Tuesday 28 October 2014

மந்திரமும்…கோலமும். செவ்வாய்.

                
இன்று செவ்வாயைப்பற்றி அறிந்து கொள்வோம்உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலையில்என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம்அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.
பூமியிலிருந்து சந்திரன் பிரிந்து சென்றதைப்போலசெவ்வாயும் பிரிந்து சென்ற கிரகமாகும்பூமியில் என்ன விதமான தட்பவெப்பநிலை உள்ளதோஅதேபோன்ற தட்ப வெப்ப நிலை செவ்வாயிலும் உள்ளதுபூமியின் நிலத்தைப் போன்ற அமைப்பேசெவ்வாயில் நிலவுகிறது.    மேலும்பூமிக்கு மிக நெருங்கிய உறவுக்கிரகமான செவ்வாய்நமக்கெல்லாம் சகோதரனாக இருப்பதில் ஆச்சர்யமில்லைஏனென்றால்நாம் பூமாதேவியின் குழந்தைகள் அல்லவாஅதேபோல்செவ்வாய் கிரகமும்சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியிலிருந்து பிரிந்து வான்வெளியில் இயங்கிவருவதால்செவ்வாயின் தாயான பூமியேநமக்கும் தாயாக இருப்பதால்நமக்கு செவ்வாய் சகோதரன்தானே.  
 எல்லா மானுட ஜீவன்களுக்கும் வெற்றியைத்தருபவன்.  இவன் ஆண் வடிவத்தையும்,  தாமஸக் குணத்தையும் கொண்டவன்.  செம்பு உலோகத்தையும்,  அவருடைய ரத்தினங்களாக பவளத்தையும் கொண்டவன்., இவன் சூடிக்கொள்ளும் மலர் செண்பகம் என்பதால்இவன்  நிறம் செம்மையாகும்இவன் வாகனம் சேவல்செம்போத்துஅன்னமாகும்சத்திரியர் இனத்தைச்சேர்ந்தவர்இவரை போர் குணமிக்கவரென வேதம் சொல்கிறது.  இவன் திசை தெற்கு.  இவன் சேனாதிபதி.  இவன் எலும்பு மஜ்ஜையை குறிப்பவன்.

   இவன் பித்தத்தை குறிப்பவன்இவன் குள்ள வடிவினன்இவன் அதிதேவதை சுப்பிரமணியன்பிரத்யதி தேவதை பூமாதேவியாகும்.
காலி நிலம்அசையா சொத்துக்கள்கரடுமுரடான பாறைகள்மலைகள்ஒழுங்கற்ற நிலப்பரப்புகள்ஆயுதங்கள்கூர்மையான பொருட்கள்சண்டையிடுதல்சச்சரவுகள்போர்கத்திவேல்அம்புதுப்பாக்கிவலிவேதனைபோரினால் ஏற்படும் காயங்கள்அடக்குமுறைகள்விபத்துஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் சமூக விரோதிகள்தீவிரவாதிகளாக மாறுவார்கள்.  ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால்,  சட்டம் ஒழுங்கைக் காக்கும் காவல் துறைஇராணுவம்தீயனைப்புத்துறைசீருடையணிந்த பணியாளர்களாக இருப்பார்கள்.

  உடன்பிறப்புகள்பெண்களுக்கு கணவனையும்ஆண்,பெண் இரு பாலருக்கும் சகோதரரையும் குறிக்கும்தைரியம்முன்கோபம்முரட்டுக்குணம்பிடிவாதம்மற்றவர்க்கு கட்டுப்படாமைபுரட்சி செய்தல்உடல் வலிமையை பயன்படுத்துதல்மற்றவர்கள் படும் துன்பத்தைக்கண்டு ரசித்தல்ரண வேதனை முதலிய காரகங்களைக் கொண்டவர்.
ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால்அடாவடித் தனத்தை தட்டிக்கேட்பவராக இருப்பார்இல்லையென்றால்அடாவடித்தனம் மிக்கவராக இருப்பார்.

ஆண்களின் ஜாதகத்தில் செவ்வாய்சூரியனுடன், 1, 2, 4, 5, 7, 8, 12 முதலிய இடங்களில் கூடக்கூடாது. 3, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் கூடலாம்இவர்கள் இருவரும் கூட மருத்துவத்துறையில் ஈடுபாடு கொண்டவர்.

பெண்களின் ஜாதகத்தில் சூரியன்செவ்வாய் எந்த இடங்களிலும் கூடியிருக்கக் கூடாதுஅது மாங்கல்ய பலத்திற்கு கேடுஆதலால்மந்திரபலத்தாலோமாந்திரீகபலத்தாலோதங்கள் மாங்கல்ய பலத்தை காத்துக்கொள்வது நல்லது.

