Wednesday 29 October 2014

மந்திரமும்...கோலமும். சுக்கிரன்.

           
                               .                                          
இன்று சுக்கிரனைப்பற்றி அறிந்து கொள்வோம்உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் நிலையில்என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம்அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.
சுக்கிரன் அழகான கிரகம்எல்லாகிரகங்களும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும்போதுசுக்கிரன் மட்டும் சூரிய ஒளியை மிக அழகாக வெண்மைநிறத்தில் வாங்கி ஒளிரும்.  சூரியனுக்கும்பூமிக்கும் இடையில் ஒரு சுற்றுப்பாதையில் சூரியனைசுக்கிரன் சுற்றிவருகிறதுஇது சூரியனை சுற்றிவர 224 நாட்கள் எடுத்துக்கொள்கிறதுபூமியைப்போன்ற தோற்றப் பொலிவுடன் சுக்கிரன் இருப்பதால்பூமியும்சுக்கிரனும் இரட்டைக் கிரகங்களோ என எண்ணத்தோன்றுகிறது          சுக்கிரன் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான கிரகமாக இருப்பதால்அதன் காரகங்களும் கவர்ச்சிகரமாகவே இருக்கிறது.  அழகுகவர்ச்சிநளினம்மென்மைகாதல்களத்திரகாரகன்பெண்களால் கிட்டும் சுகத்தைக் குறிப்பவன்இல்லற உறவுகலைநிகழ்ச்சிபொழுதுபோக்குகேளிக்கைகளில் நாட்டம்எல்லாவித உடல் சுகம்ஆடம்பரம்சொகுசுபகட்டுஉல்லாசம்குருவைப்போலசுக்கிரனும் தனக்காரகன் தான்மக்களுக்குப் பயன்படும் பொதுப்பணத்திற்கு குரு காரகன்என்றால்தனிநபர் செலவழிக்கும் பணத்திற்கு சுக்கிரன் காரகன் ஆவார்குருவின் உலோகமான தங்கத்திற்குஅடுத்தபடியாக மக்கள் பயன்படுத்தும் வெள்ளிக்கு சுக்கிரன் காரகனாவார்புத்துணர்ச்சிக்கும்புது தெம்பிற்கும் விந்துசுரோணியம்ஹார்மோனிகள்கள்ளத்தொடர்புகள்ஆடம்பர பொருட்கள்இன்பங்களை நுகர்தல்மற்றவர்களை மயக்குதல்கலைஞர்கள்விபச்சாரிகள்ஒப்பனைஆடைஅலங்காரம்வண்டிவாகனம்சொகுசு மாளிகைஇயல் இசைநாடகம்நடனம்உயர்ரக மதுபானங்கள்வைரம்சுக்கிரனின் காரகங்களாகும்.
குருவுக்கடுத்த சுபக்கிரகம் சுக்கிரனாகும்ஆண்,பெண் இருபாலர் ஜாதகத்திலும் வலு நிறைந்த சுக்கிரனாக இருந்தால் மட்டும் தான்ஜாதகர்க்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும்சுக்கிரன் பகைநீசம்பெற்றோஅல்லது இலக்கினத்துக்கு 6, 8ல் மறைந்தோ இருந்தாலும்நீசக் கிரகத் தொடர்பு பெற்றிருந்தாலும்அஸ்தங்கம்வக்கிரம் பெற்று இருந்தாலும் திருமணம் என்பது காலம் கடந்துதான் நடக்கிறது.
