Tuesday 28 October 2014

மந்திரமும்…. கோலமும்… சூரியன்.

                                           இன்று சூரியனைப்பற்றி அறிந்துகொள்வோம்ஆதலால்தங்கள் ஜாதகத்தில் சூரியன் எந்த நிலையில் உள்ளார் என்பதை அறிந்துஅதற்கு தக்கவாறுஇந்த வீட்டுப் பரிகாரத்தை செய்து கொள்ளலாம்எல்லாகிரகங்களுக்கும் முதலானவன்இவனிடமிருந்துதான் எல்லாக்கிரகங்களும் பிறந்தனஎல்லா கிரகங்களும் உருவாகமூலகாரணம் என்பதால்இவனே தகப்பனாகிறான்இவனின் ஈர்ப்பில்தான் மற்ற எல்லா கிரகங்களும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றனஜீவாத்மாக்களின் தலைவன்எல்லா ஆத்மாக்களும் இவனுக்குள் அடக்கம்இவனில் இருந்தே உயிர்கள் உருவாகினஅதனால்ஆத்மாக்களின் தலைவன்.

ஒரு ஜாதகத்தில் சூரியனை வைத்துதந்தைதந்தை வர்க்கம்நம்மை ஆளும் அரசியல் தலைவர்கள்நாட்டுத்தலைவர்கள்கட்சித்தலைவர்கள்மனோதிடம்நேர்மைஆளுமை திறம்தனித்தன்மைபதவிஅந்தஸ்துகம்பீரமான தோற்றம்சுயகெளரவம்தான் என்ற கர்வம்அரசியல்அரசாங்கம்அதிகாரம்குறிக்கோள் ஆகிய காரகங்களை தரும்ஆளுமை மிக்கத் திறமை இருக்கவேண்டும் என்றால்ஜாதகத்தில் சூரியன் வலுமிக்கவனாக இருக்கவேண்டும்ஆளுமை என்பது ஊர் உலகத்தை ஆள்வது மட்டுமல்லவீட்டையும்வீட்டில் உள்ளவர்களையும் அதிகாரம்செய்வதையும் குறிக்கிறதுகுடும்பத்தலைவன் சொல்வதை யாரும் கேட்கவில்லை என்றால்அதிகாரம் செல்லுபடியாகாதவலுவிழந்த “டம்மி பீஸ்” என அர்த்தம்.


சமூகத்துக்குள் யாரோ ஒருவர் சொல்வதை மற்றவர்கள் எல்லோரும் கேட்பார்கள்அவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்தோம் என்றால்சூரியன் மிகவலுவாக இருக்கும்ஒரு சிலர் நல்லதையே சொல்வார்கள் அதை யாரும் காது கொடுத்தும் கேட்கமாட்டார்கள்இவர் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால்,  ஆளுமைத் திறம் குறைவாக இருக்கும்இந்த குறைபாட்டை முன்கூட்டியே அறிந்துஅதை பெருக்கிக் கொள்ள என்ன வழியோஅதைப்பற்றி சிந்திக்கவெண்டும்


நா சொல்றத ஒருபய கூட கேக்கமாட்டீங்குறான்னு விரக்தியடையக் கூடாது.      .


 இளமையில் கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறது என்றால்அதற்கு சூரியனும் ஒரு காரணம் தான்.      இலக்கினத்துக்கு ஒன்றுஇரண்டாம் இடங்களில் சூரியன் நிற்ககண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறது


அடிக்கடி எலும்புமுறிவுஇளம் வயதில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டவர்களும்அடிக்கடி பதவியில் இருந்து பதவி இறக்கம் செய்யப்படுபவர்களும், நேர்மை இழப்பவர்களும்கெளரவம் அற்றவர்களும்கம்பீரத்தோற்றத்தைஇழந்து வாடுபவர்களும்சூரியனுக்கு பரிகாரம் செய்துகொள்வது நல்லது

சூரியபலம் குறைவாய் உள்ளவர்களுக்குவெளிவட்டார மதிப்பே இருக்காது.

