இன்று குருவைப்பற்றி அறிந்து கொள்வோம். உங்கள் ஜாதகத்தில் குரு இருக்கும் நிலையில், என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம். அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.
சூரியனிலிருந்து ஐந்தாவதாக சுழன்றுகொண்டிருக்கும், மிகப்பெரிய கோள். குரு என்றும், வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுக்கு அருகே உள்ள புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் முதலிய கிரகங்கள் பாறைகளால் ஆனது. ஆனால், சூரியனைப்போல வியாழனும் வாயுக்கோளமாகும். பூமிதன்னைத் தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரத்தை எடுத்துக்கொள்ளும் என்பது சிறுகுழந்தைகளுக்குக் கூடத் தெரியும். ஆனால், வியாழன் கிரகத்துக்குள் 1321 பூமிகளை புதைக்கும் அளவுக்கும், பூமியைப் போல 11 மடங்கு சுற்றளவும் கொண்ட மிகப்பெரிய வியாழன் கிரகம், தன்னைத்தானே மணி 09. 50 நிமிடத்திற்கு மிகவேகமாக சுற்றி வருகிறது.. அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் சுழல்கிறது. சூரியனைசுற்றிவர, 12 ஆண்டுகளாகும். அப்படியானால், சூரியனைச்சுற்றும் வியாழக்கிரகத்தின் சுற்றுப்பாதையின் விரிவை நினைத்துப்பாருங்கள்.
பெரியமனித தன்மை, மதிக்கத் தகுந்தவர், சாந்தம், பண்பாடு, நீதி,நேர்மை, தர்ம சிந்தனை, ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல ஆலோசனை தருபவர், தெய்வ நம்பிக்கை, ஆசிரியர், இறைவனை சுட்டிக்காட்டுபவர், ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள், தெய்வீகப்பணி செய்பவர்கள், ஞானிகள், பொதுப்பணம், தனிநபர்களுக்கு சொந்தமற்ற பெரியளவிலான பணம், அரசாங்க கருவூலம், வங்கியிலுள்ள பணம், தானதர்மங்கள் செய்யும் பெரும்தனவான், குழந்தை, சட்டம், ஒழுங்கு, நீதிபதிகள், நீதிமன்றம், நேர்மையான சட்ட நடவடிக்கைகள், வயிற்றுப்பகுதிக்கும், வயிற்றுப்பகுதிக்குள் இருக்கும் கல்லீரல், கொழுப்புக்கும் குருவே காரகமாகும். சுத்தம், பாரம்பரியம், புரோகிதம், மத நம்பிக்கை, கோவில், சாத்திரஞானம், மந்திர உச்சாடனம், கல்விநிறுவனங்கள், பருத்த உடல், ஆலோசனை கூறுபவர் முதலிய காரகங்களை குரு தருவார்.
கோவில், குளம், மந்திரம், சட்டம், ஒழுங்கு, பொதுப்பணம் இவைதான் குருவின் பொதுவான காரகங்களாக உள்ளது.
தனித்த கிரகமாக இராசிகளில் குரு நிற்க, ஜாதகர்க்கு எந்தவிதமான நல்லபலன்களும் நடைபெறுவதில்லை. பிராமண வர்க்கமாக சொல்லப்படும் குரு, தனித்து இயங்க இயலாதவனாக இருக்கிறார். இவருடன் நல்லகிரகமோ, கெட்டகிரகமோ ஏதோவொன்று கூடும்போதுதான் குருவின் செயல்படும் திறன் அதிகரிக்கும். கூடும் கிரகத்தின் சாதக பாதகத்தையும், சாரம் வழங்கிய கிரகத்தின் வலுவையும் பொறுத்தே குருவின் சுபத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. கடகத்தில் உச்சம்பெறும் குரு, தனித்த கிரகமாக அங்கே நின்றால், எந்த நல்லபலனும் ஜாதகர்க்கு நிகழ்ந்துவிடப் போவதில்லை. கடகத்தில் உச்சம் என்கிற நிலையைப்பெறும் குரு, தன்னுடைய புனர்பூசத்திலே சாரம்பெற்று இருந்தால், நன்மையான பலனையும், சமக்கிரகமான சனியின் பூசத்திலோ சாரம்பெற்று இருக்கும்போது, இலக்கினத்திற்கு சனியின் வீடுகளான மகரம், கும்பம் வீடுகள் எந்த பாவத்தில் உள்ளது என்பதைக் கொண்டும், சனி அமர்ந்திருக்கும் இடம், இலக்கினத்திற்கு எப்படி உள்ளது என்பதை அறிந்தும் பலன்கள் தீர்மானிக்கப்படவேண்டும். பகைபெற்ற புதனின் ஆயில்ய சாரம்பெறும்பொது தீமையான பலன்களையும் செய்து விடுகிறது.
