Wednesday 29 October 2014

மந்திரமும்…கோலமும். இராகு .

இன்று   இராகுவைப்பற்றி அறிந்து கொள்வோம்உங்கள் ஜாதகத்தில்  இராகு இருக்கும் நிலையில்என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம்அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.சூரியன் நிலையாய் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும்போதுமற்ற எல்லா கிரகங்களும் தன்னைத் தானே இடமிருந்துவலமாகஅதாவதுமேற்கிலிருந்துகிழக்காக சுற்றிக் கொண்டுசூரியனை சுற்றி வருகின்றன.

 ஆனால் சுக்கிரன் மட்டும் கிழக்கிலிருந்து மேற்காக தன்னைத்தானே சுற்றி கொண்டுமற்ற கிரகங்களைப் போல் சூரியனை சுற்றி வருகிறதுஇதேபோல் இராகுவும்கேதுவும் கடிகார எதிர் மறைசுற்றாக சுற்றாக சூரியனை சுற்றி வருகின்றன.


இராகு கேது என்றும்கிரகங்களுக்கான பதவி தந்து அழைக்கும்இவைகள் வாயுக்கோளமோபாறைகளாலான கோளமோ அல்லமாறாகநிழலாலான திரள்தான்இராகு கருமை கூடிய கரும் நிழலைப் போன்றதுகேது எனக் கூறப்படுவது செம்மை கலந்த நிழலைப் போன்றது.

பூமி சூரியனை  சுற்றிவரும் போதுஒரு நீள்வட்டப் பாதையொன்றுஅதேபோல்சந்திரன் பூமியை சுற்றி வரும் போதும்ஒரு நீள்வட்ட பாதையொன்றும் உண்டாகும்இந்த இரண்டு நீள்வட்டப் பாதைகளும்ஒன்றையொன்று இரண்டு இடங்களில் வெட்டிக்கொள்ளும்இந்த இரண்டு வெட்டுப் புள்ளிகள் தான் இராகுகேது என்றழைக்கப்படும் நிழல் கிரகங்கள்.   இவை இரண்டு துருவங்களின் வெட்டுப் புள்ளிகளாகும்பூமியின் வடதுருவ வெட்டுப்புள்ளியின் நிழல்கேது என்றும்பூமியின் தென்துருவ வெட்டுப்புள்ளியின் நிழல்இராகு என்றும் அழைக்கப் படுகிறது.


ஜோதிடத்தில் இராகுகேதுவை சாயாக்கிரகங்கள் என்றும்மாயக்கிரகங்கள் என்றும் அழைக்கிறார்கள்இவர்கள் எந்த ராசியில் கூடுகிறார்களோஅந்த ராசியை தன்னுடைய ராசியாக பாவித்துஇந்த ராசியின் அதிபதியின் வலிவுக்குத் தகுந்தாற் போல்பலனைத் தருகிறது.


சூரியசந்திரன்செவ்வாய் தான் பகைபெற்ற கிரகங்களாகும்இராகுகேது எந்தவீட்டில் அமர்ந்துள்ளார்களோஅந்த வீட்டின் அதிபதிகளும்சூரியசந்திரனுக்கு பகைப்பெற்ற கிரகங்கள் ஆகும்சூரியசந்திரனுக்கு நட்புக்கிரகமாகவே இருந்தாலும்இராகுகேதுக்களுக்கு வீடு கொடுத்த ஒரே காரணத்தால்பகைபெற்ற கிரகமாய் ஆகிவிடும்.


இராகு சனியைப்பொன்ற காரகங்களைக் கொண்டவன்அவனின் தசாகாலமும் சனியைப்போலவே ஏறத்தாழ பதினெட்டு வருடங்களாகும்எல்லாவித விஷங்களுக்கும்விஷமான உணவுக்கும்ஆவிகள்பேய்பிசாசுமாந்திரீகம்செய்வினைமதுபோதைகூட்டுச்சாவுமலட்டுத்தன்மைஓரின சேர்க்கைஇரத்த உறவுகளுக்குள் தகாத பாலின தொடர்புவெளிநாடுஅன்னிய மதம்அன்னிய மொழிபோட்டோசினிமாமின்சாரம்பெருந்திருட்டு,  கூட்டுக்கொள்ளைகடல்கொள்ளைஆட்கடத்தல்சதிசிறைச்சாலைசுவாசம்அலர்ஜிதடிப்புகள்ஏற்றுமதிஇறக்குமதி,  மிகைப்படுத்துதல்மோசடிவித்தைகள்புற்றுநோய்தந்தைவழி பாட்டா,பாட்டிமுதலிய காரகங்களைக் குறிக்கிறது.
மனிதர்களின் பாபபுண்ணியங்களுக்குத் தகுந்தது போலநிழலாய் பின் தொடர்ந்துஇராகு,கேதுக்கள் பலன் தருகின்றன.

