Wednesday 29 October 2014

மந்திரமும்…கோலமும். சனி

      
இன்று  சனியைப்பற்றி அறிந்து கொள்வோம்உங்கள் ஜாதகத்தில் சனி இருக்கும் நிலையில்என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம்அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.

ஈஸ்வரப்பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிதான்இந்த பெயரைக் கேட்டதும்நமக்குள் சின்ன அதிர்வு இருக்கத்தான் செய்கிறதுசூரியக் குடும்பத்தில் சூரியனிடமிருந்து ஆறாவது கோளாக அமைந்துள்ளதுசூரிய குடும்பத்தில் இரண்டாவதாகப் பெரியக்கோள் சனியாகும்இக்கிரகத்துள் எப்போதும் புயல் வீசிக்கொண்டே இருக்கும்அதனால் தான்ஜாதகத்தில் சனியால் கெடுபலன்கள் நடக்கத் துவங்கினால், “சனிப்புயல்” குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவிடும்மற்ற கிரகத்தைப்போல இல்லாமல்சனிக்கிரகம் பனித் துகள்களையும்பாறைத் துகள்களையும்தூசிகளையும்வானவெளியில் சிதறடித்து விடாமல்தன்னுடைய ஈர்ப்பினால்அவைகளையும் இழுத்துக்கொண்டு சுற்றி வருகிறது.

இது எப்படி இருக்கிறது என்றால்குடும்பத்தில் ஒருவருக்கு சனியால் பாதிப்பு ஏற்படுகிறது என்றாலும்ஒட்டுமொத்தக் குடும்பமேஅந்த வலியையும்வேதனையும் தாங்கமுடியாமல் திணறுவதைப்போல்தன் ஈர்ப்பில் சிக்கிய எதையும் தன்னைவிட்டு அகலாமல் இழுத்துச் செல்கிறதுகுருவுக்கு 63 நிலவுகளும்சனிக்கு 61 நிலவுகள் உள்ளதாக அறிவியாலார்கள் தெரிவித்துள்ளனர்இதில் புதனைவிட பெரிய துணைக்கோள்களும் உள்ளனசூரியனை விட்டு விலகி வெகுதூரத்தில் உள்ளதால்சூரியனின் கதிர்கள் சனியை தொடுவதுகூட இல்லைஅதனால்தான்ஜாதகத்தில் சூரியனுக்கு அடங்காத மகனாக சனியை சித்தரிக்கப் பட்டுள்ளார்சூரியனுக்கு சனி பகையாகவும்சனிக்கு சூரியன் பகையாகவும் சொல்லப்பட்டுள்ளது.

காலதாமதம்சோம்பேறிகள்ஊனமுற்றவர்கள்வயதான நபர்கள்இளமையில் கிழத்தோற்றம்ஆயுள்கரியநிறம்அடிமைகள்கடைநிலை ஊழியர்கள்வேலைக்காரர்கள்,  அழுக்கான சேரிகளில் வசிப்பவர்இருட்டுசின்ன சின்ன திருட்டுதொழில் காரகன்,  அதிகாரமற்ற சீருடை பணியாளர்கள்வலிதுக்கம்வேதனைகருப்பு நிறம்இரும்புஉடலிலுள்ள எல்லாகழிவுப்பொருட்கள்தோல்கரிய நிற முடிஆண்,பெண் மலட்டுத்தன்மைஇரவுவேலைபொய்கஞ்சத்தனம்சில்லறைவறுமைஊனம்ஏமாறுதல்ஏக்கம்அக்கம்பக்கம்அமைதியான வீட்டு விலங்குகள்பக்கவாதம்விடாமுயற்சிவிவேகம்இழப்புதத்துவம்,  ஆகிய காரகங்களைக் கொண்டதாகும்.

