இன்று செவ்வாயைப்பற்றி அறிந்து கொள்வோம். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலையில், என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம். அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.
பூமியிலிருந்து சந்திரன் பிரிந்து சென்றதைப்போல, செவ்வாயும் பிரிந்து சென்ற கிரகமாகும். பூமியில் என்ன விதமான தட்பவெப்பநிலை உள்ளதோ, அதேபோன்ற தட்ப வெப்ப நிலை செவ்வாயிலும் உள்ளது. பூமியின் நிலத்தைப் போன்ற அமைப்பே, செவ்வாயில் நிலவுகிறது. மேலும், பூமிக்கு மிக நெருங்கிய உறவுக்கிரகமான செவ்வாய், நமக்கெல்லாம் சகோதரனாக இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், நாம் பூமாதேவியின் குழந்தைகள் அல்லவா! அதேபோல், செவ்வாய் கிரகமும், சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியிலிருந்து பிரிந்து வான்வெளியில் இயங்கிவருவதால், செவ்வாயின் தாயான பூமியே, நமக்கும் தாயாக இருப்பதால், நமக்கு செவ்வாய் சகோதரன்தானே.
எல்லா மானுட ஜீவன்களுக்கும் வெற்றியைத்தருபவன். இவன் ஆண் வடிவத்தையும், தாமஸக் குணத்தையும் கொண்டவன். செம்பு உலோகத்தையும், அவருடைய ரத்தினங்களாக பவளத்தையும் கொண்டவன்., இவன் சூடிக்கொள்ளும் மலர் செண்பகம் என்பதால், இவன் நிறம் செம்மையாகும். இவன் வாகனம் சேவல், செம்போத்து, அன்னமாகும். சத்திரியர் இனத்தைச்சேர்ந்தவர். இவரை போர் குணமிக்கவரென வேதம் சொல்கிறது. இவன் திசை தெற்கு. இவன் சேனாதிபதி. இவன் எலும்பு மஜ்ஜையை குறிப்பவன்.
இவன் பித்தத்தை குறிப்பவன். இவன் குள்ள வடிவினன். இவன் அதிதேவதை சுப்பிரமணியன். பிரத்யதி தேவதை பூமாதேவியாகும்.
இவன் பித்தத்தை குறிப்பவன். இவன் குள்ள வடிவினன். இவன் அதிதேவதை சுப்பிரமணியன். பிரத்யதி தேவதை பூமாதேவியாகும்.
காலி நிலம், அசையா சொத்துக்கள், கரடுமுரடான பாறைகள், மலைகள், ஒழுங்கற்ற நிலப்பரப்புகள், ஆயுதங்கள், கூர்மையான பொருட்கள், சண்டையிடுதல், சச்சரவுகள், போர், கத்தி, வேல், அம்பு, துப்பாக்கி, வலி, வேதனை, போரினால் ஏற்படும் காயங்கள், அடக்குமுறைகள், விபத்து, ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் சமூக விரோதிகள், தீவிரவாதிகளாக மாறுவார்கள். ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால், சட்டம் ஒழுங்கைக் காக்கும் காவல் துறை, இராணுவம், தீயனைப்புத்துறை, சீருடையணிந்த பணியாளர்களாக இருப்பார்கள்.
உடன்பிறப்புகள், பெண்களுக்கு கணவனையும், ஆண்,பெண் இரு பாலருக்கும் சகோதரரையும் குறிக்கும். தைரியம், முன்கோபம், முரட்டுக்குணம், பிடிவாதம், மற்றவர்க்கு கட்டுப்படாமை, புரட்சி செய்தல், உடல் வலிமையை பயன்படுத்துதல், மற்றவர்கள் படும் துன்பத்தைக்கண்டு ரசித்தல், ரண வேதனை முதலிய காரகங்களைக் கொண்டவர்.
ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால், அடாவடித் தனத்தை தட்டிக்கேட்பவராக இருப்பார். இல்லையென்றால், அடாவடித்தனம் மிக்கவராக இருப்பார்.
ஆண்களின் ஜாதகத்தில் செவ்வாய், சூரியனுடன், 1, 2, 4, 5, 7, 8, 12 முதலிய இடங்களில் கூடக்கூடாது. 3, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் கூடலாம். இவர்கள் இருவரும் கூட மருத்துவத்துறையில் ஈடுபாடு கொண்டவர்.
