இன்று சூரியனைப்பற்றி அறிந்துகொள்வோம். ஆதலால், தங்கள் ஜாதகத்தில் சூரியன் எந்த நிலையில் உள்ளார் என்பதை அறிந்து, அதற்கு தக்கவாறு, இந்த வீட்டுப் பரிகாரத்தை செய்து கொள்ளலாம். எல்லாகிரகங்களுக்கும் முதலானவன். இவனிடமிருந்துதான் எல்லாக்கிரகங்களும் பிறந்தன. எல்லா கிரகங்களும் உருவாக, மூலகாரணம் என்பதால், இவனே தகப்பனாகிறான். இவனின் ஈர்ப்பில்தான் மற்ற எல்லா கிரகங்களும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. ஜீவாத்மாக்களின் தலைவன். எல்லா ஆத்மாக்களும் இவனுக்குள் அடக்கம். இவனில் இருந்தே உயிர்கள் உருவாகின. அதனால், ஆத்மாக்களின் தலைவன்.
ஒரு ஜாதகத்தில் சூரியனை வைத்து, தந்தை, தந்தை வர்க்கம், நம்மை ஆளும் அரசியல் தலைவர்கள், நாட்டுத்தலைவர்கள், கட்சித்தலைவர்கள், மனோதிடம், நேர்மை, ஆளுமை திறம், தனித்தன்மை, பதவி, அந்தஸ்து, கம்பீரமான தோற்றம், சுயகெளரவம், தான் என்ற கர்வம், அரசியல், அரசாங்கம், அதிகாரம், குறிக்கோள் ஆகிய காரகங்களை தரும். ஆளுமை மிக்கத் திறமை இருக்கவேண்டும் என்றால், ஜாதகத்தில் சூரியன் வலுமிக்கவனாக இருக்கவேண்டும். ஆளுமை என்பது ஊர் உலகத்தை ஆள்வது மட்டுமல்ல. வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் அதிகாரம்செய்வதையும் குறிக்கிறது. குடும்பத்தலைவன் சொல்வதை யாரும் கேட்கவில்லை என்றால், அதிகாரம் செல்லுபடியாகாத, வலுவிழந்த “டம்மி பீஸ்” என அர்த்தம்.
சமூகத்துக்குள் யாரோ ஒருவர் சொல்வதை மற்றவர்கள் எல்லோரும் கேட்பார்கள். அவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்தோம் என்றால், சூரியன் மிகவலுவாக இருக்கும். ஒரு சிலர் நல்லதையே சொல்வார்கள் அதை யாரும் காது கொடுத்தும் கேட்கமாட்டார்கள். இவர் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால், ஆளுமைத் திறம் குறைவாக இருக்கும். இந்த குறைபாட்டை முன்கூட்டியே அறிந்து, அதை பெருக்கிக் கொள்ள என்ன வழியோ, அதைப்பற்றி சிந்திக்கவெண்டும்.
“நா சொல்றத ஒருபய கூட கேக்கமாட்டீங்குறான்”னு விரக்தியடையக் கூடாது. .
இளமையில் கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறது என்றால், அதற்கு சூரியனும் ஒரு காரணம் தான். இலக்கினத்துக்கு ஒன்று, இரண்டாம் இடங்களில் சூரியன் நிற்க, கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறது.
அடிக்கடி எலும்புமுறிவு, இளம் வயதில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டவர்களும், அடிக்கடி பதவியில் இருந்து பதவி இறக்கம் செய்யப்படுபவர்களும், நேர்மை இழப்பவர்களும், கெளரவம் அற்றவர்களும், கம்பீரத்தோற்றத்தைஇழந்து வாடுபவர்களும், சூரியனுக்கு பரிகாரம் செய்துகொள்வது நல்லது
சூரியபலம் குறைவாய் உள்ளவர்களுக்கு, வெளிவட்டார மதிப்பே இருக்காது.