இலக்கினத்தில் சூரியனுடன் இராகு கூடியிருந்தால்களத்திர தோஷமாகும்., கும்பலக்கினமாக இருந்துஏழாமதிபதி சூரியன் 6, 8. 12 ம்      வீடுகளில் அமரகணவனை துன்பப் படுத்துபவளாகவும் இருப்பாள்இதே அமைப்பு பெண்களின் ஜாதகத்தில் இருந்தால்கணவனால் துன்பப்படுபவளாக இருப்பாள். 8, 12 மிடம் சரி. 6 மிடத்தையும் கூறுவதன் காரணம் என்னவென்றால், 6 மிடம் என்பது, 7 மிட களத்திர ஸ்தானத்துக்கு, 12 மிடமாக வருவதால்கும்பலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த கருத்து பொருந்தும்.  மேலும்சூரியனுடன் இராகுகேதுசுக்கிரன்சனி கூடியுள்ளவர்களும்இலக்கினத்திலிருந்து 1, 2, 4, 5, 7, 8, 9, 12ம் வீடுகளில் சூரியன் இருக்கும் அமைப்புள்ளவர்களும்சூரியனால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.
சூரியன்சுக்கிரனுடன் கூடி, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12 முதலிய இடங்களில் அமரகெட்டபலன்களே நடக்கும்.
சூரியன்சனியுடன் கூடி, 1, 2, 4, 7, 8, 12 முதலிய இடங்களில் அமரகெட்டபலன்களே நடக்கும்.
இராகுகேதுக்களுடன் சூரியன் கூடியிருக்கும் ஜாதகர்கள்அவசியமாக பரிகாரம் செய்துகொள்வது நல்லது.


மேடரசியில் சூரியன் உச்சம்பெற்றால்ஜாதகரின் வாழ்க்கை நன்றாக இருக்கும்ஆனால்காலப்போக்கில் ஜாதகரின் தந்தை நலிவடைந்துவிடுவார்.
சூரியனின் சுற்றுப்பாதையை விட்டு பூமி விலகும் ஐப்பசி மாதம்மழை பொழியும் காலம்சூரியனின் கிரணங்கள் பூமியை தொடமுடியாமல் போவதைப்போல்ஐப்பசியில் பிறந்தபிள்ளைக்குஅப்பனின் ஆதரவு கிட்டாதுஐப்பசியில் பிறந்துவிட்டேன் இனி உனக்கிங்கு என்னவேலை என்று அப்பனுக்கு நலிவையும்,ஆயுள் கேட்டையும் ஏற்படுத்தும்மேலும்துலாம் ராசியில் சூரியன் நீசமடைகிறது.


ஆதியில் பாம்பாய் உருவ
கப்படுத்திநிழலென்றும்மாயா என்றும் அழைக்கப்படும் இராகுகேது இருவரும் ஜாதகத்தில் எந்தவீட்டில் அமர்ந்துள்ளனரோஅந்த வீட்டின் அதிபதிகளும் சூரியனுக்கு எதிரிக்கிரகங்களாகசூரியனால் கருதப்படும்.     இதை அந்தந்த கிரக தசா புக்திகள் நடக்கத் துவங்கியதும் அறிந்துகொள்ளலாம்..


மேடம்ரிடபம்மிதுனம்(சித்திரைவைகாசிஆனிஇந்த மூன்று ராசிகளில்(மாதங்களில்சூரியன் வலம் வரும்போது வெப்பமாய் தகித்த பூமியை காற்றால் குளிர்விக்கவெப்பத்தை காற்று ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு நகர்த்திசென்றுவெப்பசலனத்தை உருவாக்குகிறதுகாற்றடிக்கும் காலமான ஆடிமாதம் (கடகம்சூரியனின் ஆற்றல் குறைவதால் ஆடிமாதபிள்ளை பிறப்பு தந்தைக்கு ஆகாத மாதமாகிறதுசூரியனுடன் சுபக்கிரகங்கள் கூடியிருந்தால் நல்லதே நடக்கும்ஆனால்கெட்டகிரகங்களான இராகுகேதுசுக்கிரன்சனி கூடியிருக்க கெட்டதே நடக்கும்தன் வீடான சிம்மத்திற்கு பனிரெண்டாமிடமானவிரையத்தில்அதாவது கடகத்தில் தனித்து சூரியனிருக்கசூரியனின் காரகங்கள் அனைத்தும் கெடும்.


இராகுகேதுவுடன் இணையும் சூரியன் தன் செயல்பாட்டு காரகங்களை எல்லாம் இழந்து பலமிழக்கிறார்தான் வழங்க வேண்டிய பலன்களை வழங்கமுடியாமல்நிழல்கிரகங்கள் என்னபலன் தரவேண்டுமோ அந்த பலன்களைஅந்த இடத்திற்கு தகுந்தாற்போல் வழங்குகின்றன.
ஆனால்சூரியன் மற்ற கிரகங்களுடன் இணையும்போதுஅந்த கிரகங்களின் காரகங்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துதானே பலன்களை நிர்ணயம் செய்துகிறதுஎந்த பாவகத்தில் கிரகங்கள் உள்ளனரோஅந்த பாவகப்பலன்களை தரச்செய்கிறது.