குரு சந்திரனால் ஏற்படும், குரு,சந்திரயோகத்தைப்பற்றியும், கஜகேசரி யோகத்தைப்பற்றியும், சந்திரனுக்கான கட்டுரையில் பார்த்தோம். அதில் சுனபா, அனபா, ஆதி யோகம், அமலா யோகம், வசுமதி யோகம் என குருவுக்கும், சந்திரனுக்குமான பலயோகங்கள் இருக்கின்றன. நம்முடைய நோக்கம் யோகங்களைப்பற்றி விரிவாக கூறுவது அல்ல. குருவால் நிகழப்போகும் கெடுபலன்களைப்பற்றி கூறுவது தான். அதனால், சகடயோகத்தைப்பற்றிக் காண்போம். குருவுக்கு சந்திரனோ, சந்திரனுக்கு குருவோ 6, 8 லிருந்தால் சகடயோகம் ஏற்படும். நிலையானதொழிலோ, வருமானமோ இருக்காது. தொழில் இருந்தாலும், வருமானம் பற்றாக் குறையாக இருக்கும். இப்பொது, குருவுக்கோ, சந்திரனுக்கோ 12ல் இருவரில் ஒருவர் இருந்தாலும், அது சுனபா, அனபா யோகமாகிவிடும். அதனால், யாருடைய ஜாதகத்திலும் 6, 8 மிடங்களில், குருவும், சந்திரனும் இருந்தால், அவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது. மேலும்,
புத்திரக்காரகன் என்று குருவை அழைப்பார்கள். இவர் யாருடைய ஜாதகத்திலாவது, ஐந்தாமிடமெனும் புத்திர ஸ்தானத்திலே இருந்தால், “கிரகம் பாவக நாஸ்தி” என்கிற அடிப்படையில், புத்திரத்தை வழங்கும் இடத்தை பாழ்படுத்திவிடும். ஐந்தாமிடத்தில் குரு இருக்கும் ஜாதகர்களும். ஐந்தாமிடத்தில் குரு, இராகு இருக்கும் ஜாதகர்களும் இந்த எளியபரிகாரத்தை செய்வது நல்லது.
ரிடபம், மிதுனம், கன்னி, துலாம் இந்த நான்கு இலக்கினக்காரர்களுக்கு குரு அதிகமான தீமைசெய்யக்கூடிய கிரகமாக இருக்கும். இந்த நான்கு இலக்கினக்காரர்களும் எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
குருவும், சூரியனும் கூடி, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12 முதலிய இடங்களில் இருந்தால் தீமையான பலன்களே ஏற்படுகிறது. 9, 10, 11 இந்த இடங்களில் இருந்தால் நல்லபலன்களே நடக்கிறது.
குருவும், சந்திரனும் கூடி, 3, 6, 8, 12 முதலிய இடங்களில் இருந்தால் தீமையான பலன்களே நடக்கிறது. 1, 2, 4, 5, 7, 9, 10, 11 முதலிய இடங்களில் கூடினால், நல்லபலன்களே நடக்கிறது.
குருவும், செவ்வாயும் கூடி, 1, 2, 6, 7, 8, 12 முதலிய இடங்களில் தீமையான பலன்களே நடக்கிறது. 3, 4, 5, 9, 10, 11 முதலிய இடங்களில் கூடினால், நல்லபலன்களே நடக்கிறது.
குருவும், புதனும் கூடியுள்ள பலன்களைப்பற்றி, புதன் கட்டுரையில் காணலாம்.
குருவும், சுக்கிரனும் கூடி, 3, 6, 8, 12 முதலிய இடங்களில் தீமையான பலன்களே நடக்கிறது. ஏனைய 1, 2, 4, 5, 7, 9, 10, 11 முதலிய இடங்களில் கூடினால், நல்லபலன்களே நடக்கிறது.
குருவும், சனியும் கூடி, 1, 2, 4, 5, 6, 7, 8, 12முதலிய இடங்களில் தீமையான பலன்களே நடக்கிறது. மற்ற 3, 9, 10, 11 முதலிய இடங்களில் கூடினால், நல்ல பலன்களே நடக்கிறது.
சந்திரன், சனியைப்போல் குருவும் ஓர் நீர்க்கிரகமாகும். கடக அதிபதி சந்திரனும், மகர அதிபதி சனியும், மீன அதிபதி குருவும், ஒன்றையொன்று பார்வையாலோ, கூடியோ தங்களுக்குள் ஓர் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த அமைப்பு இருந்தால் மட்டுமே, கடல்கடந்து வேலைக்கு செல்லவேண்டும். இம்மூவரையும் கடன் எதிரியைத்தரும் 6 ம் அதிபதியோ,அதிகமாக உழைத்து பணம்பெற முடியாத நிலையையும், ஆயுள்,
இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம். சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், நட்டம் முதலிய இடங்களைக் குறிக்கும் 8 மிட அதிபதியோ, இரகசிய எதிரிகள், தனிமைப்படுத்தப்ப்டல், சிறைச்சாலை, வெளிநாடு செல்வது,வெளிநாட்டு குடியுரிமை பெறுவது, மறைமுக எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத நிலை, விரையங்கள் முதலிய இடங்களைக் குறிக்கும் 12 மிட அதிபதியோ காண்பது கடல்கடந்து செல்லும் உழைப்பாளிகளுக்கு கடும் பிரச்சனையைத் தருகிறது. இவர்கள் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது.