இலக்கினத்தில் சூரியனுடன் இராகு கூடியிருந்தால், களத்திர தோஷமாகும்., கும்பலக்கினமாக இருந்து, ஏழாமதிபதி சூரியன் 6, 8. 12 ம் வீடுகளில் அமர, கணவனை துன்பப் படுத்துபவளாகவும் இருப்பாள், இதே அமைப்பு பெண்களின் ஜாதகத்தில் இருந்தால், கணவனால் துன்பப்படுபவளாக இருப்பாள். 8, 12 மிடம் சரி. 6 மிடத்தையும் கூறுவதன் காரணம் என்னவென்றால், 6 மிடம் என்பது, 7 மிட களத்திர ஸ்தானத்துக்கு, 12 மிடமாக வருவதால், கும்பலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த கருத்து பொருந்தும். மேலும், சூரியனுடன் இராகு, கேது, சுக்கிரன், சனி கூடியுள்ளவர்களும், இலக்கினத்திலிருந்து 1, 2, 4, 5, 7, 8, 9, 12ம் வீடுகளில் சூரியன் இருக்கும் அமைப்புள்ளவர்களும், சூரியனால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.
சூரியன், சுக்கிரனுடன் கூடி, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12 முதலிய இடங்களில் அமர, கெட்டபலன்களே நடக்கும்.
சூரியன், சனியுடன் கூடி, 1, 2, 4, 7, 8, 12 முதலிய இடங்களில் அமர, கெட்டபலன்களே நடக்கும்.
இராகு, கேதுக்களுடன் சூரியன் கூடியிருக்கும் ஜாதகர்கள், அவசியமாக பரிகாரம் செய்துகொள்வது நல்லது.
மேடரசியில் சூரியன் உச்சம்பெற்றால், ஜாதகரின் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் ஜாதகரின் தந்தை நலிவடைந்துவிடுவார்.
சூரியனின் சுற்றுப்பாதையை விட்டு பூமி விலகும் ஐப்பசி மாதம். மழை பொழியும் காலம். சூரியனின் கிரணங்கள் பூமியை தொடமுடியாமல் போவதைப்போல், ஐப்பசியில் பிறந்தபிள்ளைக்கு, அப்பனின் ஆதரவு கிட்டாது. ஐப்பசியில் பிறந்துவிட்டேன் இனி உனக்கிங்கு என்னவேலை என்று அப்பனுக்கு நலிவையும்,ஆயுள் கேட்டையும் ஏற்படுத்தும். மேலும், துலாம் ராசியில் சூரியன் நீசமடைகிறது.
ஆதியில் பாம்பாய் உருவகப்படுத்தி, நிழலென்றும், மாயா என்றும் அழைக்கப்படும் இராகு, கேது இருவரும் ஜாதகத்தில் எந்தவீட்டில் அமர்ந்துள்ளனரோ, அந்த வீட்டின் அதிபதிகளும் சூரியனுக்கு எதிரிக்கிரகங்களாக, சூரியனால் கருதப்படும். இதை அந்தந்த கிரக தசா புக்திகள் நடக்கத் துவங்கியதும் அறிந்துகொள்ளலாம்..
மேடம், ரிடபம், மிதுனம்(சித்திரை, வைகாசி, ஆனி) இந்த மூன்று ராசிகளில்(மாதங்களில்) சூரியன் வலம் வரும்போது வெப்பமாய் தகித்த பூமியை காற்றால் குளிர்விக்க, வெப்பத்தை காற்று ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு நகர்த்திசென்று, வெப்பசலனத்தை உருவாக்குகிறது. காற்றடிக்கும் காலமான ஆடிமாதம் (கடகம்) சூரியனின் ஆற்றல் குறைவதால் ஆடிமாதபிள்ளை பிறப்பு தந்தைக்கு ஆகாத மாதமாகிறது. சூரியனுடன் சுபக்கிரகங்கள் கூடியிருந்தால் நல்லதே நடக்கும். ஆனால், கெட்டகிரகங்களான இராகு, கேது, சுக்கிரன், சனி கூடியிருக்க கெட்டதே நடக்கும். தன் வீடான சிம்மத்திற்கு பனிரெண்டாமிடமான, விரையத்தில், அதாவது கடகத்தில் தனித்து சூரியனிருக்க, சூரியனின் காரகங்கள் அனைத்தும் கெடும்.
