.
இன்று சுக்கிரனைப்பற்றி அறிந்து கொள்வோம். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் நிலையில், என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம். அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.
சுக்கிரன் அழகான கிரகம். எல்லாகிரகங்களும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும்போது, சுக்கிரன் மட்டும் சூரிய ஒளியை மிக அழகாக வெண்மைநிறத்தில் வாங்கி ஒளிரும். சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் ஒரு சுற்றுப்பாதையில் சூரியனை, சுக்கிரன் சுற்றிவருகிறது. இது சூரியனை சுற்றிவர 224 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பூமியைப்போன்ற தோற்றப் பொலிவுடன் சுக்கிரன் இருப்பதால், பூமியும், சுக்கிரனும் இரட்டைக் கிரகங்களோ என எண்ணத்தோன்றுகிறது சுக்கிரன் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான கிரகமாக இருப்பதால், அதன் காரகங்களும் கவர்ச்சிகரமாகவே இருக்கிறது. அழகு, கவர்ச்சி, நளினம், மென்மை, காதல், களத்திரகாரகன், பெண்களால் கிட்டும் சுகத்தைக் குறிப்பவன், இல்லற உறவு, கலைநிகழ்ச்சி, பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் நாட்டம், எல்லாவித உடல் சுகம், ஆடம்பரம், சொகுசு, பகட்டு, உல்லாசம், குருவைப்போல, சுக்கிரனும் தனக்காரகன் தான். மக்களுக்குப் பயன்படும் பொதுப்பணத்திற்கு குரு காரகன்என்றால், தனிநபர் செலவழிக்கும் பணத்திற்கு சுக்கிரன் காரகன் ஆவார். குருவின் உலோகமான தங்கத்திற்கு, அடுத்தபடியாக மக்கள் பயன்படுத்தும் வெள்ளிக்கு சுக்கிரன் காரகனாவார். புத்துணர்ச்சிக்கும், புது தெம்பிற்கும் விந்து, சுரோணியம், ஹார்மோனிகள், கள்ளத்தொடர்புகள், ஆடம்பர பொருட்கள், இன்பங்களை நுகர்தல், மற்றவர்களை மயக்குதல், கலைஞர்கள், விபச்சாரிகள், ஒப்பனை, ஆடை, அலங்காரம், வண்டி, வாகனம், சொகுசு மாளிகை, இயல் இசை, நாடகம், நடனம், உயர்ரக மதுபானங்கள், வைரம், சுக்கிரனின் காரகங்களாகும்.
குருவுக்கடுத்த சுபக்கிரகம் சுக்கிரனாகும். ஆண்,பெண் இருபாலர் ஜாதகத்திலும் வலு நிறைந்த சுக்கிரனாக இருந்தால் மட்டும் தான், ஜாதகர்க்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். சுக்கிரன் பகை, நீசம்பெற்றோ, அல்லது இலக்கினத்துக்கு 6, 8ல் மறைந்தோ இருந்தாலும், நீசக் கிரகத் தொடர்பு பெற்றிருந்தாலும், அஸ்தங்கம், வக்கிரம் பெற்று இருந்தாலும் திருமணம் என்பது காலம் கடந்துதான் நடக்கிறது.