பொதுவாக சனிக்கிரகம் பாவத்தன்மை மிகுந்த கிரகமாகும்சனியின் பலன்கள் எல்லாம்துக்கம்வேதனைவலிஅழுகைபயம்இவற்றில் எல்லாம் நம்மை சிக்கவைத்தாலும்துன்பகாலங்களில் முடிவில்புடம்போட்ட தங்கமாய்நல்லவனாய்பொறுமைமிக்கவனாய்சாத்வீககுணம் நிரம்பியவனாய் மாற்றிவிடுகிறதுசனியின் ஆரம்ப  பலன்கள் துன்பமாக இருந்தாலும்முடிவில் நல்லதாகவே முடியும்.

கலி என்கிற யுகம் உண்மைக்கும்நேர்மைக்கும் எதிரானதாகும்சிறு திருட்டை சனி குறிப்பது போலபெரிய திருட்டை இராகு குறிக்கிறார்ஞானத்தையும்சந்நியாசத்தையும் தரும் கிரகம் கேதுவாகும்இந்த மூன்றுகிரகங்கள் தான் கலியுகத்தை ஆட்சி செய்கின்றனஇந்த யுகத்தில் கொள்ளையும்கொலையும்ஏமாற்றுதலும்ஞானமும்துறவும் படும்பாடு என்ன என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

 ஒவ்வொரு மதத்திலும் உள்ள மதவாதிகள் செய்த கொலையும்பாலியல் கொடுமையும்குற்றப்பிண்ணனியும்வன்கொடுமைகளும்துறவு மற்றும் ஞானத்தைப்பற்றிய புரிதலை நமக்கு காட்டுகின்றனஇந்த சனிஇராகுகேதுவெனும் மூன்றுகிரகங்களும்   கலியுகத்தை ஆட்சி செய்யும்வரைஇவை எதுவும் குறையாது.


சனி என்கிற இருள் கிரகத்துக்குஒளிக்கிரகமான சூரியனும்சந்திரனும் பகைக்கிரகங்களாகும்மந்தமாக செயல்படும் சனிக்குதுரிதமாகவும்சிந்திக்காமலும் செயல்படும் செவ்வாயும் பகைக்கிரகமாகும்.

சூரியனிலிருந்து வெகுதொலைவில் இருப்பதால்சூரியனின் கதிர்கள் சனியை சென்றடைவதில்லைஅதனால்இருள் சூழ்ந்த கிரகமாகவே இருக்கிறதுஇருட்டுக்குள் இருப்பவன் நல்லவனாகெட்டவனாஎன்பது தெரியாதுதிருடனுக்கும்கொலைகாரனுக்கும்படுபாதகம் செய்பவனுக்கும்ஓடி ஒளிபவனுக்கும் எப்படி இருட்டு தான் ஏற்ற மறைவிடமாக   இருக்கிறதோஅதேபோலஎத்தனை பிறவியெடுத்தோம்எடுத்த அத்தனை பிறவிகளிலும் என்ன வினை செய்தோம்  என்கிற நினைவே இல்லாமல்இந்தபிறவியில் மாட்டிக் கொண்ட நமக்குஎந்த கர்மவினை எப்படித் தீர்க்கவேண்டும் என்கிற வித்தை தெரிந்த தர்மதேவன் சனிதான் நீதிபதிஇவன் தீர்ப்புக்கு பரிகாரமில்லைவாய்தாவும் இல்லைபல தொப்புள் கொடியின் தொடர்பைக் கண்டதுதான் கர்மா.   
சூரியன்சனியுடன் கூடி, 1, 2, 4, 7, 8, 12 முதலிய இடங்களில் அமரகெட்டபலன்களே நடக்கும்இதை சூரியனைப் பற்றிய கட்டுரையிலே கண்டுள்ளோம்இதன் காரணம் என்னவெனில்ஒன்றாமிடம் என்பது உயிர்ஸ்தானமாகும்இதில் சூரியன் இருக்க அசுபபலனே ஏற்படும்அதேபோல்சனியும் அங்கே இருந்தால்திருமணத்தால் கெட்டபெயரே ஏற்படும்அசுபபலனே தான் மிஞ்சும்இவை மட்டுமல்லாதுசந்திரனும் கூடி நின்றால்அது ஜென்ம சனியாகிவிடும்அப்படியானால்கொடுமைக்கு அளவு இல்லாமல் போய்விடும்.