மிதுனம், கன்னியை இலக்கினமாகக் கொண்ட ஜாதகர்களும், சூரியனின் ஸ்புடத்துக்கு முன்னும், பின்னும் 15 பாகையில் குரு அஸ்தங்கம் அடையும் அமைப்பைக் கொண்டவர்களும், குரு வக்கிரமடைந்த ஜாதகத்தைக் கொண்டவர்களும்
குருவுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும், யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும், குருவைப்பற்றி அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள். இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலே, உங்கள் ஜாதகத்தில் குரு எங்கே உள்ளது என்பதை அறிந்து, இங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும், கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.
வீடு வாசலை சுத்தம் செய்தபின், குளித்து முடித்து வியாழக் கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை குருவுக்குரிய ஓரையான குரு ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும். ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.(வெள்ளிக்கிழமை என்றால் சுக்கிரஓரை) யாருடைய ஜாதகத்தில் வலுக் குறைந்த குரு உள்ளாரோ அவர் மட்டும், பூஜைநேரத்தில் மஞ்சள்நிற வேட்டியோ, சேலையோ, அணிந்து கொண்டு, ஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய், பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டு, பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும். சார்ட் அட்டையில் குருவுக்காக வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல் பச்சைக்கடலை மாவினால் (கொண்டைக் கடலை) பூஜையறையிலோ, வழிபாட்டுத்தளத்திலோ, கால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும். மேலும், பொன்தகட்டில் அல்லது பொன் நிறதாளில் யானைபோல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக ஆம்பலை (காய்ந்த அல்லி இதழை) எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் தயிர்சாதத்தை, நாம் இதுவரை புலங்காத, பயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும். குருவின் அதிதேவதையான இந்திரன் படத்தையும், அதனருகில் அரசு இலையையும் மந்திரக் கோலம் அருகில் வைக்கவும்.
குரு
வாசவனார் போற்றுகுரு வாக்குக் கொருதலைவன்
தேசுறுபொன் போன்ற திருமெய்யாந் மாசில்அச்சு
மாலைதண்டம் குண்டிகைசின் முத்திரைகை
சீலன் வியாழனென்று தேர்.
குரு துதி.
மறைமிகு கலைநூல் வல்லான் வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர் பாதம் போற்றி!!!
அபிராமி அந்தாதி
தண்ணளிக்கென்று முன்னே பல கோடி தலங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே!
15வதுபாடல்
விரவும் புதுமலரிட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே. 83
வியாழக்கிழமையன்று ஒருவேளை உணவாக தயிர் சாதத்தையும், மறுவேளை கொண்டைக்கடலையை அவித்து, தாளித்து உணவாக்கிக்கொள்ள, தங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது மனமுறுகி மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல், பார்த்துக் கொண்டே, எத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டு தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் குரு பகவானே! என குருவின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்க, பனிபோல் பிறவித்துன்பம் விலகும்.
உங்களின் ஜென்ம நட்சத்திரம் குருசாரம் பெற்றிருந்தால், அதாவது புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என இந்த மூன்றில் ஒன்று, ஜென்ம நட்சத்திரமாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும். அது புனர்பூசத்தில் பிறந்திருந்தால் மூங்கில்மரத்தையும், விசாகத்தில் பிறந்திருந்தால், விளா மரத்தையும், பூரட்டாதியில் பிறந்திருந்தால், மாமரத்தையும், நட்டு, பராமரித்துவந்தால், குருவால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.
இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் குரு இருந்தால், பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம். இது மட்டுமல்ல . குரு கடகத்தில் நீசம் பெற்ற அமைப்பையுடையவர்களும், இலக்கினத்துக்கு 3, 6, 8, 12ல் குரு மறைந்துள்ளவர்களும், இலக்கினாதிபதிக்கு 3, 6, 8, 12ல் குரு மறைந்து உள்ளவர்களும், பாவியான, புதன், சுக்கிரனுடன் கூடிய குரு, எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும், இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது. குரு தசை, குரு புக்தி, அல்லது குரு அந்தரம், இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும், குரு தசையோ, குரு புக்தியோ நடப்பில் இருப்பவர்களோ, அல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும், சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். அஞ்சல்.624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.
No comments:
Post a Comment