Wednesday, 29 October 2014

மந்திரமும்…கோலமும். குரு.

           
                                              
இன்று   குருவைப்பற்றி அறிந்து கொள்வோம்உங்கள் ஜாதகத்தில்   குரு இருக்கும் நிலையில்என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம்அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.
சூரியனிலிருந்து ஐந்தாவதாக சுழன்றுகொண்டிருக்கும்மிகப்பெரிய கோள்குரு என்றும்வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது.  சூரியனுக்கு அருகே உள்ள புதன்வெள்ளிபூமிசெவ்வாய்  முதலிய கிரகங்கள் பாறைகளால் ஆனதுஆனால்சூரியனைப்போல வியாழனும் வாயுக்கோளமாகும்பூமிதன்னைத் தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரத்தை எடுத்துக்கொள்ளும் என்பது சிறுகுழந்தைகளுக்குக் கூடத் தெரியும்ஆனால்வியாழன் கிரகத்துக்குள் 1321 பூமிகளை புதைக்கும் அளவுக்கும்பூமியைப் போல 11 மடங்கு சுற்றளவும் கொண்ட மிகப்பெரிய வியாழன் கிரகம்தன்னைத்தானே மணி 09. 50  நிமிடத்திற்கு மிகவேகமாக சுற்றி வருகிறது.. அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் சுழல்கிறதுசூரியனைசுற்றிவர, 12 ஆண்டுகளாகும்அப்படியானால்சூரியனைச்சுற்றும் வியாழக்கிரகத்தின் சுற்றுப்பாதையின் விரிவை நினைத்துப்பாருங்கள்.
பெரியமனித தன்மைமதிக்கத் தகுந்தவர்சாந்தம்பண்பாடுநீதி,நேர்மைதர்ம சிந்தனைஒழுக்கம்கட்டுப்பாடுநல்ல ஆலோசனை தருபவர்தெய்வ நம்பிக்கை, ஆசிரியர்இறைவனை சுட்டிக்காட்டுபவர்ஆன்மீகவாதிகள்மடாதிபதிகள்தெய்வீகப்பணி செய்பவர்கள்ஞானிகள்பொதுப்பணம்தனிநபர்களுக்கு சொந்தமற்ற பெரியளவிலான பணம், அரசாங்க கருவூலம்வங்கியிலுள்ள பணம்தானதர்மங்கள் செய்யும் பெரும்தனவான், குழந்தைசட்டம்ஒழுங்குநீதிபதிகள்நீதிமன்றம்நேர்மையான சட்ட நடவடிக்கைகள்வயிற்றுப்பகுதிக்கும்,  வயிற்றுப்பகுதிக்குள் இருக்கும் கல்லீரல்கொழுப்புக்கும் குருவே காரகமாகும்சுத்தம்பாரம்பரியம்புரோகிதம்மத நம்பிக்கைகோவில்சாத்திரஞானம்மந்திர உச்சாடனம்கல்விநிறுவனங்கள்பருத்த உடல்ஆலோசனை கூறுபவர் முதலிய காரகங்களை குரு தருவார்.
கோவில்குளம்மந்திரம்சட்டம்ஒழுங்குபொதுப்பணம் இவைதான் குருவின் பொதுவான காரகங்களாக உள்ளது.
தனித்த கிரகமாக இராசிகளில் குரு நிற்கஜாதகர்க்கு எந்தவிதமான நல்லபலன்களும் நடைபெறுவதில்லைபிராமண வர்க்கமாக சொல்லப்படும் குருதனித்து இயங்க இயலாதவனாக இருக்கிறார்.  இவருடன் நல்லகிரகமோகெட்டகிரகமோ ஏதோவொன்று கூடும்போதுதான் குருவின் செயல்படும் திறன் அதிகரிக்கும்கூடும் கிரகத்தின் சாதக பாதகத்தையும்சாரம் வழங்கிய கிரகத்தின் வலுவையும் பொறுத்தே குருவின் சுபத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறதுகடகத்தில் உச்சம்பெறும் குருதனித்த கிரகமாக அங்கே நின்றால்எந்த நல்லபலனும் ஜாதகர்க்கு நிகழ்ந்துவிடப் போவதில்லைகடகத்தில் உச்சம் என்கிற நிலையைப்பெறும் குருதன்னுடைய புனர்பூசத்திலே சாரம்பெற்று இருந்தால்நன்மையான பலனையும்சமக்கிரகமான சனியின் பூசத்திலோ சாரம்பெற்று இருக்கும்போதுஇலக்கினத்திற்கு சனியின் வீடுகளான மகரம்கும்பம் வீடுகள் எந்த பாவத்தில்   உள்ளது என்பதைக் கொண்டும்சனி அமர்ந்திருக்கும் இடம்இலக்கினத்திற்கு எப்படி உள்ளது என்பதை அறிந்தும் பலன்கள் தீர்மானிக்கப்படவேண்டும்பகைபெற்ற புதனின் ஆயில்ய சாரம்பெறும்பொது தீமையான பலன்களையும் செய்து விடுகிறது.