 இரண்டுபனிரெண்டாமிடங்களில் சுக்கிரன் இருந்தால் கண்களில் கோளாறு ஏற்படுகிறதுஒரு கண் ஊனமானவன் தான் சுக்கிரன்கன்னி ராசியில் சுக்கிரன் தனித்து நின்றால்அது சந்நியாசி யோகத்தை தருகிறதுசுக்கிரன் பெண்கிரகம் என்பதால்ஆணின் ஜாதகத்தில்ஆண்ராசிகளான மேடம்மிதுனம்சிம்மம்துலாம்தனுசுகும்பம் இந்த ராசிகளில் இருக்கதன் மனைவிக்கு இரசனையுடன் ஆடையாபரணங்கள் “செலக்ட்”  பண்ணி தருவான். ஆணீன் ஜாதகத்தில் பெண்ராசிகளானரிடபம்கடகம்,கன்னிவிருச்சிகம்மகரம்மீனம் இதில் சுக்கிரன் இருக்க பிறந்தவர்கள்நடுத்தர வாழ்க்கை வாழ்வார்கள்பொதுவாகஆணின் ஜாதகத்தில் பெண்ராசியில் சுக்கிரன் இருக்கபோகம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்.ஆணின் ஜாதகத்தில் பெண்ராசிகளில் சுக்கிரன் இருக்கும் ஜாதகர்களும்பெண் ஜாதகத்தில் ஆண்ராசிகளில் சுக்கிரன் இருக்கும் ஜாதகிகளும்இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
மனதை குறிப்பவன் சந்திரன் என்பது எல்லோருக்கும் தெரியும்இன்பத்தையும்காதலையும்கவர்ச்சியையும்பெண்ணையும்குறிக்கும் கிரகம் சுக்கிரன்இவர்கள் இருவரும்,கூடஅதாவதுஇன்பமும்மனமும் கூட , மனத்துக்குள் நிரம்பிய,   இன்பவெறியை அடக்க மாட்டாதவனாய்அனுபவிக்கத் துடிப்பான்இவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
சுக்கிரன்செவ்வாய் கூட்டுபிருகு மங்கல யோகத்தைத் தந்துவிடும்திருமணத்திற்கு முன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பார்திருமணம் முடிந்தபின்மனைவியின் வழியில் கனத்த சொத்து வந்துசேரும்சுக்கிரன் இன்பத்தின் காரகன்செவ்வாய் இரத்தத்தின் காரகம்நல்ல இரத்தம் ஊறும்வரை ஆடித்தீர்ப்பார் எனலாம்மேலும்,
புதன்சுக்கிரன்குரு இந்த மூன்று சுபக்கிரகங்களும்ஒன்றுக்கொன்று திரிகோணம் பெற்றால்கவிஞராகலாம்இவர்கள் இராகுகேது தொடர்போஅட்டாமாதிபதி தொடர்போ இல்லாமல் இருக்கவேண்டும்ஒருவேளை தொடர்பு இருந்தால்அவர்கள் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது.சுக்கிரன்சூரியன் கூடியிருந்தால் திருமண தடையைத் தருகிறதுஇவர்கள் 2, 7, 8 இந்த வீடுகளில் இருக்கஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைத் தருகிறதுசுக்கிரன்சூரியன் கூடியுள்ள ஜாதகர்கள் போகத்தில் வெறியும்வேகமும் கொண்டவர்கள்அதனால்பொருத்தம் பார்க்கும்போதுஇதேபோன்ற ஈடுகொடுக்கும் ஜாதகங்களை இணைப்பது தான் சிறந்ததுஇவர்களை குரு போன்ற சுபக்கிரகம் காணவேண்டும்குரு பார்க்கவில்லையென்றால்அவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
ஆணுடைய ஜாதகத்தில் குருசுக்கிரன் கூடிநின்றால்அவர்கள் மனைவியின் சொல்கேட்டு அதன்படி நடப்பவராக இருப்பார்பெண்ணுடைய ஜாதகத்தில் குரு சுக்கிரன் கூடி எங்கு நின்றாலும்கணவரின் சொல்கேட்டு ஆடுபவராக இருப்பார்இவர்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
சுக்கிரன் இன்பத்டைக்குறிப்பவன் என்றும்சனி கர்மாவை குறிப்பவன் என்றும் நம் எல்லோருக்கும் தெரியும்இவர்கள் கூடுவது முன்வினைப்பயனால்,ஆணுடைய ஜாதகத்தில் கூடி இருந்தால் பெண்களால் அவமானமும்கேவலமும் ஏற்படும்பெண்களின் ஜாதகத்தில் கூடியிருந்தால்ஆண்களால் அவமானமும்கேவலமும் ஏற்படும்இந்த ஜாதக அமைப்பை உடையவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
சூரியன்புதன்சுக்கிரன்  மூன்றும்முக்கூட்டுக் கிரகங்களாகும்ஒன்றையொன்று விலகாமல் மூன்று ராசிகளுக்குள்ளாகவே பெயர்ந்து செல்லும்நான்காம்ராசியை ஒரு கிரகம் தொட்டால்அதற்கு பர்வத யோகம் என்று பெயர்சூரியன்புதன் மட்டும் கூடினால்புதாதித்ய யோகம் என்று பெயர்ஜாதகர் உயர் கல்வியை பெறுவார்இவர்களுடன் சுக்கிரன் கூடினால்கற்கும் கல்வியில் தடையேற்பட்டு விடும்இம்மூன்று கிரகங்களில் யாரோருவர் பகைநீசம் பெற்றால்கண்டிப்பாக கல்வியில் தடையேற்படும்இவர்களை குரு எனும் சுபக்கோள் காணதடைபட்ட கல்வி மீண்டும் துவங்கும்.