குழந்தையின் ஜாதகத்தில் சந்திரனும்செவ்வாயும் நான்கினில் கூடகுழந்தை பிறந்த பின் தாய் மாற்றானுடன் சோரம் போவாள்அதேபோல்ஏழாமிடத்தில் சந்திரனும்செவ்வாயும் கூடகிழவனை மணப்பாள்.

சந்திரனுக்கு சசியென்ற பெயரும்செவ்வாய்க்கு மங்கலன் என்ற பெயரும் உள்ளதுஇருவரும் கூட அல்லது கேந்திரத்தில் நிற்கசசிமங்கல யோகம் ஏற்படுகிறதுகம்பீரமான தோற்றம்வசீகரத்தன்மைசெல்வம்செல்வாக்குஅதிகாரப்பதவிவெளிநாட்டுப்பயணம் என எல்லாமே நல்லதே நடக்கும்.

சுக்கிரனும்செவ்வாயும் கேந்திரத்தில் நிற்கபிருகுமங்கல நோகத்தைத் தரும்ஜாதகர் மனைவி மூலம் பெருத்த யோகத்தை அடைவார்.
குருவும்செவ்வாயும் இணைந்தோநேரெதிராய் நின்று பார்த்தாலோகுருமங்கல யோகம் ஏற்படும்எப்படியும் கெளரவமான பதவிசெல்வம்செல்வாக்குஉயர்கல்வி எற்பட்டே தீரும்பொதுவாகயோகங்களைத் தரும் கிரகங்கள் 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் நிற்கக்கூடாது.
செவ்வாயும்புதனும் பகைபெற்ற கோள்களாகும்இருவரும், 1, 2, 4, 5, 6, 7, 8, 12 ஆகிய வீடுகளில் இருந்தால்கடுமையான பலன்களே நடக்கும்மேலும், 3, 9, 10, 11 ஆகிய வீடுகளில் மட்டும் இரண்டு கிரகங்கள் கூடியிருக்கலாம்.
ஆண்பெண் இருபாலர் ஜாதகத்திலும்செவ்வாயும்சனியும்,    1, 4, 5, 7,8, 12 முதலிய இடங்களில் கூடியிருக்கக் கூடாது. 2, 3, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் கூடியிருக்கலாம்.

பொதுவாகசனிசெவ்வாய் இரண்டு கிரகங்களும்ஒன்றையொன்று பார்க்கக் கூடாதுசனி மந்தமாகமெதுவாக செயல்படும் சுபாவத்தைக் கொண்டவன்ஆனால்செவ்வாய் முரட்டுத்தனமாகமுட்டாள்தனமாக செயல்படும் போர்க்குணமிக்கவன்துரிதமாய் செயல்படாத எந்த செயலும் வெற்றியைத் தராதுமந்தமாய் செயல்படும் எந்த செயலும் தோல்வியைத்தான் தரும்உலகில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கும்கூட்டான கொலைகளுக்கும்விபத்துக்களுக்கும் சனிசெவ்வாய் பார்வையே காரணமாகிறதுசெவ்வாய் என்கிற ஜெயக்காரகன் வலுவானவன் தான்.

 ஆனால்,  அவனைவிடசனி என்கிற கர்மக்காரகன் வலுவானவன்.
பெண்களின் ஜாதகத்தில் கணவனைக்குறிக்கும் கிரகமாக செவ்வாய் உள்ளதுபோகத்தைக் குறிக்கும் கிரகமாக இராகு உள்ளதுஇருவரும்கூட வரம்புமீறிய போகத்தை அனுபவிப்பவராக இருப்பார்கள்.மேலும்சினிமாவில் நடிப்புத் துறையில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கேது ஞானத்தைத் தருபவர்அதனால்செவ்வாயோடு கூட முரட்டுக்குணத்திற்கு தடைவிதித்துவெற்றிக்கு முட்டுக் கட்டை போடுபவர்தடைகளால் மனம்தளர்ந்து விரக்தியே கூடும்.



