இன்று கேதுவைப்பற்றி அறிந்து கொள்வோம். உங்கள் ஜாதகத்தில் கேது இருக்கும் நிலையில், என்ன பலன் நிகழும் என்பதை இப்போதுகாண்போம்
இராகுவின் கட்டுரையிலே கேதுவைப் பற்றிய விடயங்கள் பெரும்பகுதி குறிப்பிடப்பட்டு விட்டப்படியால், இனி மற்ற பலன்களைப் பற்றிமட்டும்பார்க்கலாம்.
மனிதனின் உடல் சுகபோகத்தைப்பற்றி இகவாழ்வில் அறிவது என்றால், அது இராகு எனும் நிழல்கிரகத்தை வைத்துதான். அதைப்போல, மனிதனின் அகவாழ்வைப் பற்றி கேதுவெனும் ஞானக்காரகனைக் கொண்டு அறிந்துவிடலாம்.
பொதுவாக, ஞானம் என்பது, விழிப்பு நிலையைத்தான் தரும். விழிப்பு என்பது தூங்கி விழிப்பதோ, புறக்கண்களைத் திறப்பதோ அல்ல. பரிபூரண நிலையில் ஆன்மா நிரம்பி வழிவதை தான் விழிப்பு நிலை என்பர். இது சுத்த ஆன்மாவுக்கு தேவைப்படாத ஒன்று. நம்மைப்போல, அசுத்த ஆன்மாவுக்குள், உட்செல்ல வேண்டிய ஒன்று.
புத்தருக்கு போதி மரத்தடியில் தவமிருந்ததால், ஞானம் கிடைத்ததாக சொல்வார்கள். அவர் ஞானம் பெற்ற போது, அவர் இருந்த இடம் போதிமரத்தடி. அவ்வளவுதான். புறத்தேடலில் ஞானம் கிடைத்துவிடாது. அது ஆன்மாவுக்குள் நடக்கும் யுத்தம். போதி மரத்துக்கெல்லாம் ஞானம் தரும் வல்லமை இல்லை என்பது தான் உண்மை.
தெளிவான ஆன்மாவுக்குள் தான் ஒடுங்கிய கர்மா இருக்கும். தெளிவான மனமும், பிறப்பற்ற ஜீவனுக்குள்ளும் தான் ஞானம் பிறக்கும். கடப்பதற்கு எதுவுமில்லை என்கிற போது, பெறுவதற்கும் எதுவுமில்லை என்பது தானே பொருள். எனக்குள் ஒளி பிரவாகம் எடுக்கும்போது, இருள் எங்கே இருக்கும். இதைத்தான் ஒரு மகாசித்தன் சொன்னான். மெய்மறந்து “நானே ஒளி” என்றான்.
“அன்பே சிவம்” என்பதற்கும், “நானே ஒளி” என்பதற்கும், பெரிய வேறுபாடு இருப்பதாக, எனக்கு தெரியவில்லை. சரி, அன்பும், ஒளியும் ஒன்றானால், அதை ஞானம்தானே தரவேண்டும்.
அந்த ஞானத்தை இருள் கிரகமான கேது எப்படி தரமுடியும். இருள் இருப்பதால் தானே ஒளி பிறந்தது. இதை விஞ்ஞானமும் கூறுகிறது. அண்டத்தின் துவக்கம் இருளில்தான் கிடந்தது என்கிறது. அரக்கத்தனத்தில் இருந்து தானே அன்பு பிறக்கும். கெட்டதைத் தடுக்கவே நல்லது பிறக்கும்.
பரிணாமத்தில் வலுத்தது தானே வாழ்ந்திருந்தது. அந்த மிருககுணத்துக்குள் எப்படி அன்பு சுரந்ததோ, அதேபோல, இருளாய் கிடந்த மனதுக்குள்ஒளிபுகுந்தது.
கேதுஞானக்காரகன்,
சூரியன்ஆத்மாக்காரகன்,
சந்திரன்மனதுக்காரகன்,
செவ்வாய்வெற்றிக்கும்,புரட்சிக்கும்காரகன்,
புதன்புத்திக்காரகன்,
குருஜீவக்காரகன்,
சுக்கிரன்களத்திரக்காரகன்,
சனிகர்மக்காரகன்,
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எந்த கிரகத்துடனும், கேது கூடலாம். அதில், ஞானம் மட்டும் தான் பிரதானமாக இருக்கலாம். அதை தவிர்த்து விட்டு புறவாழ்வுக்காக வாழ எத்தனிக்கும்போது, விபரிதமான பலன்களே ஏற்படுகிறது.