இரண்டாமிடம் குடும்ப ஸ்தானமாகும்இதில் சூரியன்சனி கூடமனைவியுடன்  வாழாத நிலையைத் தருவார்கள்நான்காமிடம் சுகஸ்தானமாகும்இவர்கள் கூட சுகவாழ்வே இல்லாத நிலையையும்ஏழாமிடம் களத்திர ஸ்தானமாகும்திருமணவாழ்வு கோர்ட்கேஸ் என தள்ளாடும்எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானமாகும்தாலியை அறுத்தெறியும் நிலைக்கு ஆளாவர்பனிரெண்டாமிடம் படுக்கை ஸ்தானமாகும்சண்டைசச்சரவில் தூக்கம் எங்கே வரும்இப்படி சூரியன்சனி கூடுவது குடும்ப வாழ்வுக்கு ஆகாது.

சனியும்சந்திரனும் கூடி, 1, 2, 4, 5, 6, 7, 8, 12  முதலிய வீடுகளில் அமரஅசுபபலனே நடக்கும்இதில்சூரியனை விட ஐந்தாமிட புத்திரஸ்தானமும்ஆறாமிடம் கடன் வழக்குகளைக் குறிக்கும்இதில் சூரியனைவிட சந்திரனே சனியுடன் கூடும்போது அசுபபலனை அதிகம் தருகிறது.

செவ்வாய்புதன்குருசுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் சனி கூடும் பலனைஒவ்வொரு கிரகத்துக்கான   கட்டுரையிலும் காணலாம்இந்த கூட்டுகளும் குடும்பவாழ்வுக்கு ஆகாத நிலையைத்தான் தருகிறது.
திருமணத்திற்கும்சனிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு செய்யும் போதுதிருமணப்பிரச்சனைகள்மனைவிகளத்திரஸ்தானம் என்று ஏழாம்வீட்டுக் காரகத்தைத் தருவதாக ஜாதகபாரிஜாதம் எனும் நூல் கூறுகிறது.

எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் நாம் வாழும் வாழ்வுஇரண்டு வழிகளில் தான் பயணப்படும்ஒன்று இல்லறம்மற்றொன்று துறவறம்இப்படித்தான் பெரும்பாலும் அமைகிறதுஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிமரங்களும் தவித்து வருகின்றனகர்மாவெனும் பிறவித் தொடுப்பால் தான்இல்லறமும்துறவறமும்தனிமரமும் ஏற்படுகிறதுஇல்லற சோகங்களுக்கு சனியும்துறவற முடிவுகளுக்கு கேதுவும் பொறுப்பேற்கின்றனஇவைகளுக்குள் ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு இராகு எனும் போகக் காரகனான   பெரும் திருடனே பொறுப்பு ஏற்கிறான்.

ஜென்மராசிக்கு (அதாவது சந்திரன் இருக்கும் வீட்டிற்கு) 12- 1-2 ம் ராசிகளை சனி கடக்கத் துவங்கும் காலங்களில்அந்த ஜாதகர்க்கு ,“ஏழரை நாட்டு சனி” துவங்குகிறது.
ஜென்மராசிக்கு, 4ம் வீட்டில் சனி சஞ்சரிக்கத் துவங்கும் காலங்களில்அந்த ஜாதகர்க்கு, “அர்த்தாஷ்டமச் சனி” துவங்குகிறது.
ஜென்மராசிக்கு, 7ம் வீட்டில் சனி சஞ்சரிக்கத் துவங்கும் காலங்களில்அந்த ஜாதகர்க்கு, “கண்டச்சனி” துவங்குகிறது.
ஜென்மராசிக்கு, 8ம் வீட்டில் சனி சஞ்சரிக்கத் துவங்கும் காலங்களில்அந்த ஜாதகர்க்கு, “அஷ்டமச்சனி” துவங்குகிறது.
அர்த்தாஷ்டமச்சனிகண்டச்சனிஅஷ்டமச்சனி இந்த மூன்றும்ஏறத்தாழ ஒரேவிதமான கெட்டபலன்களைத் தரும்ஏழரைச்சனியில் முதல் சுற்றுமங்குசனி என்பர்இது கஷ்ட நஷ்டத்தை தரும்இரண்டாம் சுற்றைபொங்கு சனி என்பர்இது சிரமத்தைத் தரும்ஆனால்வாழ்வில் திருப்புமுனையை தரும்மூன்றாம் சுற்றைமரணச்சனி என்பர்உடல்நலக் கோளாறும்மரணமும் இதில் ஏற்படும்.