இராகுகேதுவுடன் கூடினால்தான்,  சூரியசந்திரர்கள் தங்கள் பலத்தை இழக்கிறார்கள் என்பதில்லைஇவர்களின் சாரம்பெற்ற நட்சத்திரத்தில் இருந்தாலும்பலம் இழந்தவர்களாய் இருப்பார்கள்.


ஒரு மனிதன் தன்வாழ்வில் இராகுவின்தசையையோகேதுவின் தசையையோ கடத்தியவனாக இருந்தால்அவன் வாழ்வில்மிகபெரிய சம்பவம் ஒன்று நடந்து இருக்கும்அந்த சம்பவம் அவன் வாழ்வை புரட்டியே போட்டிருக்கும்அவன் வாழ்வை தடம்மாற்றிய நிகழ்வை நினைத்து,  நினைத்து காலத்திற்கும் கலக்கம் மிகுந்தவனாகவே இருப்பான்.


ஞானக்காரகன் கேதுவானதால்இலக்கினத்துக்கு பனிரெண்டாமிடம் எனும் மோட்சஸ்தானத்தில் கேது நின்றால்ஜாதகர்க்கு மறுபிறவியே கிடையாது என்பார்கள்மோட்சநிலையை அடைய கேதுபனிரெண்டில் நின்றால் மட்டும் போதுமாஅதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டுமா?  வேண்டாமாஎன்பதையும் கொஞ்சம் வாசகர்கள் சிந்திக்க வேண்டும்.


பொதுவாக இராகு தசையை நடப்பில்  உள்ளவர்களாகவோகடத்தியவர்களாகவோ இருந்தாலும்புக்தியைநடப்பில் உள்ளவர்களாகவோகடத்தியவர்களாகவோ இருந்தாலும்அவர்களுக்கு நடக்கும் கடுமையான பலன்களை அனுபவிக்க முடியாமல்தங்களுக்கு பில்லிசூன்யமோதுர்தேவதைகளை வைத்து மாந்திரீக வேலையோமருந்தோமாயமோ செய்துவிட்டதாகவே கலங்கி  அலைவார்கள்இந்த பிரச்சனையை திர்ப்பதற்காக அதிக பொருட்செலவு செய்வர்.


இராகுகேதுகள் எந்த ஸ்தானத்தில் நின்றுள்ளார்களோஅந்த வீட்டின் அதிபதிகள்அந்த வீட்டிற்கு கேந்திரம்(1,4,7,10) பெறவேண்டும்அப்படி கேந்திரம் பெற்றால்அந்த ஸ்தானத்திற்குண்டான பலன்கள் பெருமளவு கிட்டிவிடும்மாறாகமறைவுஸ்தானமானங்களில்(6,8,12) இருந்தால்துன்பமான பலன்களே நடக்கும்.


இராகுகேதுகளின் சாரம்பெறும் எந்தகிரகமும்தங்களின் சுய பலத்தை இழந்துவிட்டுஅந்த கிரகங்களின் கட்டுப்பாட்டில் தான் பலன்களை வழங்குகின்றனகாரணம்கூட்டுக் கிரகங்களின் செயல்பாட்டில்இராகுவுக்குதான் பலம் அதிகம்.    அதைவிட கேதுவுக்கு பலம் அதிகம்.


சூரியனுடன் இணையும் எந்த கிரகங்களும் அஸ்தங்கம் அடைந்துவிடும்ஆனால்இராகுகேதுகள் அஸ்தங்கம் அடையாதுமாறாகஇவர்களுடன் இணையும் சூரியன் கிரகண தோஷத்தை அடைவான்சூரியனை விட இராகு பலவான் ஆகும்.


நவக்கிரகங்களின் வரிசையில் புதனைவிட செவ்வாய் வலிவானவன்.செவ்வாயை விட சனி வலிவானவன்சனியை விட குரு வலிவானவன்குருவை விட சுக்கிரன்   வலிவானவன்.  சுக்கிரனை விட சந்திரன் வலிவானவன்சந்திரனை விட சூரியன் வலுவானவன்சூரியனை விட இராகு வலிவானவன்இராகுவை விட கேது வலிவானவன்இது நவக்கிரகங்களின் பலத்தை  அடிப்படையாக வைத்து நம் முன்னோர்கள் பிரித்துள்ளதாகும்.