§   ம் இடம் புதன் வீடானால் தோஷமில்லை.
§   12 ம் இடம் சுக்கிரன் வீடானால் தோஷமில்லை.
§   ம் இடம் செவ்வாய் வீடானால் தோஷமில்லை.
§   ம் இடத்தில் மகரகடகத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
§   ம் வீடு குரு வீடாகி அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
§   கும்பம்சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
§   செவ்வாய்குரு இணைவு தோஷமில்லை.
§   செவ்வாய்சந்திரன் இணைவு தோஷமில்லை.
§   ஆண் ஜாதகத்தில் 2, 7 ம்பெண் ஜாதகத்தில், 4, 12 ம் செவ்வாய் இருப்பது தோஷம்இருவருக்கும் 8 ல் செவ்வாய் இருப்பது அதிக தோஷத்தைத் தரும் என்று சிலரும்.
§   பெண் ஜாதகத்தில் 2,7 ம்ஆண் ஜாதகத்தில் 4, 8 ல் செவ்வாய் இருந்தால்செவ்வாய்தோஷம் இல்லையென்றும் சிலர் கருத்துப்பேதப் படுகிறார்கள்ஆனால், 2,4,7,8,12 ல் செவ்வாய் இருப்பதுசெவ்வாய் தோஷம் தான்.
§   இருவர்  செவ்வாயும் 2,4,7,8,12 ல்அதே ஸ்தானங்களில் இருந்தால் தீர்க்காயுள்எல்லாசுகமும் கிட்டும். (.ம்ஆணுக்கு 4மிடத்தில் செவ்வாய் என்றால்பெண்ணுக்கும் அதே 4 மிடத்தில் செவ்வாய் இருப்பது தோஷமாகாதுஇதே போல் மற்றைய இடங்களையும் காணவும்.
§   சந்திரனில் இருந்து செவ்வாய் தோஷம் 1 பங்கு.
§    சுக்கிரனில் இருந்து செவ்வாய் தோஷம் 1/2 பங்கு.
§   இலக்கினத்தில் இருந்து செவ்வாய் தோஷம் ¼ பங்கு.இருக்கும்.மேலும்,
§   சுவாதிதிருவோணம்ரோகிணி ஆகிய நட்சத்திரங்களில் செவ்வாய் இருந்தால்அது தோஷமாகாது என்றும்,
§   மேஷத்தில் சூரியன்செவ்வாய் இணைவும்கன்னியில் புதன்செவ்வாய் இணைவும் செவ்வாய் தோஷமாகாது.
§   ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 ல் செவ்வாய் இருந்துஇந்த ராசிகளுக்கு முன்னும்பின்னும் குரு இருந்தால்காலம் கடந்து திருமணம் நடக்கும்.
§   மகரத்தில் உச்சம் பெற்றாலும்கடகத்தில் நீச்சம்பெற்றாலும்மேஷவிருச்சிகத்தில் ஆட்சிபெற்றாலும்சூரியன்சனிஇராகுகேது முதலிய பாவக்கிரகங்களுடன் செவ்வாய் கூடினாலும்பார்த்தாலும் செவ்வாய் தோஷமில்லை.
§   கடகசிம்ம லக்கினக்காரர்களுக்குசெவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமில்லை.

செவ்வாய் தோஷத்தைப் பற்றி விழிப்பற்ற கண்ணோட்டமும்ஆய்வற்ற தான்தோன்றித்தனமான முடிவுகளும்பலருக்கு திருமண பந்தத்தைப்பெறதடையாக உள்ளது.

தனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதாஇல்லையாஎன்பதைநீங்கள் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்இல்லையென்றால்உங்கள் வாழ்வை “கத்துக்குட்டிகள்” சூறையாடிவிடுவார்கள்செவ்வாய் தோஷம் உள்ள வரனாக,     ஆணையோபெண்ணையோ தேடிக்கொண்டிருந்தால்கிடைப்பதும்காலம்கடந்துதான் கிடைக்கும்.     

ஜாக்கிரதை செவ்வாயுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும்யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும்,  செவ்வாய் தோஷத்தைப்பற்றி பல அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள்இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலேஉங்கள் ஜாதகத்தில்     செவ்வாய்  எங்கே உள்ளது என்பதை அறிந்துஇங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும்கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.

தங்கள் ஜாதகத்தில் செவ்வாய்  கெட்டிருப்பவர்கள் மட்டுமல்ல.     செவ்வாய்  வலுவாக உள்ள ஜாதகர்களும்இந்த பரிகாரத்தை செய்யலாம்செவ்வாய் பலம் உள்ளவர்களுக்குஇன்னும் பலம் கூடும் என்பது திண்ணம்.