சுக்கிரனும்சூரியனும் கூடி, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12 முதலிய வீடுகளில் இருக்ககெட்டபலன்களும் நடக்கும். 9, 10, 11 வீடுகளில் மட்டும் இருவரும் கூட நல்லபலன்களே நடக்கும்.
சுக்கிரனும்சந்திரனும் கூடி, 3, 6, 8, 12 முதலிய வீடுகளில் இருக்ககெட்டபலன்களும் நடக்கும். 1, 2, 4, 5, 7, 9, 10, 11 வீடுகளில் மட்டும் இருவரும் கூட நல்லபலன்களே நடக்கும்.
சுக்கிரனும்செவ்வாயும் கூடி, 1, 2, 4, 5, 6, 7, 8,12 முதலிய வீடுகளில் இருக்ககெட்டபலன்களும் நடக்கும். 3, 9, 10, 11 வீடுகளில் மட்டும் இருவரும் கூட நல்லபலன்களே நடக்கும்.
சுக்கிரனும்புதனும் கூடி, 3, 8, 12 முதலிய வீடுகளில் இருக்ககெட்டபலன்களும் நடக்கும். 1, 2, 4, 5, 6, 7, 9, 10, 11,  வீடுகளில் மட்டும் இருவரும் கூட நல்லபலன்களே நடக்கும்.சுக்கிரனும்குருவும் கூடியிருந்த பலன்ஏற்கனவே குருவைப் பற்றிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுக்கிரனும்சனியும் கூடி, 1, 2, 4, 5, 7, 8, 12 முதலிய வீடுகளில் இருக்ககெட்டபலன்களும் நடக்கும். 3, 6, 9,10, 11 வீடுகளில் மட்டும் இருவரும்கூட நல்லபலன்களே நடக்கும்.
கடகம்சிம்மம்தனுசுமீனம் இந்த நான்கு லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நன்மையான பலன்களை தருவதில்லைஇவர்களுக்கு சுக்கிரதசை நடப்பில் இருந்தாலும்புக்தி நடப்பில் இருந்தாலும் இந்த எளிய பரிகாரத்தை இடைவிடாமல் செய்து வருவது நல்லது.
சுக்கிரனுக்கு பகைபெற்ற கிரகங்களான சூரியனும்சந்திரனும்,   தன் தசாபுக்தி   அந்தரங்களில்  கெட்டபலன்களே தருகின்றனஇவர்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம்.
 சுக்கிரனுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும்யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும்சுக்கிரனைப்பற்றி அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள்இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலேஉங்கள் ஜாதகத்தில்  சுக்கிரன் எங்கே உள்ளது என்பதை அறிந்துஇங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும்கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.வீடு வாசலை சுத்தம் செய்தபின்குளித்து முடித்து  வெள்ளிக்        கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை       சுக்கிரனுக்குரிய ஓரையான சுக்கிர ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும்.  ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.(சனிக்கிழமை என்றால் சனிஓரையாருடைய ஜாதகத்தில் வலுக்குறைந்த  சுக்கிரன் உள்ளாரோ அவர் மட்டும்பூஜைநேரத்தில்      வெண்மைநிற வேட்டியோசேலையோஅணிந்து கொண்டுஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய்பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டுபஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும்சார்ட் அட்டையில்        சுக்கிரனுக்காக  வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல்  மொச்சையை பொடி செய்த மாவினால்  பூஜையறையிலோவழிபாட்டுத்தளத்திலோகால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும்மேலும்,  வெள்ளித்தகட்டில் அல்லது  வெள்ளிநிறத்தாளில்  கருடன் போல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும்தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்துஅதில் இடுவதற்காக  இலவங்கப்பொடியை எடுத்து வைத்துக் கொள்ளவும்பின்னர் நெய் பொங்கலைநாம் இதுவரை புலங்காதபயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும்.  சுக்கிரனின் அதிதேவதையான இந்திராணிலட்சுமிஅல்லது வருணன் படத்தையும்அதனருகில்  அத்தி இலையையும் மந்திரக் கோலம் அருகில்  வைக்கவும்.