நாம் வாழப்போகும் வாழ்க்கை இரண்டு நிலைகளைக் கொண்டது. இந்த இரண்டு நிலைகளில் இருந்து மூன்றாவதாக ஒரு நிலை உருவாகும். முதல் நிலை இல்லறம் மற்றொன்று துறவறம்
. இல்லறத்தில் இருந்து துறவறமோ, துறவறத்தில் இருந்து இல்லறமோ உருவாகலாம். இதற்குள் எதை அனுபவிக்கிறோம் என்கிற விகிதாசாரமே கர்மா. இதை அடித்தளமாக்க் கொண்டு எழும்பியதுதான் ஜோதிடம். ஏதோ நீங்களும் நானும் மனித ஜென்மம் எடுத்துவிட்டோம். கண்டிப்பாக இல்லறத்தில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்கிற, தாக்கம் நம் மரபணுக்குள் பொதிந்திருக்கிறது. இல்லற நாட்டமில்லாத ஒருவனை, இல்லறத்துக்குள் புகுந்ததும்போது, அவன் விடுபடவே துடிக்கிறான்.
ஞானமும் (கேதுவும்), ஆன்மாவும் (சூரியனும்), கூடலாம். ஞானமும், மனமும் கூடலாம். ஞானமும், புரட்சிகரமும் கூடலாம், ஞானமும், புத்தியும் கூடலாம். ஞானமும், ஜீவனும் கூடலாம். ஞானமும், காமமும் கூடலாமா? (ஓஷோ என்றழைக்கப்படும் ஞானி காமத்துக்குள் ஞானத்தைத் தேடினார். பிரேமானந்தா என்பவர் ஞானத்துக்குள் காமத்தைத் தேடினார்) ஞானமும், கர்மாவும் கூடலாம்.
எல்லாகிரகங்களும் ஞானத்தோடு, அதாவது அகவாழ்வோடு மட்டும் தொடர்பு உடையதாய் இருந்தால் நல்லதே செய்கிறது. புறவாழ்வோடு தோடர்புடையதாய் இருந்தால், வாழ்வில் சமாதானம் தோலைந்து சச்சரவே மிகுந்திருக்கும்.
இலக்கினத்தில் இராகு இருக்க, ஏழில் கேது நிற்கும் இந்த ஜாதகர்க்கு, இளவயதில் திருமணம் செய்யக்கூடாது. மீறி செய்தால், திருமண வாழ்வு நீடிக்காது. திருமண முறிவினைக் கொடுத்து விடும். இதேபோல, இரண்டாமிடத்தில் கேது நின்றால், அந்த ஜாதகர்க்கு சன்னியாசி யோகத்தை தந்துவிடும்.
இலக்கினத்திற்கு 6, 8, 12 ல் தாய்க்குக் காரகனான சந்திரன் நின்று, நான்காம் வீட்டில் கேது நின்றால், தாய்க்கு மரணத்தைத் தந்துவிடும். இதேபோல், நான்காம் வீட்டில் கேதுவும், சனியின் மகனான மாந்தியும் கூடியிருக்க, ஜாதகரின் கடைசி காலம்வரை குடியிருக்கக்கூடவீடுஇருக்காது. .
இதுபோன்ற அடிப்படையான விடயங்களை அறிந்து, தாங்களும் ஜோதிட ஞானமிக்கவராக மாற விரும்புகிறேன்.
உங்களுக்குள் உங்களைத் தேடுங்கள். கண்டடைவீர்கள். இராகுவின் கட்டுரையிலே கேதுவைப் பற்றிய விடயங்கள் பெரும்பகுதி குறிப்பிடப்பட்டு விட்டப்படியால், இனி மற்ற பலன்களைப் பற்றிமட்டும்பார்க்கலாம். மனிதனின் உடல் சுகபோகத்தைப்பற்றி இகவாழ்வில் அறிவது என்றால், அது இராகு எனும் நிழல்கிரகத்தை வைத்துதான். அதைப்போல, மனிதனின் அகவாழ்வைப் பற்றி கேதுவெனும் ஞானக்காரகனைக் கொண்டு அறிந்துவிடலாம்.