பெண்களின் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் எந்த இடங்களிலும் கூடியிருக்கக் கூடாது. அது மாங்கல்ய பலத்திற்கு கேடு. ஆதலால், மந்திரபலத்தாலோ, மாந்திரீகபலத்தாலோ, தங்கள் மாங்கல்ய பலத்தை காத்துக்கொள்வது நல்லது.
குழந்தையின் ஜாதகத்தில் சந்திரனும், செவ்வாயும் நான்கினில் கூட, குழந்தை பிறந்த பின் தாய் மாற்றானுடன் சோரம் போவாள். அதேபோல், ஏழாமிடத்தில் சந்திரனும், செவ்வாயும் கூட, கிழவனை மணப்பாள்.
சந்திரனுக்கு சசியென்ற பெயரும், செவ்வாய்க்கு மங்கலன் என்ற பெயரும் உள்ளது. இருவரும் கூட அல்லது கேந்திரத்தில் நிற்க, சசிமங்கல யோகம் ஏற்படுகிறது. கம்பீரமான தோற்றம், வசீகரத்தன்மை, செல்வம், செல்வாக்கு, அதிகாரப்பதவி, வெளிநாட்டுப்பயணம் என எல்லாமே நல்லதே நடக்கும்.
சுக்கிரனும், செவ்வாயும் கேந்திரத்தில் நிற்க, பிருகுமங்கல நோகத்தைத் தரும். ஜாதகர் மனைவி மூலம் பெருத்த யோகத்தை அடைவார்.
குருவும், செவ்வாயும் இணைந்தோ, நேரெதிராய் நின்று பார்த்தாலோ, குருமங்கல யோகம் ஏற்படும். எப்படியும் கெளரவமான பதவி, செல்வம், செல்வாக்கு, உயர்கல்வி எற்பட்டே தீரும். பொதுவாக, யோகங்களைத் தரும் கிரகங்கள் 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் நிற்கக்கூடாது.
செவ்வாயும், புதனும் பகைபெற்ற கோள்களாகும். இருவரும், 1, 2, 4, 5, 6, 7, 8, 12 ஆகிய வீடுகளில் இருந்தால், கடுமையான பலன்களே நடக்கும். மேலும், 3, 9, 10, 11 ஆகிய வீடுகளில் மட்டும் இரண்டு கிரகங்கள் கூடியிருக்கலாம்.
ஆண், பெண் இருபாலர் ஜாதகத்திலும், செவ்வாயும், சனியும், 1, 4, 5, 7,8, 12 முதலிய இடங்களில் கூடியிருக்கக் கூடாது. 2, 3, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் கூடியிருக்கலாம்.
பொதுவாக, சனி, செவ்வாய் இரண்டு கிரகங்களும், ஒன்றையொன்று பார்க்கக் கூடாது. சனி மந்தமாக, மெதுவாக செயல்படும் சுபாவத்தைக் கொண்டவன். ஆனால், செவ்வாய் முரட்டுத்தனமாக, முட்டாள்தனமாக செயல்படும் போர்க்குணமிக்கவன். துரிதமாய் செயல்படாத எந்த செயலும் வெற்றியைத் தராது. மந்தமாய் செயல்படும் எந்த செயலும் தோல்வியைத்தான் தரும். உலகில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கும், கூட்டான கொலைகளுக்கும், விபத்துக்களுக்கும் சனி, செவ்வாய் பார்வையே காரணமாகிறது. செவ்வாய் என்கிற ஜெயக்காரகன் வலுவானவன் தான்.
ஆனால், அவனைவிட, சனி என்கிற கர்மக்காரகன் வலுவானவன்.
ஆனால், அவனைவிட, சனி என்கிற கர்மக்காரகன் வலுவானவன்.
பெண்களின் ஜாதகத்தில் கணவனைக்குறிக்கும் கிரகமாக செவ்வாய் உள்ளது. போகத்தைக் குறிக்கும் கிரகமாக இராகு உள்ளது. இருவரும்கூட வரம்புமீறிய போகத்தை அனுபவிப்பவராக இருப்பார்கள்.மேலும், சினிமாவில் நடிப்புத் துறையில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கேது ஞானத்தைத் தருபவர். அதனால், செவ்வாயோடு கூட முரட்டுக்குணத்திற்கு தடைவிதித்து, வெற்றிக்கு முட்டுக் கட்டை போடுபவர். தடைகளால் மனம்தளர்ந்து விரக்தியே கூடும்.
§ 2 ம் இடம் புதன் வீடானால் தோஷமில்லை.
§ 12 ம் இடம் சுக்கிரன் வீடானால் தோஷமில்லை.