புதன்செவ்வாய்சனிகுருசுக்கிரன் இந்த ஐந்தும்   கிரகங்கள் ஆகும்இந்த கிரகங்களை விடபூமியின்  துணைக்கிரகமான சந்திரன் வலுவானவன்இந்த துணைக்கிரகத்தை விடநட்சத்திரமாக அடையாளம் காணப்பட்ட சூரியன் வலுவானவன்அந்த நட்சத்திரத்தை விட மாயக்கிரகங்களான நிழல்கள் வலுவானது என்றால்அண்டமும்பேரண்டமும் மாயம் என்றும்ஒன்றுமில்லாதது என்றும்நமக்கு ஏதோவொன்றை உணர்த்துவதாகவே புலப்படுகிறது.
            எப்போதுமே சூரியகிரகணம் அமாவாசையில் தான் ஏற்படும்சூரியன்சந்திரனுடன் இராகு அல்லது கேது கூடி இருக்கும் சமயத்தில் தான் கிரகணங்கள் ஏற்படும்பூமிசந்திரன்சூரியன் ஒரே நேர்கோட்டில் அமைய சூரியகிரகணம் ஏற்படும்.

எப்போதுமே சந்திரகிரகணம் பெளர்ணமியில் தான் ஏற்படும்சூரியன்சந்திரன் இரண்டும் ஒன்றுக்கொன்று ஏழில் நிற்கஇரண்டு கிரகத்துடன் இராகுகேது கூடியிருக்கும் சமயத்தில் தான் கிரகணம் ஏற்படும்சந்திரன் – பூமிசூரியன்ஒரே நேர் கோட்டில் அமைய சந்திர கிரகணம் ஏற்படும்.  


சூரியகிரகணத்தில் பிறந்தவர்கள் சூரியகிரகத்தின் காரகம் அனைத்தையும் இழந்துவிடுவார்கள்மேலும்சூரியன் எந்த பாவகத்தில் அமர்ந்துள்ளாரோஅந்த பாவகத்தின் காரகாங்களையும் இழப்பார்இதேபோல்சந்திரகிரகணத்தில் பிறந்தவர்கள்சந்திரகிரகத்தின் காரகம் அனைத்தையும் இழந்துவிடுவார்கள்மேலும்சந்திரன் எந்த பாவகத்தில் அமர்ந்துள்ளாரோஅந்த பாவகத்தின் காரகங்களையும் இழப்பார்.


இராகுவுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும்யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும்,  இராகுவைப்பற்றி அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள்இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலேஉங்கள் ஜாதகத்தில் இராகு எங்கே உள்ளது என்பதை அறிந்துஇங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும்கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.


இராகுகேதுக்களுக்கு வாரநாட்களில் இடம்தரவில்லைஅஷ்டவர்க்க கணிதத்திலும் பரல்கள் ஒதுக்கப்படவில்லைகாரணம்இவையிரண்டும் மாயக்கிரகங்கள் என்பதால்நிழல்களுக்கு தனியாக இயங்கும் தன்மை இருக்காது என்பதை அடிப்படையாகக் கொண்டு வாரநாட்களில் பங்கோஅஷ்டவர்க்கக் கணிதத்தில் பரல்களோ ஒதுக்கப்படவில்லைஅதனால்இராகு தன் தசாகாலத்தை சனியின் தசாகாலமான 19 வருடத்தைப்போலதன் தசாகாலத்தை 18 வருடமாக தருகிறான்மேலும்சனியைப்போலவே கர்மபலனை அனுசரித்துதனக்கு அதிகாரம் கிடைக்கும் காலங்களில் தன் தீர்ப்பை தயங்காமல் வழங்குகிறான்அதனால்இராகுதசாபுக்தி,அந்தரம் நடப்பில் உள்ளவர்களும்இராகுவால் பாதிக்கப்பட்டவர்களும்,  (இராகுவுக்கான ஸ்தானபலன்கள் என்னவென்பதைகெதுவோடு காண்போம்.)  சனிக்கிழமையன்றுமந்திரத்தையும்,சுலோகத்தையும் பாடி வணங்கலாம்.