குரு சந்திரனால் ஏற்படும்குரு,சந்திரயோகத்தைப்பற்றியும்கஜகேசரி யோகத்தைப்பற்றியும்சந்திரனுக்கான கட்டுரையில் பார்த்தோம்அதில் சுனபாஅனபாஆதி யோகம்அமலா யோகம்வசுமதி யோகம் என குருவுக்கும்சந்திரனுக்குமான பலயோகங்கள் இருக்கின்றனநம்முடைய நோக்கம் யோகங்களைப்பற்றி விரிவாக கூறுவது அல்லகுருவால் நிகழப்போகும் கெடுபலன்களைப்பற்றி கூறுவது தான்அதனால்சகடயோகத்தைப்பற்றிக் காண்போம்குருவுக்கு சந்திரனோசந்திரனுக்கு குருவோ 6, 8 லிருந்தால் சகடயோகம் ஏற்படும்நிலையானதொழிலோ,   வருமானமோ இருக்காதுதொழில் இருந்தாலும்வருமானம் பற்றாக் குறையாக இருக்கும்.  இப்பொதுகுருவுக்கோசந்திரனுக்கோ 12ல் இருவரில் ஒருவர் இருந்தாலும்அது சுனபாஅனபா யோகமாகிவிடும்அதனால்யாருடைய ஜாதகத்திலும்   6, 8 மிடங்களில்குருவும்சந்திரனும் இருந்தால்அவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லதுமேலும்,
புத்திரக்காரகன் என்று குருவை அழைப்பார்கள்இவர் யாருடைய ஜாதகத்திலாவதுஐந்தாமிடமெனும் புத்திர ஸ்தானத்திலே இருந்தால், “கிரகம் பாவக நாஸ்தி” என்கிற அடிப்படையில்புத்திரத்தை வழங்கும் இடத்தை பாழ்படுத்திவிடும்ஐந்தாமிடத்தில் குரு இருக்கும் ஜாதகர்களும்ஐந்தாமிடத்தில் குருஇராகு இருக்கும் ஜாதகர்களும் இந்த எளியபரிகாரத்தை செய்வது நல்லது.
ரிடபம்மிதுனம்கன்னிதுலாம் இந்த நான்கு இலக்கினக்காரர்களுக்கு குரு அதிகமான தீமைசெய்யக்கூடிய கிரகமாக இருக்கும்இந்த நான்கு இலக்கினக்காரர்களும் எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
குருவும்சூரியனும் கூடி, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12 முதலிய இடங்களில் இருந்தால் தீமையான பலன்களே ஏற்படுகிறது. 9, 10, 11 இந்த இடங்களில் இருந்தால் நல்லபலன்களே நடக்கிறது.
குருவும்சந்திரனும் கூடி, 3, 6, 8, 12 முதலிய இடங்களில் இருந்தால் தீமையான பலன்களே நடக்கிறது. 1, 2, 4, 5, 7, 9, 10, 11 முதலிய இடங்களில் கூடினால்நல்லபலன்களே நடக்கிறது.
குருவும்செவ்வாயும் கூடி, 1, 2, 6, 7, 8, 12 முதலிய இடங்களில் தீமையான பலன்களே நடக்கிறது. 3, 4, 5, 9, 10, 11 முதலிய இடங்களில் கூடினால்நல்லபலன்களே நடக்கிறது.
குருவும்புதனும் கூடியுள்ள பலன்களைப்பற்றிபுதன் கட்டுரையில் காணலாம்.
குருவும்சுக்கிரனும் கூடி, 3, 6, 8, 12 முதலிய இடங்களில் தீமையான பலன்களே நடக்கிறதுஏனைய 1, 2, 4, 5, 7, 9, 10, 11 முதலிய இடங்களில் கூடினால்நல்லபலன்களே நடக்கிறது.
குருவும்சனியும் கூடி, 1, 2, 4, 5, 6, 7, 8, 12முதலிய இடங்களில் தீமையான பலன்களே நடக்கிறதுமற்ற 3, 9, 10, 11 முதலிய இடங்களில் கூடினால்நல்ல பலன்களே நடக்கிறது.
சந்திரன்சனியைப்போல் குருவும் ஓர் நீர்க்கிரகமாகும்கடக அதிபதி சந்திரனும்மகர அதிபதி சனியும்மீன அதிபதி குருவும்ஒன்றையொன்று பார்வையாலோகூடியோ தங்களுக்குள் ஓர் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்இந்த அமைப்பு இருந்தால் மட்டுமேகடல்கடந்து வேலைக்கு செல்லவேண்டும்இம்மூவரையும் கடன் எதிரியைத்தரும் 6 ம் அதிபதியோ,அதிகமாக உழைத்து பணம்பெற முடியாத நிலையையும்ஆயுள்,

இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம்சட்டத்திற்குப் புறம்பான செயல்கள்நட்டம் முதலிய இடங்களைக் குறிக்கும் மிட அதிபதியோஇரகசிய எதிரிகள்தனிமைப்படுத்தப்ப்டல்சிறைச்சாலைவெளிநாடு செல்வது,வெளிநாட்டு குடியுரிமை பெறுவதுமறைமுக எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத நிலைவிரையங்கள் முதலிய இடங்களைக் குறிக்கும் 12 மிட அதிபதியோ காண்பது கடல்கடந்து செல்லும் உழைப்பாளிகளுக்கு கடும் பிரச்சனையைத் தருகிறதுஇவர்கள் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது.
மிதுனம்கன்னியை இலக்கினமாகக் கொண்ட ஜாதகர்களும்சூரியனின் ஸ்புடத்துக்கு முன்னும்பின்னும் 15 பாகையில் குரு அஸ்தங்கம் அடையும் அமைப்பைக் கொண்டவர்களும்குரு வக்கிரமடைந்த ஜாதகத்தைக் கொண்டவர்களும்

 குருவுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும்யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும்,     குருவைப்பற்றி அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள்இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலேஉங்கள் ஜாதகத்தில் குரு         எங்கே உள்ளது என்பதை அறிந்துஇங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும்கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.

வீடு வாசலை சுத்தம் செய்தபின்குளித்து முடித்து வியாழக்        கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை      குருவுக்குரிய ஓரையான     குரு ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும்.  ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.(வெள்ளிக்கிழமை என்றால்   சுக்கிரஓரையாருடைய ஜாதகத்தில் வலுக் குறைந்த குரு உள்ளாரோ அவர் மட்டும்பூஜைநேரத்தில்     மஞ்சள்நிற வேட்டியோசேலையோஅணிந்து கொண்டுஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய்பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டுபஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும்சார்ட் அட்டையில்       குருவுக்காக  வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல் பச்சைக்கடலை மாவினால் (கொண்டைக் கடலைபூஜையறையிலோவழிபாட்டுத்தளத்திலோகால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும்மேலும்பொன்தகட்டில் அல்லது பொன் நிறதாளில் யானைபோல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும்தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்துஅதில் இடுவதற்காக ஆம்பலை (காய்ந்த அல்லி இதழைஎடுத்து வைத்துக் கொள்ளவும்பின்னர்  தயிர்சாதத்தைநாம் இதுவரை புலங்காதபயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும்குருவின் அதிதேவதையான இந்திரன்     படத்தையும்அதனருகில் அரசு இலையையும்         மந்திரக் கோலம் அருகில்  வைக்கவும்.
                    குரு
வாசவனார் போற்றுகுரு வாக்குக் கொருதலைவன்
தேசுறுபொன் போன்ற திருமெய்யாந் மாசில்அச்சு
மாலைதண்டம் குண்டிகைசின் முத்திரைகை
சீலன் வியாழனென்று தேர்.
                    குரு துதி.
மறைமிகு கலைநூல் வல்லான் வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர் பாதம் போற்றி!!!
             அபிராமி அந்தாதி
தண்ணளிக்கென்று முன்னே பல கோடி தலங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே!             
                                                                 15வதுபாடல்
விரவும் புதுமலரிட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே. 83                                                                       


வியாழக்கிழமையன்று ஒருவேளை உணவாக தயிர் சாதத்தையும்மறுவேளை கொண்டைக்கடலையை    அவித்துதாளித்து   உணவாக்கிக்கொள்ளதங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது மனமுறுகி  மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல்பார்த்துக் கொண்டேஎத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டு தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய்  குரு பகவானே!    என   குருவின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்கபனிபோல் பிறவித்துன்பம் விலகும்.
உங்களின் ஜென்ம நட்சத்திரம்   குருசாரம் பெற்றிருந்தால்அதாவது புனர்பூசம்விசாகம்பூரட்டாதி   என இந்த மூன்றில் ஒன்றுஜென்ம நட்சத்திரமாக இருந்தால்அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும்அது  புனர்பூசத்தில்   பிறந்திருந்தால்   மூங்கில்மரத்தையும்விசாகத்தில் பிறந்திருந்தால்,  விளா  மரத்தையும்பூரட்டாதியில் பிறந்திருந்தால்மாமரத்தையும்,     நட்டுபராமரித்துவந்தால்குருவால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.
இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் குரு இருந்தால்பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம்இது மட்டுமல்ல .  குரு கடகத்தில் நீசம் பெற்ற   அமைப்பையுடையவர்களும்இலக்கினத்துக்கு 3, 6, 8, 12ல்  குரு மறைந்துள்ளவர்களும்இலக்கினாதிபதிக்கு 3, 6, 8, 12ல்   குரு      மறைந்து உள்ளவர்களும்,  பாவியானபுதன்சுக்கிரனுடன் கூடிய குருஎவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும்இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லதுகுரு தசைகுரு புக்திஅல்லது குரு அந்தரம்இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும்குரு தசையோகுரு புக்தியோ நடப்பில் இருப்பவர்களோஅல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும்இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும்சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர்அஞ்சல்.624 701
 ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.




    
          




No comments:

Post a Comment