இரண்டு, பனிரெண்டாமிடங்களில் சுக்கிரன் இருந்தால் கண்களில் கோளாறு ஏற்படுகிறது. ஒரு கண் ஊனமானவன் தான் சுக்கிரன். கன்னி ராசியில் சுக்கிரன் தனித்து நின்றால், அது சந்நியாசி யோகத்தை தருகிறது. சுக்கிரன் பெண்கிரகம் என்பதால், ஆணின் ஜாதகத்தில், ஆண்ராசிகளான மேடம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ராசிகளில் இருக்க, தன் மனைவிக்கு இரசனையுடன் ஆடையாபரணங்கள் “செலக்ட்” பண்ணி தருவான். ஆணீன் ஜாதகத்தில் பெண்ராசிகளான, ரிடபம், கடகம்,கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இதில் சுக்கிரன் இருக்க பிறந்தவர்கள், நடுத்தர வாழ்க்கை வாழ்வார்கள். பொதுவாக, ஆணின் ஜாதகத்தில் பெண்ராசியில் சுக்கிரன் இருக்க, போகம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்.ஆணின் ஜாதகத்தில் பெண்ராசிகளில் சுக்கிரன் இருக்கும் ஜாதகர்களும், பெண் ஜாதகத்தில் ஆண்ராசிகளில் சுக்கிரன் இருக்கும் ஜாதகிகளும், இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
மனதை குறிப்பவன் சந்திரன் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்பத்தையும், காதலையும், கவர்ச்சியையும், பெண்ணையும், குறிக்கும் கிரகம் சுக்கிரன். இவர்கள் இருவரும்,கூட, அதாவது, இன்பமும், மனமும் கூட , மனத்துக்குள் நிரம்பிய, இன்பவெறியை அடக்க மாட்டாதவனாய், அனுபவிக்கத் துடிப்பான். இவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
சுக்கிரன், செவ்வாய் கூட்டு, பிருகு மங்கல யோகத்தைத் தந்துவிடும். திருமணத்திற்கு முன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பார். திருமணம் முடிந்தபின், மனைவியின் வழியில் கனத்த சொத்து வந்துசேரும். சுக்கிரன் இன்பத்தின் காரகன். செவ்வாய் இரத்தத்தின் காரகம். நல்ல இரத்தம் ஊறும்வரை ஆடித்தீர்ப்பார் எனலாம். மேலும்,
புதன், சுக்கிரன், குரு இந்த மூன்று சுபக்கிரகங்களும், ஒன்றுக்கொன்று திரிகோணம் பெற்றால், கவிஞராகலாம். இவர்கள் இராகு, கேது தொடர்போ, அட்டாமாதிபதி தொடர்போ இல்லாமல் இருக்கவேண்டும். ஒருவேளை தொடர்பு இருந்தால், அவர்கள் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது.சுக்கிரன், சூரியன் கூடியிருந்தால் திருமண தடையைத் தருகிறது. இவர்கள் 2, 7, 8 இந்த வீடுகளில் இருக்க, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைத் தருகிறது. சுக்கிரன், சூரியன் கூடியுள்ள ஜாதகர்கள் போகத்தில் வெறியும், வேகமும் கொண்டவர்கள். அதனால், பொருத்தம் பார்க்கும்போது, இதேபோன்ற ஈடுகொடுக்கும் ஜாதகங்களை இணைப்பது தான் சிறந்தது. இவர்களை குரு போன்ற சுபக்கிரகம் காணவேண்டும். குரு பார்க்கவில்லையென்றால், அவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
ஆணுடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன் கூடிநின்றால், அவர்கள் மனைவியின் சொல்கேட்டு அதன்படி நடப்பவராக இருப்பார். பெண்ணுடைய ஜாதகத்தில் குரு சுக்கிரன் கூடி எங்கு நின்றாலும், கணவரின் சொல்கேட்டு ஆடுபவராக இருப்பார். இவர்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
சுக்கிரன் இன்பத்டைக்குறிப்பவன் என்றும், சனி கர்மாவை குறிப்பவன் என்றும் நம் எல்லோருக்கும் தெரியும். இவர்கள் கூடுவது முன்வினைப்பயனால்,ஆணுடைய ஜாதகத்தில் கூடி இருந்தால் பெண்களால் அவமானமும், கேவலமும் ஏற்படும். பெண்களின் ஜாதகத்தில் கூடியிருந்தால், ஆண்களால் அவமானமும், கேவலமும் ஏற்படும். இந்த ஜாதக அமைப்பை உடையவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
சூரியன், புதன், சுக்கிரன் மூன்றும், முக்கூட்டுக் கிரகங்களாகும். ஒன்றையொன்று விலகாமல் மூன்று ராசிகளுக்குள்ளாகவே பெயர்ந்து செல்லும். நான்காம்ராசியை ஒரு கிரகம் தொட்டால், அதற்கு பர்வத யோகம் என்று பெயர். சூரியன், புதன் மட்டும் கூடினால், புதாதித்ய யோகம் என்று பெயர். ஜாதகர் உயர் கல்வியை பெறுவார். இவர்களுடன் சுக்கிரன் கூடினால், கற்கும் கல்வியில் தடையேற்பட்டு விடும். இம்மூன்று கிரகங்களில் யாரோருவர் பகை, நீசம் பெற்றால், கண்டிப்பாக கல்வியில் தடையேற்படும். இவர்களை குரு எனும் சுபக்கோள் காண, தடைபட்ட கல்வி மீண்டும் துவங்கும்.
