இதுவரை புலங்காதபயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும்.
    புதனின் அதிதேவதையான   விஷ்ணுவின் படத்தையும்அதனருகில்  நாயுருவி செடியையும்     மந்திரக்கோலமருகில்  வைக்கவும்.
                     
புதன்

புந்திவலி சேரப் புரிவான்பொன் மேனியினான்
சந்திரன்சேய் வாள்பரிசை தாங்குகதை-உந்துகையான்
வெம்புசிங்க ஊர்தியான் மேனான் இளைதழுவும்
அம்புதன்என் றோதும் அவன்.

புதன் துதி.

 மதனநூல் நான்குமறை புகர் கல்வி ஞானம்
விதமுடன் அவர் வாக்கு விஞ்சைகள் அருள்வோன்திங்கள்
சுதன் பசு பாரி பாக்கியம் சுகம்பல் கொடுக்க வல்லான்
புதன்கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி!! போற்றி!!

அபிராம் அந்தாதி.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளேஅருளேஉமையே இயமத்
தன்றும் பிறந்தவளேஅழியாமுத்தி     ஆனந்தமே!                                                     .10.   
வருந்தா வகை என்மனத்தாமரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாகஇனியெனக்குப்
பொருந்தொரு பொருள் இல்லைவிண்மேவும் புலவர்க்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே!                                                  .90.


புதன்கிழமையன்று ஒருவேளை உணவாக பலசுவையுடன்   சமைக்கப்பட்ட உணவையும்மறுவேளை  தனிபாசிப்பயறை அவித்துதாளித்து   உணவாக்கிக்கொள்ளதங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது மனமுறுகி  மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல்பார்த்துக் கொண்டேஎத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டு தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் புதபகவானே!    என  புதனின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்கபனிபோல் பிறவித்துன்பம் விலகும்.

 உங்களின் ஜென்ம நட்சத்திரம்  புதன் சாரம் பெற்றிருந்தால்அதாவது ஆயில்யம்கேட்டைரேவதி என இந்த மூன்றில் ஒன்றுஜென்ம நட்சத்திரமாக இருந்தால்அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும்அது ஆயில்யத்தில்   பிறந்திருந்தால்  புன்னைமரத்தையும்,  கேட்டையில் பிறந்திருந்தால்பிராய்மரத்தையும்,  ரேவதியில் பிறந்திருந்தால்இலுப்பைமரத்தையும் நட்டுபராமரித்துவந்தால்,  புதனால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.

இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில்  புதன் இருந்தால்பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம்இது மட்டுமல்ல . புதன் மீனத்தில்          நீசம் பெற்றிருந்த அமைப்பையுடையவர்களும்இலக்கினத்துக்கு3, 6, 8, 12ல் புதன் மறைந்துள்ளவர்களும்இலக்கினாதிபதிக்கு3, 6, 8, 12ல்    புதன்  மறைந்து உள்ளவர்களும்,  பாவியானசந்திரனுடன் கூடிய  புதன்எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும்இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லதுபுதன் தசைபுதன் புக்தி,  அல்லது   புதன் அந்தரம்இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும்புதன் தசையோபுதன் புக்தியோ நடப்பில் இருப்பவர்களோஅல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும்இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும்சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.


வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர்அஞ்சல்.624 701
 ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.




No comments:

Post a Comment