இந்த மூன்றுவிதமான (4, 7, 8) சனியில் 7 ½ ஆண்டுகளும்ஏழரைச்சனியில் (12,1,2) 7 ½ ஆண்டுகள் என 15 ஆண்டுகளும்மிகமோசமான பலன்களைத் தந்துவிடும்மேலும்,
 5 மிடம் புத்திர சோகத்தையும்பிறரை நிந்தித்துபோட்டிபொறாமையுடன் வாழ்வார். 9 மிடம் சகோதரரால் கஷ்டநஷ்டம்தகப்பன் தோஷம்மக்களின் வெறுப்புடன் வாழ்க்கை முதலிய பலன்களும், 10 மிடத்தில் சுமாரான பலன்களும் ஏற்படும்.
மீதம் இருக்கும் 3, 6, 11 மிடம் மட்டுமே சனியால் நல்லபலன்களை தந்துவிடமுடியும்இந்த 3,6,11 மிடத்தில் இருக்கும் சனியும்பிறப்புகாலத்தில் வலுவுடன் இருந்தால்தான் நல்லபலன்களைத் தரமுடியும்மாறாகஅஸ்தங்கமோவக்கிரமோசூரியசந்திரசெவ்வாய் தொடர்போஅட்டமாதிபதியுடனான இணைவோ இருந்தால் கெட்டபலன்களே நடக்கும்ஞானக்காரகன் கேதுவும்கர்மக்காரகன் சனியும் கூடமுன் ஜென்ம வினைப்பயனால்இல்லறவாழ்வில் இழுபறி ஏற்படும்.

ஜாதகர்க்கு சனிதசையோசனிபுக்தியோசனி அந்தரமோ நடப்பில் இருந்துசனியால் பெருங்கொடுமையை சந்திப்பவராக இருந்தால்அவர்கள் சனிக்கிரகத்துக்கு சாந்தி செய்வதுகொள்வது நல்லதுதன் வீட்டிலோசனியின் திருத்தலங்களானதிருநள்ளாறுகுச்சனூரிலோதன் சொந்த ஊரில் சிவத்தலத்திலோ சின்னசின்ன பரிகாரங்களை செய்யலாம்.
இரவு நேரத்தில் கைப்பிடி எள்ளை கருப்புத்துளியில் சுற்றி தலையணைக்கு கீழ் வைத்து படுத்துறங்க வேண்டும்காலையில் தூங்கி எழுந்ததும்வடித்த சாதத்துடன் எள்ளை கலந்து காகத்துக்கு வைத்துவரசனியால் நடக்கும் கெடுபலன்கள் குறையத் துவங்கும்.

குச்சனூரிலோதிருநள்ளாறிலோ இரவு தங்கியிருந்துகாலையில் நள தீர்த்தத்தில் நீராடி விட்டுசனீஸ்வரனை வழிபட கெடுபலன்கள் குறையும்.
வளர்பிறைதேய்பிறை காலங்களில் வரும் திரயோதசி திதியில் சிவத்தலங்களில் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும்அந்த திரயோதசி திதியும்சனிக்கிழமையும் கூடிவரும் நாளே சனிப்பிரதோஷ நாளாகும்இந்த தினம் மிகவும் விசேடமானதாகும்அன்று வழிபாடு செய்தால்சனியால் நடக்கும் கெடுபலன்கள் குறையும்.

சனியுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும்யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும்சனியைப்பற்றி அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள்இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலேஉங்கள் ஜாதகத்தில் சனி எங்கே உள்ளது என்பதை அறிந்துஇங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும்கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.