பொதுவாக, ஞானம் என்பது, விழிப்பு நிலையைத்தான் தரும். விழிப்பு என்பது தூங்கி விழிப்பதோ, புறக்கண்களைத் திறப்பதோ அல்ல. பரிபூரண நிலையில் ஆன்மா நிரம்பி வழிவதை தான் விழிப்பு நிலை என்பர். இது சுத்த ஆன்மாவுக்கு தேவைப்படாத ஒன்று.
நம்மைப்போல, அசுத்த ஆன்மாவுக்குள், உட்செல்ல வேண்டிய ஒன்று.புத்தருக்கு போதி மரத்தடியில் தவமிருந்ததால், ஞானம் கிடைத்ததாக சொல்வார்கள். அவர் ஞானம் பெற்ற போது, அவர் இருந்த இடம் போதிமரத்தடி. அவ்வளவுதான். புறத்தேடலில் ஞானம் கிடைத்துவிடாது. அது ஆன்மாவுக்குள் நடக்கும் யுத்தம்.
போதி மரத்துக்கெல்லாம் ஞானம் தரும் வல்லமை இல்லை என்பது தான் உண்மை.தெளிவான ஆன்மாவுக்குள் தான் ஒடுங்கிய கர்மா இருக்கும். தெளிவான மனமும், பிறப்பற்ற ஜீவனுக்குள்ளும் தான் ஞானம் பிறக்கும். கடப்பதற்கு எதுவுமில்லை என்கிற போது, பெறுவதற்கும் எதுவுமில்லை என்பது தானே பொருள். எனக்குள் ஒளி பிரவாகம் எடுக்கும்போது, இருள் எங்கே இருக்கும். இதைத்தான் ஒரு மகாசித்தன் சொன்னான். மெய்மறந்து “நானே ஒளி” என்றான்.
“அன்பே சிவம்” என்பதற்கும், “நானே ஒளி” என்பதற்கும், பெரிய வேறுபாடு இருப்பதாக, எனக்கு தெரியவில்லை. சரி, அன்பும், ஒளியும் ஒன்றானால், அதை ஞானம்தானே தரவேண்டும். அந்த ஞானத்தை இருள் கிரகமான கேது எப்படி தரமுடியும். இருள் இருப்பதால் தானே ஒளி பிறந்தது. இதை விஞ்ஞானமும் கூறுகிறது. அண்டத்தின் துவக்கம் இருளில்தான் கிடந்தது என்கிறது. அரக்கத்தனத்தில் இருந்து தானே அன்பு பிறக்கும். கெட்டதைத் தடுக்கவே நல்லது பிறக்கும். பரிணாமத்தில் வலுத்தது தானே வாழ்ந்திருந்தது.
அந்த மிருககுணத்துக்குள் எப்படி அன்பு சுரந்ததோ, அதேபோல, இருளாய் கிடந்த மனதுக்குள்ஒளிபுகுந்தது.கேதுஞானக்காரகன், சூரியன்ஆத்மாக்காரகன்,சந்திரன்மனதுக்காரகன்,செவ்வாய்வெற்றிக்கும்,புரட்சிக்கும்காரகன்,புதன்புத்திக்காரகன்,குருஜீவக்காரகன்,சுக்கிரன்களத்திரக்காரகன்,சனிகர்மக்காரகன்,இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எந்த கிரகத்துடனும், கேது கூடலாம். அதில், ஞானம் மட்டும் தான் பிரதானமாக இருக்கலாம். அதை தவிர்த்து விட்டு புறவாழ்வுக்காக வாழ எத்தனிக்கும்போது, விபரிதமான பலன்களே ஏற்படுகிறது. நாம் வாழப்போகும் வாழ்க்கை இரண்டு நிலைகளைக் கொண்டது.
இந்த இரண்டு நிலைகளில் இருந்து மூன்றாவதாக ஒரு நிலை உருவாகும். முதல் நிலை இல்லறம் மற்றொன்று துறவறம். இல்லறத்தில் இருந்து துறவறமோ, துறவறத்தில் இருந்து இல்லறமோ உருவாகலாம். இதற்குள் எதை அனுபவிக்கிறோம் என்கிற விகிதாசாரமே கர்மா. இதை அடித்தளமாக்க் கொண்டு எழும்பியதுதான் ஜோதிடம். ஏதோ நீங்களும் நானும் மனித ஜென்மம் எடுத்துவிட்டோம். கண்டிப்பாக இல்லறத்தில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்கிற, தாக்கம் நம் மரபணுக்குள் பொதிந்திருக்கிறது. இல்லற நாட்டமில்லாத ஒருவனை, இல்லறத்துக்குள் புகுந்ததும்போது, அவன் விடுபடவே துடிக்கிறான்.