 இதையெல்லாம் எந்த காலகட்டத்தில் நடக்கும் என்பதும் ஆய்வுக்குரிய விடயம்தான்ஒருவன் கெளரவமாய் வாழ்கிறான் என்றால்அதை இழக்கப்பொகும் காலம் எதுஒருவன் நேர்மையை தொலைக்கப்போகிறான் என்றால்அது எப்போதுஒருவன் கம்பீரத்தை இழக்கப்போகிறான் என்றால் அது எப்போது
கிரகணம் என்பது மறைப்புஇராகுசூரியன்சந்திரன்ஆகியவை ஏறத்தாழ ஒரு நேர்கோட்டில்ஒரே நட்சத்திரப் பாதத்தில் வரும்பொழுதுஏழாம் இராசியில் கேது இருக்கும்அவ்வேளையில் பூமி இவர்களுக்கிடையே வரும் நிகழ்வே            சூரியகிரகணமாகும்.


சூரியன் பலம்குறைந்தவனாய் தன் தசாவையோபுக்தியையோஅந்தரத்தையோ  நடத்தும் காலத்தில்கெடுபலன்கள் நடக்கத் துவங்கும்மேலும்சூரியனுடன் இணைந்த கிரகங்களின் தசாபுக்தியிலும்இந்த பலன்களை செய்யும்அதனால்சூரியன் தொடர்புடைய தசாபுக்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.


தங்கள் ஜாதகத்தில் சூரியன் கெட்டிருப்பவர்கள் மட்டுமல்லசூரியன் வலுவாக உள்ள ஜாதகர்களும்இந்த பரிகாரத்தை செய்யலாம்சூரியபலம் உள்ளவர்களுக்குஇன்னும் பலம் கூடும் என்பது திண்ணம்.


வீடு வாசலை சுத்தம் செய்தபின்குளித்து முடித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை சூரியனுக்குரிய ஓரையான சூரியஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும்.  ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.(திங்கட்கிழமை என்றால்  சந்திர ஓரையாருடைய ஜாதகத்தில் வலுகுறைந்த சூரியன் உள்ளாரோ அவர் மட்டும்பூஜைநேரத்தில் செம்மைநிற வேட்டியோசேலையோஅணிந்து கொண்டுஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய்பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டுதாமரைக்கொடியை திரியாக்கி (முடிந்தால்,இல்லையென்றால் பஞ்சே போதும்.) பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிடவேண்டும்


சார்ட் அட்டையில் சூரியனுக்காக வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின் மேல் கோதுமை மாவினால் பூஜையறையிலோவழிபாட்டுத்தளத்திலோகால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும்மேலும்தாமிரத் தகட்டில் மயிலையோதேர்வடிவத்தையோ வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும்தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்துஅதில் இடுவதற்காக காய்ந்த சந்தனத்தையும் எடுத்துவைத்துக் கொள்ளவும்


பின்னர் சூடு ஆறாத சர்க்கரைப்பொங்கலைநாம் இதுவரை புலங்காதபயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும்சூரியனின் அதி தேவதையான சாந்த ரூபமான பரமசிவனின் படத்தையும்அதனருகில் எருக்கம்பூவையும் மந்திரக்கோலமருகில்  வைக்கவும்.


சூரியனுக்கான மந்திரக்கோலம்.
சூரியன்.
வாழி பகல்செய்வோன் வாழி ஒளிஉருவன்
வாழியோர் ஆழித்தேர் மன்னுசுடர்_வாழியரோ
ஞாலம் விழிதிறப்ப நல்லோர் புகழுரைப்பக்
காலம் விளக்கும் கதிர்.
சூரியன் துதி
காசினில் இருளை நீக்கும் கதிர் ஒளிவீசி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தைநல்கும்
 
வாசி ஏழுடைய தேர்மேல்  மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!

அபிராமி அந்தாதி.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுலம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடிமென் கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
இப்போது மனமுறுகி  மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல்பார்த்துக் கொண்டேஎத்தனையோ பிறவிகளாய் தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் சூரியபகவானேஎன சூரியனின்     துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்கபனிபோல் பிறவித்துன்பம் விலகும்
சூரியனால் அதிகார பலமிழந்தவர்கள்பாதிக்கப்பட்டவர்கள்அனைவருக்கும் நன்மையே கிட்டும்.


ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவேளை சற்று காரத்துடன் சமைக்கப்பட்ட உணவையும்மறுவேளை கோதுமை உணவையும்தங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.


உங்களின் ஜென்ம நட்சத்திரம் சூரிய சாரம் பெற்றிருந்தால்அதாவதுகார்த்திகைஉத்திரம்உத்ராடம் என இந்த மூன்றில் ஒன்று ஜென்மநட்சத்திரமாக இருந்தால்அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும்அது கார்த்திகையில் பிறந்திருந்தால் அத்திமரத்தையும்உத்திரத்தில் பிறந்திருந்தால் அலரிமரத்தையும்உத்திராடத்தில் பிறந்திருந்தால்பலாமரத்தையும் நட்டுபராமரித்துவந்தால்சூரியனால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.



நம்பிக்கை மட்டும்தான் வாழ்க்கையை வளமாக்கும்.

வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர்அஞ்சல்.624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069. 

No comments:

Post a Comment