வீடு வாசலை சுத்தம் செய்தபின்குளித்து முடித்து   சனிக்        கிழமை காலையில் 6.00மணிமுதல் 7.00வரை        சனிக்குரிய ஓரையான  சனி ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும்.  ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்யாருடைய ஜாதகத்தில் வலுக்குறைந்த சனி உள்ளாரோ அவர் மட்டும்பூஜைநேரத்தில்       கருப்புநிற வேட்டியோசேலையோஅணிந்து கொண்டுஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய்பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டுபஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும்சார்ட் அட்டையில் சனிக்காக  வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல்  எள்ளை  பொடிசெய்த  தூளினால்  பூஜையறையிலோவழிபாட்டுத்தளத்திலோகால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும்மேலும்இரும்புத்தகட்டில் காகம்       போல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும்தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்துஅதில் இடுவதற்காக கருங்காலிப்பொடியை எடுத்து வைத்துக் கொள்ளவும்பின்னர் எள்சாதத்தைநாம் இதுவரை புலங்காதபயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும்.  

 சனியின் அதிதேவதையான யமனின் படத்தையும்அதனருகில்   வன்னி இலையையும்         மந்திரக் கோலம் அருகில்  வைக்கவும்.
சனிக்கிழமையன்று ஒருவேளை உணவாக எள் சாதத்தையும்மறுவேளை எள்சீடைஎள்ளுருண்டைஎள்முருக்கு உணவாக்கிக் கொள்ளதங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது மனமுறுகி  மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல்பார்த்துக் கொண்டேஎத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டு தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய்      சனி பகவானே!    என சனியின்     துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்கபனிபோல் பிறவித்துன்பம் விலகும்.
                         
சனி
வெய்யசுட ரோன்சாயை மேவுமகன் குற்கரத்தான்
பைய நடக்கின்ற பங்குகருமெய்யன்
இனியன் அருளுங்கால்இன்றேல் கொடியேன்
சனியன் அவன்சீற்றம் தவிர்.                    
                         
சனி துதி.
முனிவர்கள் தேவரேரும் மூர்த்திகள் முதலினோர்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டா?
கனிவுள தெய்வம் நீயே கதிர்செயே காகம் ஏறுஞ்
தமியனேற்கு அருள் செய்வாயோ!!!

அபிராமி அந்தாதி
வவ்விய பாகத் திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியும் நீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளி நிற்கவே                                                           18.
இழைக்கும் வினைவழியே எடுங்காலன் என்னநடுங்க
அழைக்கும் பொழுது வந்தஞ்சல் என்பாய்அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!
உழைக்கும் பொழுதுன்னையே அன்னையேஎன்பன் ஓடிவந்தே.                                          33.
உங்களின் ஜென்ம நட்சத்திரம் சனிசாரம் பெற்றிருந்தால்அதாவது பூசம்அனுஷம்உத்ரட்டாதிஎன இந்த மூன்றில் ஒன்றுஜென்ம நட்சத்திரமாக இருந்தால்அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும்அது பூசத்தில் பிறந்திருந்தால்  அரச    மரத்தையும்அனுஷத்தில்  பிறந்திருந்தால்மகிழ மரத்தையும்உத்திரட்டாதியில் பிறந்திருந்தால்,  வேப்பைமரத்தையும்,     நட்டுபராமரித்துவந்தால்சனியால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.

இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் சனி இருந்தால்பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம்இது மட்டுமல்ல.  சனி மேடத்தில்      நீசம் பெற்ற   அமைப்பையுடையவர்களும்இலக்கினத்துக்கு  8, 12 ல் சனி மறைந்துள்ளவர்களும்இலக்கினாதிபதிக்கு 8, 12 ல் சனி மறைந்து உள்ளவர்களும்,  பாவியானசூரியன்சந்திரன்செவ்வாயுடன் கூடியசனி எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும்இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது

  சனிதசைசனிபுக்தி,அல்லது சனி அந்தரம்இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும்சனி தசையோசனி புக்தியோ நடப்பில் இருப்பவர்களோஅல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும்இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும்சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.


 வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர்அஞ்சல்.624 701
 ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.




   
     

                                                                                    .

   
     




No comments:

Post a Comment