இராகு, கேதுவுடன் இணையும் சூரியன் தன் செயல்பாட்டு காரகங்களை எல்லாம் இழந்து பலமிழக்கிறார். தான் வழங்க வேண்டிய பலன்களை வழங்கமுடியாமல், நிழல்கிரகங்கள் என்னபலன் தரவேண்டுமோ அந்த பலன்களைஅந்த இடத்திற்கு தகுந்தாற்போல் வழங்குகின்றன.
ஆனால், சூரியன் மற்ற கிரகங்களுடன் இணையும்போது, அந்த கிரகங்களின் காரகங்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தானே பலன்களை நிர்ணயம் செய்துகிறது. எந்த பாவகத்தில் கிரகங்கள் உள்ளனரோ, அந்த பாவகப்பலன்களை தரச்செய்கிறது.
இதையெல்லாம் எந்த காலகட்டத்தில் நடக்கும் என்பதும் ஆய்வுக்குரிய விடயம்தான். ஒருவன் கெளரவமாய் வாழ்கிறான் என்றால், அதை இழக்கப்பொகும் காலம் எது? ஒருவன் நேர்மையை தொலைக்கப்போகிறான் என்றால், அது எப்போது? ஒருவன் கம்பீரத்தை இழக்கப்போகிறான் என்றால் அது எப்போது?
கிரகணம் என்பது மறைப்பு. இராகு, சூரியன், சந்திரன், ஆகியவை ஏறத்தாழ ஒரு நேர்கோட்டில், ஒரே நட்சத்திரப் பாதத்தில் வரும்பொழுது, ஏழாம் இராசியில் கேது இருக்கும். அவ்வேளையில் பூமி இவர்களுக்கிடையே வரும் நிகழ்வே சூரியகிரகணமாகும்.
சூரியன் பலம்குறைந்தவனாய் தன் தசாவையோ, புக்தியையோ, அந்தரத்தையோ நடத்தும் காலத்தில், கெடுபலன்கள் நடக்கத் துவங்கும். மேலும், சூரியனுடன் இணைந்த கிரகங்களின் தசா, புக்தியிலும், இந்த பலன்களை செய்யும். அதனால், சூரியன் தொடர்புடைய தசாபுக்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
தங்கள் ஜாதகத்தில் சூரியன் கெட்டிருப்பவர்கள் மட்டுமல்ல. சூரியன் வலுவாக உள்ள ஜாதகர்களும், இந்த பரிகாரத்தை செய்யலாம். சூரியபலம் உள்ளவர்களுக்கு, இன்னும் பலம் கூடும் என்பது திண்ணம்.
வீடு வாசலை சுத்தம் செய்தபின், குளித்து முடித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை சூரியனுக்குரிய ஓரையான சூரியஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும். ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.(திங்கட்கிழமை என்றால் சந்திர ஓரை) யாருடைய ஜாதகத்தில் வலுகுறைந்த சூரியன் உள்ளாரோ அவர் மட்டும், பூஜைநேரத்தில் செம்மைநிற வேட்டியோ, சேலையோ, அணிந்து கொண்டு, ஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய், பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டு, தாமரைக்கொடியை திரியாக்கி (முடிந்தால்,இல்லையென்றால் பஞ்சே போதும்.) பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிடவேண்டும்.