சுக்கிரனும், சூரியனும் கூடி, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12 முதலிய வீடுகளில் இருக்க, கெட்டபலன்களும் நடக்கும். 9, 10, 11 வீடுகளில் மட்டும் இருவரும் கூட நல்லபலன்களே நடக்கும்.
சுக்கிரனும், சந்திரனும் கூடி, 3, 6, 8, 12 முதலிய வீடுகளில் இருக்க, கெட்டபலன்களும் நடக்கும். 1, 2, 4, 5, 7, 9, 10, 11 வீடுகளில் மட்டும் இருவரும் கூட நல்லபலன்களே நடக்கும்.
சுக்கிரனும், செவ்வாயும் கூடி, 1, 2, 4, 5, 6, 7, 8,12 முதலிய வீடுகளில் இருக்க, கெட்டபலன்களும் நடக்கும். 3, 9, 10, 11 வீடுகளில் மட்டும் இருவரும் கூட நல்லபலன்களே நடக்கும்.
சுக்கிரனும், புதனும் கூடி, 3, 8, 12 முதலிய வீடுகளில் இருக்க, கெட்டபலன்களும் நடக்கும். 1, 2, 4, 5, 6, 7, 9, 10, 11, வீடுகளில் மட்டும் இருவரும் கூட நல்லபலன்களே நடக்கும்.சுக்கிரனும், குருவும் கூடியிருந்த பலன், ஏற்கனவே குருவைப் பற்றிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுக்கிரனும், சனியும் கூடி, 1, 2, 4, 5, 7, 8, 12 முதலிய வீடுகளில் இருக்க, கெட்டபலன்களும் நடக்கும். 3, 6, 9,10, 11 வீடுகளில் மட்டும் இருவரும்கூட நல்லபலன்களே நடக்கும்.
கடகம், சிம்மம், தனுசு, மீனம் இந்த நான்கு லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நன்மையான பலன்களை தருவதில்லை. இவர்களுக்கு சுக்கிரதசை நடப்பில் இருந்தாலும், புக்தி நடப்பில் இருந்தாலும் இந்த எளிய பரிகாரத்தை இடைவிடாமல் செய்து வருவது நல்லது.
சுக்கிரனுக்கு பகைபெற்ற கிரகங்களான சூரியனும், சந்திரனும், தன் தசாபுக்தி அந்தரங்களில் கெட்டபலன்களே தருகின்றன. இவர்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம்.
சுக்கிரனுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும், யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும், சுக்கிரனைப்பற்றி அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள். இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலே, உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கே உள்ளது என்பதை அறிந்து, இங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும், கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.வீடு வாசலை சுத்தம் செய்தபின், குளித்து முடித்து வெள்ளிக் கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை சுக்கிரனுக்குரிய ஓரையான சுக்கிர ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும். ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.(சனிக்கிழமை என்றால் சனிஓரை) யாருடைய ஜாதகத்தில் வலுக்குறைந்த சுக்கிரன் உள்ளாரோ அவர் மட்டும், பூஜைநேரத்தில் வெண்மைநிற வேட்டியோ, சேலையோ, அணிந்து கொண்டு, ஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய், பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டு, பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும். சார்ட் அட்டையில் சுக்கிரனுக்காக வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல் மொச்சையை பொடி செய்த மாவினால் பூஜையறையிலோ, வழிபாட்டுத்தளத்திலோ, கால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும். மேலும், வெள்ளித்தகட்டில் அல்லது வெள்ளிநிறத்தாளில் கருடன் போல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக இலவங்கப்பொடியை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் நெய் பொங்கலை, நாம் இதுவரை புலங்காத, பயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும். சுக்கிரனின் அதிதேவதையான இந்திராணி, லட்சுமி, அல்லது வருணன் படத்தையும், அதனருகில் அத்தி இலையையும் மந்திரக் கோலம் அருகில் வைக்கவும்.