வீடு வாசலை சுத்தம் செய்தபின்குளித்து முடித்து   சனிக்        கிழமை காலையில் 6.00மணிமுதல் 7.00வரை        சனிக்குரிய ஓரையான  சனி ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும்.  ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்இங்கே இராகுவுக்கு என்று தனிக்கிழமைகள் வருவதில்லை என்பதால் சனியைப்போல்கர்மாவின் வினைப்பலன் போல் பலன்தரும் சனி ஆளும்  சனிக் கிழமை அன்றுயாருடைய ஜாதகத்தில் வலுக்குறைந்த இராகு உள்ளாரோ அவர் மட்டும்பூஜைநேரத்தில்       கருப்புநிற வேட்டியோசேலையோஅணிந்து கொண்டுஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய்பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டுபஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும்சார்ட் அட்டையில் இராகுவுக்காக  வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல்  உளுந்தமாவைப் பொடிசெய்து       பூஜை அறையிலோவழிபாட்டுத்தளத்திலோகால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும்.

மேலும்,பாம்பு போல் கருங்கல்லில் வரைந்தஅல்லதுசெதுக்கியத்தை மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும்தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்துஅதில் இடுவதற்காக கடுகைப்பொடியை எடுத்து வைத்துக் கொள்ளவும்பின்னர் உளுந்த சாதத்தைநாம் இதுவரை புலங்காதபயன்படுத்தாத தட்டில் நிவேதனப் படையலாக வைக்கவும்.

    இராகுவின் அதிதேவதையான  காலன்  படத்தையும்அதனருகில் அறுகம் புல்லையும் மந்திரக் கோலம் அருகில்  வைக்கவும்.
சனிக்கிழமையன்று ஒருவேளை உணவாக உளுந்து கலந்த இட்லியோமறுவேளை உளுந்தம்களிஉளுந்தம்வடையை   உணவாக்கிக் கொள்ளதங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.


இப்போது மனமுறுகி  மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல்பார்த்துக் கொண்டேஎத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டு தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய்       இராகுபகவானே!    என  இராகுவின்     துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்கபனிபோல் பிறவித்துன்பம் விலகும்.
இராகுகரவின் அமுதுண்டான்கார்நிறத்தான்மேனிஅரவம் முகம்அமரன் ஆனான்மருவுமுறம்ஆகும் இருக்கையன்அஞ்சுதகு தோற்றத்தான்,
ராகுநிழல் கோளென் றிசை.
                 

இராகு துதி.
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்பாகுசேர்  மொழியாள் பங்கண் பரன் கையில் மீண்டு பெற்றராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய்ரட்சிப்பாயே!!

அபிராமி அந்தாதி.
சித்தியும் சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பராசத்தியும் சத்தி தழைக்கும் சிவனும் தவமுயல்வார்.
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே! 29.
 நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்சசாயகி சாம்பவி சங்கரி சாமனை சதிநச்சுவாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்(று)
ஆயகி யாதி உடையாள் சரணம் அரண்நமக்கே!     50.
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலாவயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றேசெயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவாரே! 77.
உங்களின் ஜென்ம நட்சத்திரம் இராகு சாரம் பெற்றிருந்தால்அதாவது 

திருவாதிரைசுவாதிசதயம்என இந்த மூன்றில் ஒன்றுஜென்ம நட்சத்திரமாக இருந்தால்அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும்அது திருவாதிரையில்   பிறந்திருந்தால்       செங்கரு மரத்தையும்சுவாதியில் பிறந்திருந்தால்மருத  மரத்தையும்சதயம்  பிறந்திருந்தால்,   கடம்பு மரத்தையும்,     நட்டுபராமரித்துவந்தால்,  இராகுவால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.


 இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் இராகு இருந்தால்பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம்இது மட்டுமல்லஇரிடபத்தில் நீசம் பெற்ற   அமைப்பையுடையவர்களும்இலக்கினத்துக்கு  8, 12 ல் இராகு மறைந்துள்ளவர்களும்இலக்கினாதிபதிக்கு 8, 12 ல் இராகு மறைந்து உள்ளவர்களும்,  பாவியானசூரியன்சந்திரன்செவ்வாயுடன் கூடியஇராகு எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும்இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லதுஇராகு தசைஇராகு புக்தி,அல்லது இராகு அந்தரம்இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும்,   இராகு தசையோ,   இராகு புக்தியோ நடப்பில் இருப்பவர்களோஅல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும்இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும்சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர்அஞ்சல்.624 701
 ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.
                    

No comments:

Post a Comment