சார்ட் அட்டையில் சூரியனுக்காக வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின் மேல் கோதுமை மாவினால் பூஜையறையிலோ, வழிபாட்டுத்தளத்திலோ, கால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும். மேலும், தாமிரத் தகட்டில் மயிலையோ, தேர்வடிவத்தையோ வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக காய்ந்த சந்தனத்தையும் எடுத்துவைத்துக் கொள்ளவும்.
பின்னர் சூடு ஆறாத சர்க்கரைப்பொங்கலை, நாம் இதுவரை புலங்காத, பயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும். சூரியனின் அதி தேவதையான சாந்த ரூபமான பரமசிவனின் படத்தையும், அதனருகில் எருக்கம்பூவையும் மந்திரக்கோலமருகில் வைக்கவும்.
ஒரு ஜாதகத்தில் சூரியனை வைத்து, தந்தை, தந்தை வர்க்கம், நம்மை ஆளும் அரசியல் தலைவர்கள், நாட்டுத்தலைவர்கள், கட்சித்தலைவர்கள், மனோதிடம், நேர்மை, ஆளுமை திறம், தனித்தன்மை, பதவி, அந்தஸ்து, கம்பீரமான தோற்றம், சுயகெளரவம், தான் என்ற கர்வம், அரசியல், அரசாங்கம், அதிகாரம், குறிக்கோள் ஆகிய காரகங்களை தரும். ஆளுமை மிக்கத் திறமை இருக்கவேண்டும் என்றால், ஜாதகத்தில் சூரியன் வலுமிக்கவனாக இருக்கவேண்டும். ஆளுமை என்பது ஊர் உலகத்தை ஆள்வது மட்டுமல்ல. வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் அதிகாரம்செய்வதையும் குறிக்கிறது. குடும்பத்தலைவன் சொல்வதை யாரும் கேட்கவில்லை என்றால், அதிகாரம் செல்லுபடியாகாத, வலுவிழந்த “டம்மி பீஸ்” என அர்த்தம்.
சமூகத்துக்குள் யாரோ ஒருவர் சொல்வதை மற்றவர்கள் எல்லோரும் கேட்பார்கள். அவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்தோம் என்றால், சூரியன் மிகவலுவாக இருக்கும். ஒரு சிலர் நல்லதையே சொல்வார்கள் அதை யாரும் காது கொடுத்தும் கேட்கமாட்டார்கள். இவர் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால், ஆளுமைத் திறம் குறைவாக இருக்கும். இந்த குறைபாட்டை முன்கூட்டியே அறிந்து, அதை பெருக்கிக் கொள்ள என்ன வழியோ, அதைப்பற்றி சிந்திக்கவெண்டும்.
“நா சொல்றத ஒருபய கூட கேக்கமாட்டீங்குறான்”னு விரக்தியடையக் கூடாது. .
இளமையில் கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறது என்றால், அதற்கு சூரியனும் ஒரு காரணம் தான். இலக்கினத்துக்கு ஒன்று, இரண்டாம் இடங்களில் சூரியன் நிற்க, கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறது.
அடிக்கடி எலும்புமுறிவு, இளம் வயதில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டவர்களும், அடிக்கடி பதவியில் இருந்து பதவி இறக்கம் செய்யப்படுபவர்களும், நேர்மை இழப்பவர்களும், கெளரவம் அற்றவர்களும், கம்பீரத்தோற்றத்தைஇழந்து வாடுபவர்களும், சூரியனுக்கு பரிகாரம் செய்துகொள்வது நல்லது
சூரியபலம் குறைவாய் உள்ளவர்களுக்கு, வெளிவட்டார மதிப்பே இருக்காது.
