இன்று புதனைப்பற்றி அறிந்து கொள்வோம். உங்கள் ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலையில், என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம். அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.
சூரியனிலிருந்து சில கிரகங்கள் பிரிந்து சென்றன. அதேபோல், பிரிந்து சென்ற கிரகத்திடம் இருந்து, சில கிரகங்கள் பிரிந்து சென்றன. அந்த வரிசையில், பூமியிடமிருந்து, சந்திரன் பிரிந்து சென்றது. சந்திரனிடமிருந்து புதன் பிரிந்தது. அதனால், புதனுக்கு சந்திரன் தந்தையாகிறான்.
சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதால், அதிக வெப்பத்தால் தகிக்கும் கிரகமாகும். சுக்கிரனைவிட மிக வேகமாக, சூரியனை சுற்றிவருவார். மற்ற கிரகங்களை கண்ணால் காண்பதைப்பொல, புதனை நாம் காணமுடியாது. ஏனெனில், சூரியனுக்கு மிக அருகில் சுற்றிவருவதால், சூரிய பேரொளியில் புதன் மறைந்தே போய்விடும்.
சூரியனை சுற்றிவருவதில் மிகவேகமாக இருப்பதால், சுறுசுறுப்புக்கும், ஒருசெயலை விரைந்து முடிப்பதற்கும், இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் புதனே காரகனாகும். புத்திகூர்மை, சமயோசித சிந்தனை, கல்வியில் சிறந்து விளங்குபவர்கள், நடுநிலை தருபவர்கள், சமாதான தூதுவர்கள், கணிதம், புள்ளிவிபரம், காவியம், சிற்பம், மாணவர்கள், விகடகவி, நிபுணர்கள், பலமொழி கற்றவர்கள், ஒரு விடயத்தை சரியாக திட்டமிடல், சாணக்கியத்தனம்,வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்பவர், புதுமையை விரும்பும் நபர்கள், வியாபாரிகள், ஜோதிடர், தூதுவர்கள், ஒரேநேரத்தில் பல செயல்களைச் செய்பவர், தசாவதானி, நரம்பு மண்டலம், உணர்வுபுலன்கள், உறவுமுறையில் மாமன், பொது அறிவு, தவணைமுறை, நுட்பமான பொருட்கள், ஒப்பந்தம், நிபுணத்துவம், பலகுரலில் பேசுபவர் முதலிய புத்திசாலித்தனமான செயல்கள் அனைத்திற்கும் புதனே காரகனாவார்.
பொதுவாக ஆண்,பெண் இருபாலர் ஜாதகங்களில் மாமனை அறியவைக்கும் கிரகம் புதன்தான். தன்னுடைய குழந்தையின் ஜாதகத்தை வைத்தே, தன் உடன்பிறந்த சகோதரங்களை, அதாவது, மாமன்வர்க்கத்தை அறிந்துகொள்வதில், பெண்களுக்கு இணை பெண்கள்தான். தன் குழந்தையை முன்னிட்டு, தன் வீட்டில் நடக்கப்பொகும், காதுகுத்து, சடங்கு முதல் கல்யாணச் செய்முறைவரை, விருந்து, விசேடங்களென அனைத்து நல்லக்காரியங்களுக்கும், குடும்பத்துடன் இருந்து சிறப்பிக்கக்கூடிய, மிகப்பெரிய உறவே மாமன் உறவுதான். தன் சகோதரியின் இறப்புகாலத்தில் அறுப்புக்கோடி போடும்வரை இணைத்துப்பிடித்து இருக்கும் உறவுக்கு சொந்தக்காரனே புதன்தான்.
இந்த உறவு நிலைத்திருக்க வேண்டுமென்றால், புதன் ஒருவரின் ஜாதகத்தில் நல்லநிலையில் இருக்க வேண்டும்.ம். இலக்கினத்திற்கு மறைவு ஸ்தானங்களான, 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கக்கூடாது. பகை, நீசம் பெறக்கூடாது. நீசமடைந்த மற்றக்கிரகங்களுடனும் கூடக்கூடாது. மேலும், யாருடைய ஜாதகத்திலும் தேய்பிறை சந்திரக்கிரகத்துடன் புதன் இணைந்திருக்கக் கூடாது. இலக்கினத்திற்கு ஐந்தாமிடத்தில் இராகு, கேது, சனி கூட மாமன் உறவு பாதிக்கும். அதேபோல், ஐந்தாமிடத்தின் அதிபதி பகை, நீசம்பெறவோ, நீசம்பெற்ற கிரகத்துடன் கூடவோ கூடாது. இது போன்ற அமைப்புடைய ஜாதகிகள் தங்கள் சகோதர உறவை கெடுத்துக்கொள்ளாத சூழலை உருவாக்கிக் கொள்ளவும்.
புதனும், சூரியனும் நட்புக்கிரகமாகும். இவர்கள் 1, 2, 4, 5, 7, 8, 12 கூடினால், கெட்டபலன்களே நடத்தித்தருவர். 3, 6, 9, 10, 11 கூட நல்லபலன்களே நடக்கும்.
புதன் சந்திரனுடன் பகைபெற்ற கிரகமாகும். இவர்கள் 3, 6, 8, 12 ல்கூட, மிகக் கொடுமையான பலன்களே நடக்கும். மற்ற இடங்களில் கூட, கெடுபலன்கள் குறைவாக நடக்கும்.
புதனும் செவ்வாயும், சமக்கிரகமாகும். இவர்கள் கூடினால் என்னபலன் என்பதை, செவ்வாயைப்பற்றிய கட்டுரையில் அறிந்துகொள்ளுங்கள்.