வீடு வாசலை சுத்தம் செய்தபின்குளித்து முடித்து செவ்வாய்    கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை   செவ்வாய்க்குரிய ஓரையான  செவ்வாய் ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும்.  ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.(  புதன் கிழமை என்றால் புதன் ஓரையாருடைய ஜாதகத்தில் வலுக் குறைந்த செவ்வாய்  உள்ளாரோ அவர் மட்டும்பூஜைநேரத்தில்   செம்மைநிற வேட்டியோசேலையோஅணிந்து கொண்டுஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய்பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டுபஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும்சார்ட் அட்டையில்    செவ்வாய்க்காக  வரைந்துவைத்துள்ள கிரக கோலத்தின் மேல்  துவரைமாவினால் பூஜையறையிலோவழிபாட்டுத்தளத்திலோகால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும்மேலும்,   செம்புத்தகட்டில்சேவல் போல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும்தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்துஅதில் இடுவதற்காக  குங்கிலியத்தை  எடுத்து வைத்துக் கொள்ளவும்பின்னர் சூடு ஆறாத பொங்கலைநாம் இதுவரை புலங்காதபயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும்.  செவ்வாயின் அதிதேவதையான  முருகனின் படத்தையும்அதனருகில் கருங்காலியையும்     மந்திரக்கோலமருகில்  வைக்கவும்.

இப்போது மனமுறுகி  மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல்பார்த்துக் கொண்டேஎத்தனையோ பிறவிகளாய் தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் பூமாதேவியின் புதல்வாஎன செவ்வாயின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்கபனிபோல் பிறவித்துன்பம் விலகும்.

செவ்வாய்

செங்கண்ணன் செம்மேனிச் செல்வன்செம்
மாலையினான்
அங்கையில் வேல் சூலம் அடற்கதைகொள்-
மங்கலத்தான்
 மோதும் தகரேறும் மூர்த்தி நிலம்கட்குக்
காதற்சேய் அங்கார கன்.
                   
செவ்வாய் துதி.
 வசன நல் தைரியத்தோடு மன்னர் சபையில்
வார்த்தை
புசபல பராக்கிர மங்கள் போர்தனில் வெற்றி
ஆண்மை
நிசமுடன் அவர் வாக்கு நீள் நிலம்தனில்
அளிக்கும்
குசலன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல்
போற்றி.

அபிராமி அந்தாதி.

அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவேர் வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழு நரகுக் குறவாய் மனிதரையே!   .3.
விழிக்கே அருளுண்ட் அபிராமிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்ட எமக்(குஅவ் வழிகிடக்கப்
பழிக்கே கழன்று எம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடெ  ன்ன கூட்டினியே!                                                           .79.
இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் செவ்வாய்    இருந்தால்பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம்இது மட்டுமல்ல . செவ்வாய்     கடகத்தில் நீசம் பெற்றிருந்த அமைப்பையுடையவர்களும்இலக்கினத்துக்கு 8, 12ல்   செவ்வாய்  மறைந்துள்ளவர்களும்இலக்கினாதிபதிக்கு 8, 12ல்   செவ்வாய்  மறைந்து உள்ளவர்களும்,  பாவிகளான , சூரியன்புதன் சனிஇராகுகேது முதலிய கிரகங்களுடன் கூடிய செவ்வாய்எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும்இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.   செவ்வாய்  தசை,   செவ்வாய்  புக்தி,  அல்லது   செவ்வாய்  அந்தரம்இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும்செவ்வாய் தசையோசெவ்வாய் புக்தியோ நடப்பில் இருப்பவர்களோஅல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும்இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும்சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்

செவ்வாய்க் கிழமையன்று ஒருவேளை சற்று காரத்துடன் சமைக்கப்பட்ட உணவையும்மறுவேளை  தனி துவரம்பருப்பின் கூட்டை உணவாக்கிக்கொள்ளதங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.

செவ்வாய்க்குரியமந்திரகோலம்.\உங்களின் ஜென்ம நட்சத்திரம் செவ்வாய் சாரம் பெற்றிருந்தால்அதாவது மிருகசீரிடம்சித்திரைஅவிட்டம் என இந்த மூன்றில் ஒன்றுஜென்ம நட்சத்திரமாக இருந்தால்அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும்அது மிருகசீரிடத்தில்   பிறந்திருந்தால் கருங்காலிமரத்தையும்உத்திரத்தில் பிறந்திருந்தால்  கோவிலில் வில்வமரத்தையும்,  அவிட்டத்தில் பிறந்திருந்தால்வன்னிமரத்தையும் நட்டுபராமரித்துவந்தால்,  செவ்வாயால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.

வாழ்க வளமுடன்.               
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர்அஞ்சல்.624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.















  

No comments:

Post a Comment