இலக்கினத்தில் சூரியனுடன் இராகு கூடியிருந்தால், களத்திர தோஷமாகும்., கும்பலக்கினமாக இருந்து, ஏழாமதிபதி சூரியன் 6, 8. 12 ம் வீடுகளில் அமர, கணவனை துன்பப் படுத்துபவளாகவும் இருப்பாள், இதே அமைப்பு பெண்களின் ஜாதகத்தில் இருந்தால், கணவனால் துன்பப்படுபவளாக இருப்பாள். 8, 12 மிடம் சரி. 6 மிடத்தையும் கூறுவதன் காரணம் என்னவென்றால், 6 மிடம் என்பது, 7 மிட களத்திர ஸ்தானத்துக்கு, 12 மிடமாக வருவதால், கும்பலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த கருத்து பொருந்தும். மேலும், சூரியனுடன் இராகு, கேது, சுக்கிரன், சனி கூடியுள்ளவர்களும், இலக்கினத்திலிருந்து 1, 2, 4, 5, 7, 8, 9, 12ம் வீடுகளில் சூரியன் இருக்கும் அமைப்புள்ளவர்களும், சூரியனால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.
சூரியன், சுக்கிரனுடன் கூடி, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12 முதலிய இடங்களில் அமர, கெட்டபலன்களே நடக்கும்.
சூரியன், சனியுடன் கூடி, 1, 2, 4, 7, 8, 12 முதலிய இடங்களில் அமர, கெட்டபலன்களே நடக்கும்.
இராகு, கேதுக்களுடன் சூரியன் கூடியிருக்கும் ஜாதகர்கள், அவசியமாக பரிகாரம் செய்துகொள்வது நல்லது.
மேடரசியில் சூரியன் உச்சம்பெற்றால், ஜாதகரின் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் ஜாதகரின் தந்தை நலிவடைந்துவிடுவார்.
சூரியனின் சுற்றுப்பாதையை விட்டு பூமி விலகும் ஐப்பசி மாதம். மழை பொழியும் காலம். சூரியனின் கிரணங்கள் பூமியை தொடமுடியாமல் போவதைப்போல், ஐப்பசியில் பிறந்தபிள்ளைக்கு, அப்பனின் ஆதரவு கிட்டாது. ஐப்பசியில் பிறந்துவிட்டேன் இனி உனக்கிங்கு என்னவேலை என்று அப்பனுக்கு நலிவையும்,ஆயுள் கேட்டையும் ஏற்படுத்தும். மேலும், துலாம் ராசியில் சூரியன் நீசமடைகிறது.
ஆதியில் பாம்பாய் உருவகப்படுத்தி, நிழலென்றும், மாயா என்றும் அழைக்கப்படும் இராகு, கேது இருவரும் ஜாதகத்தில் எந்தவீட்டில் அமர்ந்துள்ளனரோ, அந்த வீட்டின் அதிபதிகளும் சூரியனுக்கு எதிரிக்கிரகங்களாக, சூரியனால் கருதப்படும். இதை அந்தந்த கிரக தசா புக்திகள் நடக்கத் துவங்கியதும் அறிந்துகொள்ளலாம்..
மேடம், ரிடபம், மிதுனம்(சித்திரை, வைகாசி, ஆனி) இந்த மூன்று ராசிகளில்(மாதங்களில்) சூரியன் வலம் வரும்போது வெப்பமாய் தகித்த பூமியை காற்றால் குளிர்விக்க, வெப்பத்தை காற்று ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு நகர்த்திசென்று, வெப்பசலனத்தை உருவாக்குகிறது. காற்றடிக்கும் காலமான ஆடிமாதம் (கடகம்) சூரியனின் ஆற்றல் குறைவதால் ஆடிமாதபிள்ளை பிறப்பு தந்தைக்கு ஆகாத மாதமாகிறது. சூரியனுடன் சுபக்கிரகங்கள் கூடியிருந்தால் நல்லதே நடக்கும். ஆனால், கெட்டகிரகங்களான இராகு, கேது, சுக்கிரன், சனி கூடியிருக்க கெட்டதே நடக்கும். தன் வீடான சிம்மத்திற்கு பனிரெண்டாமிடமான, விரையத்தில், அதாவது கடகத்தில் தனித்து சூரியனிருக்க, சூரியனின் காரகங்கள் அனைத்தும் கெடும்.