ஞானமும் (கேதுவும்), ஆன்மாவும் (சூரியனும்), கூடலாம். ஞானமும், மனமும் கூடலாம். ஞானமும், புரட்சிகரமும் கூடலாம், ஞானமும், புத்தியும் கூடலாம். ஞானமும், ஜீவனும் கூடலாம். ஞானமும், காமமும் கூடலாமா? (ஓஷோ என்றழைக்கப்படும் ஞானி காமத்துக்குள் ஞானத்தைத் தேடினார். பிரேமானந்தா என்பவர் ஞானத்துக்குள் காமத்தைத் தேடினார்) ஞானமும், கர்மாவும் கூடலாம்.எல்லாகிரகங்களும் ஞானத்தோடு, அதாவது அகவாழ்வோடு மட்டும் தொடர்பு உடையதாய் இருந்தால் நல்லதே செய்கிறது.
புறவாழ்வோடு தோடர்புடையதாய் இருந்தால், வாழ்வில் சமாதானம் தோலைந்து சச்சரவே மிகுந்திருக்கும்.இலக்கினத்தில் இராகு இருக்க, ஏழில் கேது நிற்கும் இந்த ஜாதகர்க்கு, இளவயதில் திருமணம் செய்யக்கூடாது. மீறி செய்தால், திருமண வாழ்வு நீடிக்காது. திருமண முறிவினைக் கொடுத்து விடும். இதேபோல, இரண்டாமிடத்தில் கேது நின்றால், அந்த ஜாதகர்க்கு சன்னியாசி யோகத்தை தந்துவிடும். இலக்கினத்திற்கு 6, 8, 12 ல் தாய்க்குக் காரகனான சந்திரன் நின்று, நான்காம் வீட்டில் கேது நின்றால், தாய்க்கு மரணத்தைத் தந்துவிடும்.
இதேபோல், நான்காம் வீட்டில் கேதுவும், சனியின் மகனான மாந்தியும் கூடியிருக்க, ஜாதகரின் கடைசி காலம்வரை குடியிருக்கக்கூடவீடுஇருக்காது. . இதுபோன்ற அடிப்படையான விடயங்களை அறிந்து, தாங்களும் ஜோதிட ஞானமிக்கவராக மாற விரும்புகிறேன். உங்களுக்குள் உங்களைத் தேடுங்கள். கண்டடைவீர்கள்.
இலக்கினத்தில் இராகு நிற்க:
மெலிந்த, நெடிய உடல், இளமையில் வறுமை, எதையும் சுயமாக செய்யமுடியாதவர். வஞ்சமும், குரூரமும், படபடத்த மனமும், சிவந்த கண்களும், சாப்பாட்டுப் பிரியனும், மறைமுகமாக வேறொருவர் மனைவியை எவருக்கும் தெரியாமல் அடைபவன்.
இலக்கினத்தில் கேது நிற்க:
குறுகிய உருவமும், கெளரவ பதவி அடைதல், காடுமலை சுற்றும் ஞானியாய், இலைதழைகளை தின்று திரிபவன். பெரும் பொருள் தேடிவைப்பவன். பெண்களுக்கு நேசன். ஆளடிமை, கொஞ்சம் பொய் பேசுதல்,
இரண்டில் இராகு நிற்க:
கண்நோய், இருமனைவிகள் ஏற்படும், சரளமாய் பேசும் நகைச்சுவை பேச்சாளன், மத்திய வயதில் யோகசாலி. பெண்களின் மேல் விருப்பமுள்ளவன், கர்ப்பிணிப்பெண்ணின் சாபத்தைப் பெற்றவன்.
இரண்டில் கேது நிற்க:
பொருள் தேடி செலவழிப்பான். ஞானமிகுந்தபேச்சாளி. மனைவி அமைவதில் ஏதாவது கோளாறு இருக்கும். பலவித புராணங்கள், இதிகாசங்கள் கற்பான். அறிவான வார்த்தைகள் பேசுபவன்.
மூன்றில் இராகு நிற்க:
தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவர். காதுநோய் உள்ளவர். தைரியமுள்ளவன். அரசாங்க ஆதரவு மிக்கவன். அரசு ஆதரவு கிட்டும். பெண்ணால் வாழ்வில் முன்னேறுவான். பலபெண்களுடன் போகம் கொள்வான். புத்திரம் குறைவானவன். உள்ளொன்று வைத்து புறம் பேசுபவன்.