வெள்ளிக்கிழமையன்று ஒருவேளை உணவாக நெய் பொங்கல் சாதத்தையும், மறுவேளை மொச்சையை அவித்து, தாளித்து உணவாக்கிக்கொள்ள, தங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.இப்போது மனமுறுகி மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல், பார்த்துக் கொண்டே, எத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டு தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் அசுரகுரு சுக்கிர பகவானே! என சுக்கிரனின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்க, பனிபோல் பிறவித்துன்பம் விலகும்.
சுக்கிரன்.
வல்லவுணர் தம்குரவன் மாய்ந்தார் உயிர்பெறவேசொல்லுமனுவை அறிவான்: சுக்கிரன்என் றெல்லவரும்சாற்றும் பெரியான்; சடைமுடியான் மாரிக்கோள்போற்றுவெள்ளி என்றே புகல்.
சுக்கிரன் துதி.
மூர்க்கவான் சூரன் வாணன் முதலியோர் குருவாய் வையம்காக்க வான்மழை பொய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன்தீர்க்க வானவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்பார்க்கவன் சுக்கிரன் தன் பாதபங்கயன் போற்றி!!
அபிராமி அந்தாதி.
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்தஅணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை; நின்பத்ம பாதம் பணிந்தபின்னே! 24.
சுக்கிரனின் கிரகக்கோலம்.
பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்கமுன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதன் மூவருக்கும்அன்னே! உலகுக்(கு) அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே இனியுன்னை யான் மறவாமல் ஏத்துவனே! 25.
பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும் போகம் செய்யும்மருளே! மருளில் வரும் தெருளே! என்மனத்து வஞ்சதிருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்அருளே! தறிகின்றிலேன்; அம்புயா தனத்த அம்பிகையே! 36.
உங்களின் ஜென்ம நட்சத்திரம் சுக்கிர சாரம் பெற்றிருந்தால், அதாவது பரணி, பூரம், பூராடம், என இந்த மூன்றில் ஒன்று, ஜென்ம நட்சத்திரமாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும். அது பரணியில் பிறந்திருந்தால் நெல்லி மரத்தையும், பூரத்தில் பிறந்திருந்தால், பலாமரத்தையும், பூராடத்தில் பிறந்திருந்தால், வஞ்சிமரத்தையும், நட்டு, பராமரித்துவந்தால், சுக்கிரனால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.
இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் சுக்கிரன் இருந்தால், பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம். இது மட்டுமல்ல. சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்ற அமைப்பையுடையவர்களும், இலக்கினத்துக்கு 3, 8, ல் சுக்கிரன் மறைந்துள்ளவர்களும், இலக்கினாதிபதிக்கு 3, 8, ல் சுக்கிரன் மறைந்து உள்ளவர்களும், பாவியான, சூரியன், சந்திரனுடன் கூடிய, சுக்கிரன் எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும், இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது. சுக்கிரன் தசை, சுக்கிரன் புக்தி, அல்லது சுக்கிரன் அந்தரம், இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும், சுக்கிரன் தசையோ, சுக்கிரன் புக்தியோ நடப்பில் இருப்பவர்களோ, அல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும், சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். அஞ்சல்.624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.
No comments:
Post a Comment