இராகு, கேதுவுடன் இணையும் சூரியன் தன் செயல்பாட்டு காரகங்களை எல்லாம் இழந்து பலமிழக்கிறார். தான் வழங்க வேண்டிய பலன்களை வழங்கமுடியாமல், நிழல்கிரகங்கள் என்னபலன் தரவேண்டுமோ அந்த பலன்களைஅந்த இடத்திற்கு தகுந்தாற்போல் வழங்குகின்றன.
ஆனால், சூரியன் மற்ற கிரகங்களுடன் இணையும்போது, அந்த கிரகங்களின் காரகங்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தானே பலன்களை நிர்ணயம் செய்துகிறது. எந்த பாவகத்தில் கிரகங்கள் உள்ளனரோ, அந்த பாவகப்பலன்களை தரச்செய்கிறது.
இதையெல்லாம் எந்த காலகட்டத்தில் நடக்கும் என்பதும் ஆய்வுக்குரிய விடயம்தான். ஒருவன் கெளரவமாய் வாழ்கிறான் என்றால், அதை இழக்கப்பொகும் காலம் எது? ஒருவன் நேர்மையை தொலைக்கப்போகிறான் என்றால், அது எப்போது? ஒருவன் கம்பீரத்தை இழக்கப்போகிறான் என்றால் அது எப்போது?
கிரகணம் என்பது மறைப்பு. இராகு, சூரியன், சந்திரன், ஆகியவை ஏறத்தாழ ஒரு நேர்கோட்டில், ஒரே நட்சத்திரப் பாதத்தில் வரும்பொழுது, ஏழாம் இராசியில் கேது இருக்கும். அவ்வேளையில் பூமி இவர்களுக்கிடையே வரும் நிகழ்வே சூரியகிரகணமாகும்.
சூரியன் பலம்குறைந்தவனாய் தன் தசாவையோ, புக்தியையோ, அந்தரத்தையோ நடத்தும் காலத்தில், கெடுபலன்கள் நடக்கத் துவங்கும். மேலும், சூரியனுடன் இணைந்த கிரகங்களின் தசா, புக்தியிலும், இந்த பலன்களை செய்யும். அதனால், சூரியன் தொடர்புடைய தசாபுக்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
தங்கள் ஜாதகத்தில் சூரியன் கெட்டிருப்பவர்கள் மட்டுமல்ல. சூரியன் வலுவாக உள்ள ஜாதகர்களும், இந்த பரிகாரத்தை செய்யலாம். சூரியபலம் உள்ளவர்களுக்கு, இன்னும் பலம் கூடும் என்பது திண்ணம்.
வீடு வாசலை சுத்தம் செய்தபின், குளித்து முடித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை சூரியனுக்குரிய ஓரையான சூரியஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும். ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.(திங்கட்கிழமை என்றால் சந்திர ஓரை) யாருடைய ஜாதகத்தில் வலுகுறைந்த சூரியன் உள்ளாரோ அவர் மட்டும், பூஜைநேரத்தில் செம்மைநிற வேட்டியோ, சேலையோ, அணிந்து கொண்டு, ஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய், பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டு, தாமரைக்கொடியை திரியாக்கி (முடிந்தால்,இல்லையென்றால் பஞ்சே போதும்.) பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிடவேண்டும்.
சார்ட் அட்டையில் சூரியனுக்காக வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின் மேல் கோதுமை மாவினால் பூஜையறையிலோ, வழிபாட்டுத்தளத்திலோ, கால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும். மேலும், தாமிரத் தகட்டில் மயிலையோ, தேர்வடிவத்தையோ வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக காய்ந்த சந்தனத்தையும் எடுத்துவைத்துக் கொள்ளவும்.