மூன்றில் கேது நிற்க:
தயவு தாட்சண்யமற்றவர். இளைய சகோதரமற்றவர். உண்மையை பேச மாட்டார். பிடிவாதக்காரன். பெண் சுகமற்றவன். தாமதங்களுடையவன்.
நான்கில் இராகு நிற்க :
தாய்க்கு கண்டம், பூமி மனை உண்டாகும், தகப்பன் சொத்தை விரும்பாதவன்.அமைச்சன் போல் அறிவுரை சொல்வான். வாகனங்கள் உடையவன். ஆளடிமை, பெருங்கீர்த்தி உடையவன். விஷபயம் உள்ளவன். ஜென்ம பகை உடையவன். பக்தி உடையவன்.
நான்கில் கேது நிற்க:
பலவித்தைகளை உடையவன். மனைவியிடம் சுகமற்று, பரத்தையர் மேல் பிரியமுள்ளவன். ஜோதிடமறிந்து பலன் சொல்பவன்.
ஐந்தில் இராகு நிற்க:
அறிவும், கல்வியும் மிகுந்தவன். ஆண்குழந்தையற்றவன். சுற்றத்தாருக்கு ஆகாதவன். அடக்க ஒடுக்கமானவன். பருவமடையாத பெண் இவனுடன் தொடர்பில் இருப்பால். அதனாலே, உலகில் தப்பானவனாக கருதப்படுவான். குணம் கெட்டவன். மனவழுத்தம் மிகுந்தவன். தாய் மாமனுக்கு தோஷம். ஊர் ஊராகத்திரிபவர்.
ஐந்தில் கேது நிற்க:
அறிவுடையவன். குழந்தைகள் பிறந்து இறக்கும். ஊரில் கெட்டபெயர் இல்லாமல் வாழ்பவன். பெண்களின் பேச்சைக் கேட்பவன். சொத்துள்ளவர்களுக்கு விரோதி. தாய் மாமனுக்கு தோஷம். அலைச்சல் உள்ளவர்.
ஆறில் இராகு நிற்க:
பலசாலி, தந்திரசாலி. பிணியற்றவர். எதிரிகளை வெல்லும் திறன் பெற்றவர். தாய்மாமன் விடு கெடும். ஆட்சியாளர்களுக்கு விருப்பமானவன். கம்பீரமும், மேனி அலங்காரமும், பெண்களைக்கண்ட உடன் மோகம் கொள்வதும்,
ஆறில் கேது நிற்க:
விவசாயி. காணி நிலம், பயிர், பச்சை என்று வாழ்பவன். இளம்பெண்களுக்கு விருப்பமானவன். பலவகையில் பொருள்தேடி, அண்டியவர்க்கு ஆதரவளிப்பவன். ஆச்சாரமும், தற்பெருமையும் உள்ளவர். உண்ணாமல் இருப்பவர்.
ஏழில் இராகு நிற்க:
மனைவிக்கு தீமை. கண்டம் ஏற்படும். இருமனைவிகள். பூமி பொருள் தேடுவான். பெண்களை நம்பாதவன். மனைவியின் சொத்து கிட்டும். கபடுகுணம். எவரையும் நம்பாதவன். தொட்ட காரியத்தை முடிப்பதில் தீரன். நோயுடையவளோ, பகை குணம் கொண்டவளோ மனைவியாக வாய்ப்பாள்.
ஏழில் கேது நிற்க:
கணவன்மனைவி பிரிவினை, காலதாமத திருமணத்தையும் தரும். நோயுள்ள மனைவியும். பகையோடு பேசுபவளாகவும், ஆனால், புகழுடையவன். இவன்மேல் புத்திரர்கள் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள்.
எட்டில் இராகு நிற்க:
உற்சாகன், கம்பீரமுள்ளவன். படபடப்பை வெளியில் காட்டாதவன். விஷபயம் உடையவன். வாய்பேச்சில் வல்லவன். பலபேருடன் விருப்பமுள்ளவன். மனைவியின் சாபத்தைப் பெற்றவன். வெறுப்பும், குரோதமும், பிணியும் ஏற்படும். வாக்கு பலிதமுடையவன்.
எட்டில் கேது நிற்க:
எடுத்த பணியை முடிப்பவன். நோயுள்ள மனைவி. மனைவி விரும்பும் மனிதன். அதிக கீர்த்தியும், பல பூமியும் உடையவன். தேய்வக்குற்றத்தால் வாழ்வில் ஏற்றத்தாழ்வு இருக்கும்.