 வெள்ளிக்கிழமையன்று ஒருவேளை உணவாக  நெய் பொங்கல் சாதத்தையும்மறுவேளை மொச்சையை அவித்துதாளித்து   உணவாக்கிக்கொள்ளதங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.இப்போது மனமுறுகி  மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல்பார்த்துக் கொண்டேஎத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டு தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய்   அசுரகுரு சுக்கிர பகவானே!    என சுக்கிரனின்     துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்கபனிபோல் பிறவித்துன்பம் விலகும்.
               சுக்கிரன்.
வல்லவுணர் தம்குரவன் மாய்ந்தார் உயிர்பெறவேசொல்லுமனுவை அறிவான்சுக்கிரன்என் றெல்லவரும்சாற்றும் பெரியான்சடைமுடியான் மாரிக்கோள்போற்றுவெள்ளி என்றே புகல்.
                 சுக்கிரன் துதி.
மூர்க்கவான் சூரன் வாணன் முதலியோர் குருவாய் வையம்காக்க வான்மழை பொய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன்தீர்க்க வானவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்பார்க்கவன் சுக்கிரன் தன் பாதபங்கயன் போற்றி!!
   அபிராமி அந்தாதி.
மணியேமணியின் ஒளியேஒளிரும் மணிபுனைந்தஅணியேஅணியும் அணிக்கழகேஅணுகாதவர்க்குப்பிணியேபிணிக்கு மருந்தேஅமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரைநின்பத்ம பாதம் பணிந்தபின்னே!                                                          24.
       சுக்கிரனின் கிரகக்கோலம்.
பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்கமுன்னே தவங்கள் முயன்று கொண்டேன்முதன் மூவருக்கும்அன்னேஉலகுக்(குஅபிராமி என்னும் அருமருந்தே!
என்னே இனியுன்னை யான் மறவாமல் ஏத்துவனே!                                                      25.
பொருளேபொருள் முடிக்கும் போகமேஅரும் போகம் செய்யும்மருளேமருளில் வரும் தெருளேஎன்மனத்து வஞ்சதிருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்அருளேதறிகின்றிலேன்அம்புயா தனத்த    அம்பிகையே!                                                  36.
 உங்களின் ஜென்ம நட்சத்திரம்    சுக்கிர சாரம் பெற்றிருந்தால்அதாவது பரணிபூரம்பூராடம்என இந்த மூன்றில் ஒன்றுஜென்ம நட்சத்திரமாக இருந்தால்அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும்அது பரணியில் பிறந்திருந்தால் நெல்லி    மரத்தையும்பூரத்தில்  பிறந்திருந்தால்பலாமரத்தையும்,   பூராடத்தில் பிறந்திருந்தால்வஞ்சிமரத்தையும்,     நட்டுபராமரித்துவந்தால்சுக்கிரனால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.
 இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் சுக்கிரன்   இருந்தால்பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம்இது மட்டுமல்லசுக்கிரன் கன்னியில்    நீசம் பெற்ற   அமைப்பையுடையவர்களும்இலக்கினத்துக்கு 3, 8, ல் சுக்கிரன் மறைந்துள்ளவர்களும்இலக்கினாதிபதிக்கு 3,  8, ல் சுக்கிரன் மறைந்து உள்ளவர்களும்,  பாவியானசூரியன்சந்திரனுடன் கூடியசுக்கிரன் எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும்இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லதுசுக்கிரன் தசைசுக்கிரன் புக்தி,  அல்லது சுக்கிரன் அந்தரம்இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும்சுக்கிரன் தசையோசுக்கிரன் புக்தியோ நடப்பில் இருப்பவர்களோஅல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும்இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும்சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர்அஞ்சல்.624 701
 ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.
                                   

No comments:

Post a Comment