பின்னர் சூடு ஆறாத சர்க்கரைப்பொங்கலை, நாம் இதுவரை புலங்காத, பயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும். சூரியனின் அதி தேவதையான சாந்த ரூபமான பரமசிவனின் படத்தையும், அதனருகில் எருக்கம்பூவையும் மந்திரக்கோலமருகில் வைக்கவும்.
சூரியனுக்கான மந்திரக்கோலம்.
சூரியன்.
வாழி பகல்செய்வோன் வாழி ஒளிஉருவன்
வாழியோர் ஆழித்தேர் மன்னுசுடர்_வாழியரோ
ஞாலம் விழிதிறப்ப நல்லோர் புகழுரைப்பக்
காலம் விளக்கும் கதிர்.
சூரியன் துதி
காசினில் இருளை நீக்கும் கதிர் ஒளிவீசி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தைநல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!
அபிராமி அந்தாதி.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுலம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடிமென் கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
இப்போது மனமுறுகி மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல், பார்த்துக் கொண்டே, எத்தனையோ பிறவிகளாய் தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் சூரியபகவானே! என சூரியனின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்க, பனிபோல் பிறவித்துன்பம் விலகும். சூரியனால் அதிகார பலமிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அனைவருக்கும் நன்மையே கிட்டும்.
ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவேளை சற்று காரத்துடன் சமைக்கப்பட்ட உணவையும், மறுவேளை கோதுமை உணவையும், தங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
உங்களின் ஜென்ம நட்சத்திரம் சூரிய சாரம் பெற்றிருந்தால், அதாவது, கார்த்திகை, உத்திரம், உத்ராடம் என இந்த மூன்றில் ஒன்று ஜென்மநட்சத்திரமாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும். அது கார்த்திகையில் பிறந்திருந்தால் அத்திமரத்தையும், உத்திரத்தில் பிறந்திருந்தால் அலரிமரத்தையும், உத்திராடத்தில் பிறந்திருந்தால், பலாமரத்தையும் நட்டு, பராமரித்துவந்தால், சூரியனால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.
நம்பிக்கை மட்டும்தான் வாழ்க்கையை வளமாக்கும்.
வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். அஞ்சல்.624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.
சூரியன்.
வாழி பகல்செய்வோன் வாழி ஒளிஉருவன்
வாழியோர் ஆழித்தேர் மன்னுசுடர்_வாழியரோ
ஞாலம் விழிதிறப்ப நல்லோர் புகழுரைப்பக்
காலம் விளக்கும் கதிர்.
சூரியன் துதி
காசினில் இருளை நீக்கும் கதிர் ஒளிவீசி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தைநல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!
அபிராமி அந்தாதி.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுலம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடிமென் கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
இப்போது மனமுறுகி மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல், பார்த்துக் கொண்டே, எத்தனையோ பிறவிகளாய் தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் சூரியபகவானே! என சூரியனின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்க, பனிபோல் பிறவித்துன்பம் விலகும். சூரியனால் அதிகார பலமிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அனைவருக்கும் நன்மையே கிட்டும்.
ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவேளை சற்று காரத்துடன் சமைக்கப்பட்ட உணவையும், மறுவேளை கோதுமை உணவையும், தங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
உங்களின் ஜென்ம நட்சத்திரம் சூரிய சாரம் பெற்றிருந்தால், அதாவது, கார்த்திகை, உத்திரம், உத்ராடம் என இந்த மூன்றில் ஒன்று ஜென்மநட்சத்திரமாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும். அது கார்த்திகையில் பிறந்திருந்தால் அத்திமரத்தையும், உத்திரத்தில் பிறந்திருந்தால் அலரிமரத்தையும், உத்திராடத்தில் பிறந்திருந்தால், பலாமரத்தையும் நட்டு, பராமரித்துவந்தால், சூரியனால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.
நம்பிக்கை மட்டும்தான் வாழ்க்கையை வளமாக்கும்.
வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். அஞ்சல்.624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.
No comments:
Post a Comment