§ 4 ம் இடம் செவ்வாய் வீடானால் தோஷமில்லை.
§ 7 ம் இடத்தில் மகர, கடகத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
§ 8 ம் வீடு குரு வீடாகி அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
§ கும்பம், சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
§ செவ்வாய், குரு இணைவு தோஷமில்லை.
§ செவ்வாய், சந்திரன் இணைவு தோஷமில்லை.
§ ஆண் ஜாதகத்தில் 2, 7 ம், பெண் ஜாதகத்தில், 4, 12 ம் செவ்வாய் இருப்பது தோஷம். இருவருக்கும் 8 ல் செவ்வாய் இருப்பது அதிக தோஷத்தைத் தரும் என்று சிலரும்.
§ பெண் ஜாதகத்தில் 2,7 ம், ஆண் ஜாதகத்தில் 4, 8 ல் செவ்வாய் இருந்தால்செவ்வாய்தோஷம் இல்லையென்றும் சிலர் கருத்துப்பேதப் படுகிறார்கள். ஆனால், 2,4,7,8,12 ல் செவ்வாய் இருப்பது, செவ்வாய் தோஷம் தான்.
§ இருவர் செவ்வாயும் 2,4,7,8,12 ல், அதே ஸ்தானங்களில் இருந்தால் தீர்க்காயுள். எல்லாசுகமும் கிட்டும். (உ.ம்) ஆணுக்கு 4மிடத்தில் செவ்வாய் என்றால், பெண்ணுக்கும் அதே 4 மிடத்தில் செவ்வாய் இருப்பது தோஷமாகாது. இதே போல் மற்றைய இடங்களையும் காணவும்.
§ சந்திரனில் இருந்து செவ்வாய் தோஷம் 1 பங்கு.
§ சுக்கிரனில் இருந்து செவ்வாய் தோஷம் 1/2 பங்கு.
§ இலக்கினத்தில் இருந்து செவ்வாய் தோஷம் ¼ பங்கு.இருக்கும்.மேலும்,
§ சுவாதி, திருவோணம், ரோகிணி ஆகிய நட்சத்திரங்களில் செவ்வாய் இருந்தால், அது தோஷமாகாது என்றும்,
§ மேஷத்தில் சூரியன், செவ்வாய் இணைவும், கன்னியில் புதன், செவ்வாய் இணைவும் செவ்வாய் தோஷமாகாது.
§ ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 ல் செவ்வாய் இருந்து, இந்த ராசிகளுக்கு முன்னும், பின்னும் குரு இருந்தால், காலம் கடந்து திருமணம் நடக்கும்.
§ மகரத்தில் உச்சம் பெற்றாலும், கடகத்தில் நீச்சம்பெற்றாலும், மேஷ, விருச்சிகத்தில் ஆட்சிபெற்றாலும், சூரியன், சனி, இராகு, கேது முதலிய பாவக்கிரகங்களுடன் செவ்வாய் கூடினாலும், பார்த்தாலும் செவ்வாய் தோஷமில்லை.
§ கடக, சிம்ம லக்கினக்காரர்களுக்கு, செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமில்லை.
செவ்வாய் தோஷத்தைப் பற்றி விழிப்பற்ற கண்ணோட்டமும், ஆய்வற்ற தான்தோன்றித்தனமான முடிவுகளும், பலருக்கு திருமண பந்தத்தைப்பெற, தடையாக உள்ளது.
தனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா? இல்லையா? என்பதை, நீங்கள் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால், உங்கள் வாழ்வை “கத்துக்குட்டிகள்” சூறையாடிவிடுவார்கள். செவ்வாய் தோஷம் உள்ள வரனாக, ஆணையோ, பெண்ணையோ தேடிக்கொண்டிருந்தால், கிடைப்பதும், காலம்கடந்துதான் கிடைக்கும்.
ஜாக்கிரதை செவ்வாயுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும், யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும், செவ்வாய் தோஷத்தைப்பற்றி பல அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள். இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலே, உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே உள்ளது என்பதை அறிந்து, இங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும், கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.
ஜாக்கிரதை செவ்வாயுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும், யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும், செவ்வாய் தோஷத்தைப்பற்றி பல அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள். இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலே, உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே உள்ளது என்பதை அறிந்து, இங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும், கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.
தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டிருப்பவர்கள் மட்டுமல்ல. செவ்வாய் வலுவாக உள்ள ஜாதகர்களும், இந்த பரிகாரத்தை செய்யலாம். செவ்வாய் பலம் உள்ளவர்களுக்கு, இன்னும் பலம் கூடும் என்பது திண்ணம்.