புதனும், குருவும் சமக்கிரகமாகும். இவர்கள் 1, 2, 4, 5, 6, 9, 10, 11, கூடினால் மிக நல்லபலன்களே ஏற்படும். ஆனால்,3, 7, 8, 12 கூடினால், மிகவும் கெட்டபலன்களே நடக்கும்.
புதனும், சுக்கிரனும் நட்புக்கிரகமாகும். இவர்கள்1, 2, 4, 5, 6, 7, 9, 10, 11, மிகவும் நல்லபலன்களே நடக்கும். ஆனால், 3, 8, 12 கூடினால், மிகவும் கெட்டபலன்களே நடக்கும்.
புதனும், சனியும் சமக்கிரகமாகும். இவர்கள், 1, 2, 4, 5, 6, 7, 8, 12 ல்கூடியிருக்க கேடான பலன்களே நடக்கும். 3, 9, 10, 11ல் கூட நல்லபலன்களே நடக்கும்.
உங்களில் யாரும் மேடம், கடகம், விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களாக இருந்தால், உங்களுக்கு புதன் அதிக பாவத்தைச் செய்யும் கிரகமாக இருக்கும்.
புதனுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும், யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும், புதனைப்பற்றி அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள். இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலே, உங்கள் ஜாதகத்தில் புதன் எங்கே உள்ளது என்பதை அறிந்து, இங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும், கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.
வீடு வாசலை சுத்தம் செய்தபின், குளித்து முடித்து புதன் கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை புதனுக்குரிய ஓரையான புதன் ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும். ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.( வியாழக் கிழமை என்றால் வியாழ ஓரை) யாருடைய ஜாதகத்தில் வலுக் குறைந்த புதன் உள்ளாரோ அவர் மட்டும், பூஜைநேரத்தில் பச்சைநிற வேட்டியோ, சேலையோ, அணிந்து கொண்டு, ஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய், பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டு, பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும்.
சார்ட்அட்டையில் புதனுக்காக வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல் பச்சைபயறு மாவினால் பூஜையறையிலோ, வழிபாட்டுத்தளத்திலோ, கால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும். மேலும், பித்தளைத்தகட்டில், குதிரை, நரிபோல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக கற்பூரத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் புளியோதரையை, நாம் இதுவரை புலங்காத, பயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும்.
புதனின் அதிதேவதையான விஷ்ணுவின் படத்தையும், அதனருகில் நாயுருவி செடியையும் மந்திரக்கோலமருகில் வைக்கவும்.
சார்ட்அட்டையில் புதனுக்காக வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல் பச்சைபயறு மாவினால் பூஜையறையிலோ, வழிபாட்டுத்தளத்திலோ, கால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும். மேலும், பித்தளைத்தகட்டில், குதிரை, நரிபோல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக கற்பூரத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் புளியோதரையை, நாம் இதுவரை புலங்காத, பயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும்.
புதனின் அதிதேவதையான விஷ்ணுவின் படத்தையும், அதனருகில் நாயுருவி செடியையும் மந்திரக்கோலமருகில் வைக்கவும்.
புதன்
புந்திவலி சேரப் புரிவான்பொன் மேனியினான்
சந்திரன்சேய் வாள்பரிசை தாங்குகதை-உந்துகையான்
வெம்புசிங்க ஊர்தியான் மேனான் இளைதழுவும்
அம்புதன்என் றோதும் அவன்.
புதன் துதி.
மதனநூல் நான்குமறை புகர் கல்வி ஞானம்
விதமுடன் அவர் வாக்கு விஞ்சைகள் அருள்வோன்திங்கள்
சுதன் பசு பாரி பாக்கியம் சுகம்பல் கொடுக்க வல்லான்
புதன்கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி!! போற்றி!!
அபிராம் அந்தாதி.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே இயமத்
தன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே! .10.
வருந்தா வகை என்மனத்தாமரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக; இனியெனக்குப்
பொருந்தொரு பொருள் இல்லை; விண்மேவும் புலவர்க்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே! .90.
புதன்கிழமையன்று ஒருவேளை உணவாக பலசுவையுடன் சமைக்கப்பட்ட உணவையும், மறுவேளை தனிபாசிப்பயறை அவித்து, தாளித்து உணவாக்கிக்கொள்ள, தங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது மனமுறுகி மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல், பார்த்துக் கொண்டே, எத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டு தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் புதபகவானே! என புதனின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்க, பனிபோல் பிறவித்துன்பம் விலகும்.
உங்களின் ஜென்ம நட்சத்திரம் புதன் சாரம் பெற்றிருந்தால், அதாவது ஆயில்யம், கேட்டை, ரேவதி என இந்த மூன்றில் ஒன்று, ஜென்ம நட்சத்திரமாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும். அது ஆயில்யத்தில் பிறந்திருந்தால் புன்னைமரத்தையும், கேட்டையில் பிறந்திருந்தால், பிராய்மரத்தையும், ரேவதியில் பிறந்திருந்தால், இலுப்பைமரத்தையும் நட்டு, பராமரித்துவந்தால், புதனால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.
இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் புதன் இருந்தால், பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம். இது மட்டுமல்ல . புதன் மீனத்தில் நீசம் பெற்றிருந்த அமைப்பையுடையவர்களும், இலக்கினத்துக்கு3, 6, 8, 12ல் புதன் மறைந்துள்ளவர்களும், இலக்கினாதிபதிக்கு3, 6, 8, 12ல் புதன் மறைந்து உள்ளவர்களும், பாவியான, சந்திரனுடன் கூடிய புதன், எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும், இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது. புதன் தசை, புதன் புக்தி, அல்லது புதன் அந்தரம், இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும், புதன் தசையோ, புதன் புக்தியோ நடப்பில் இருப்பவர்களோ, அல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும், சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். அஞ்சல்.624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.
No comments:
Post a Comment