வீடு வாசலை சுத்தம் செய்தபின், குளித்து முடித்து செவ்வாய் கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை செவ்வாய்க்குரிய ஓரையான செவ்வாய் ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும். ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.( புதன் கிழமை என்றால் புதன் ஓரை) யாருடைய ஜாதகத்தில் வலுக் குறைந்த செவ்வாய் உள்ளாரோ அவர் மட்டும், பூஜைநேரத்தில் செம்மைநிற வேட்டியோ, சேலையோ, அணிந்து கொண்டு, ஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய், பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டு, பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும். சார்ட் அட்டையில் செவ்வாய்க்காக வரைந்துவைத்துள்ள கிரக கோலத்தின் மேல் துவரைமாவினால் பூஜையறையிலோ, வழிபாட்டுத்தளத்திலோ, கால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும். மேலும், செம்புத்தகட்டில், சேவல் போல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக குங்கிலியத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் சூடு ஆறாத பொங்கலை, நாம் இதுவரை புலங்காத, பயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும். செவ்வாயின் அதிதேவதையான முருகனின் படத்தையும், அதனருகில் கருங்காலியையும் மந்திரக்கோலமருகில் வைக்கவும்.
இப்போது மனமுறுகி மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல், பார்த்துக் கொண்டே, எத்தனையோ பிறவிகளாய் தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் பூமாதேவியின் புதல்வா! என செவ்வாயின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்க, பனிபோல் பிறவித்துன்பம் விலகும்.
செவ்வாய்
செங்கண்ணன் செம்மேனிச் செல்வன்செம்
மாலையினான்
அங்கையில் வேல் சூலம் அடற்கதைகொள்-
மங்கலத்தான்
மோதும் தகரேறும் மூர்த்தி நிலம்கட்குக்
காதற்சேய் அங்கார கன்.
செவ்வாய் துதி.
வசன நல் தைரியத்தோடு மன்னர் சபையில்
வார்த்தை
புசபல பராக்கிர மங்கள் போர்தனில் வெற்றி
ஆண்மை
நிசமுடன் அவர் வாக்கு நீள் நிலம்தனில்
அளிக்கும்
குசலன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல்
போற்றி.
அபிராமி அந்தாதி.
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவேர் வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழு நரகுக் குறவாய் மனிதரையே! .3.
விழிக்கே அருளுண்ட் அபிராமிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்ட எமக்(கு) அவ் வழிகிடக்கப்
பழிக்கே கழன்று எம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடெ ன்ன கூட்டினியே! .79.
இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் செவ்வாய் இருந்தால், பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம். இது மட்டுமல்ல . செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றிருந்த அமைப்பையுடையவர்களும், இலக்கினத்துக்கு 8, 12ல் செவ்வாய் மறைந்துள்ளவர்களும், இலக்கினாதிபதிக்கு 8, 12ல் செவ்வாய் மறைந்து உள்ளவர்களும், பாவிகளான , சூரியன், புதன் சனி, இராகு, கேது முதலிய கிரகங்களுடன் கூடிய செவ்வாய், எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும், இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது. செவ்வாய் தசை, செவ்வாய் புக்தி, அல்லது செவ்வாய் அந்தரம், இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும், செவ்வாய் தசையோ, செவ்வாய் புக்தியோ நடப்பில் இருப்பவர்களோ, அல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும், சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.
செவ்வாய்க் கிழமையன்று ஒருவேளை சற்று காரத்துடன் சமைக்கப்பட்ட உணவையும், மறுவேளை தனி துவரம்பருப்பின் கூட்டை உணவாக்கிக்கொள்ள, தங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
செவ்வாய்க்குரியமந்திரகோலம்.\உங்களின் ஜென்ம நட்சத்திரம் செவ்வாய் சாரம் பெற்றிருந்தால், அதாவது மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் என இந்த மூன்றில் ஒன்று, ஜென்ம நட்சத்திரமாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும். அது மிருகசீரிடத்தில் பிறந்திருந்தால் கருங்காலிமரத்தையும், உத்திரத்தில் பிறந்திருந்தால் கோவிலில் வில்வமரத்தையும், அவிட்டத்தில் பிறந்திருந்தால், வன்னிமரத்தையும் நட்டு, பராமரித்துவந்தால், செவ்வாயால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். அஞ்சல்.624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.
No comments:
Post a Comment