ஒன்பதில் இராகு நிற்க:
தந்தைக்கு கண்டம். பாக்கிய இழப்பு. குலத் துரோகி. குடும்பத்தை கலைக்கும் குரூப எண்ணம் கொண்டவன், பொருளும் செல்வமும் ஆயுள் மட்டும் இருக்கும். அண்டியோரைக் காப்பவன். சர்ப்பதோஷம் உண்டு.
ஒன்பதில் கேது நிற்க:
நாளுக்குநாள் விருத்தி. தந்தை சொத்து வந்து செரும். நட்டமான பொருளும் கைக்கு வந்து சேரும். புத்திர தோஷம் உண்டு. சிறிய தகப்பனுக்கு தோஷம்.
பத்தில் இராகு நிற்க:
வேதங்கள் முதற்கொண்டு ஜோதிடம் வரை கற்று தேர்வான். பல தொழிகள் பார்ப்பான். இவனுடன் பல ஜனங்கள் இணைவார்கள். ஆட்சியாளர்களுக்கு இணக்கமானவன். வாக்கு பலிதமுள்ளவன். மனைவி சுகமற்றவன்.உயர்பதவியை அடைவான். சதா பிரயானமும் வீண்செலவும் உடையவன்.
பத்தில் கேது நிற்க:
பெரும் பொருள் தேடிவைப்பான். மனைவியின் சொல்லை தட்டாதவன்.தானதருமங்கள் செய்பவன். யாருக்கும் அடங்காதவன். கம்பீரமாக சிரிப்பவன். மருத்துவம், இர்சாயனம் சார்ந்த துறையில் இருப்பார். இளகிய மனம் உடையவர்.
பதினொன்றில் இராகு நிற்க:
கலைத்துறையில் இருப்பார். அதில் வருவயும், இலாபமும் அடைவார். திடீர் பணக்காரராகவும், புறம்போக்கு நிலத்தை தனதாக்கிக் கொள்பவர். போட்டி பந்தயங்களில் வெற்றிபெறுபவர். மனைவியை நம்பாதவன். வேறொரு பெண் துணை உண்டாகும்.
பதினொன்றில் கேது நிற்க:
செல்வந்தர்.பொருள் தட்டுப்பாடு இருக்காது. நண்பர்களிடம் நல்ல செல்வாக்கு உண்டு. நிலபுலத்தால் இலாபம். தானாக பொருள் கூடும். வார்த்தையில் கள்ளமில்லை.உலகில் நல்ல பேர் எடுப்பான்.அண்டியவர்க்கு ஆதரவளிப்பான். தியாகம் உடையவன். எவர்க்கும் அஞ்சாதவன்.
பனிரெண்டில் இராகு நிற்க:
முதுமையில் நோயுடையவன். புண்ணியங்கள் செய்பவன். தீய சகவாசம். நீச்ச சகவாசத்தால் அதிக செலவு. வருவாய் குறைவு இருக்காது. உறவுகளும், நண்பர்களும் உதவுவார்.
பனிரெண்டில் கேது நிற்க:
முக்திக்கு வழி வகுக்கும் இது கடைசி பிறவி என்பர். மறுபிறவி இல்லை. பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை. கடைசி காலத்தில் பிணிகள் இல்லை. புனிதன். உத்தமன். நினைத்ததை முடிப்பவன். வெளியுலகில் உள்ளோர்க்கு நல்லவனாய் இருப்பார்.
இலக்கினத்தில் இராகு இருக்க, ஏழில் கேது நிற்கும் இந்த ஜாதகர்க்கு, இளவயதில் திருமணம் செய்யக்கூடாது. மீறி செய்தால், திருமண வாழ்வு நீடிக்காது. திருமண முறிவினைக் கொடுத்து விடும். இதேபோல, இரண்டாமிடத்தில் கேது நின்றால், அந்த ஜாதகர்க்கு சன்னியாசி யோகத்தை தந்துவிடும்.
இலக்கினத்திற்கு 6, 8, 12 ல் தாய்க்குக் காரகனான சந்திரன் நின்று, நான்காம் வீட்டில் கேது நின்றால், தாய்க்கு மரணத்தைத் தந்துவிடும். இதேபோல், நான்காம் வீட்டில் கேதுவும், சனியின் மகனான மாந்தியும் கூடியிருக்க, ஜாதகரின் கடைசி காலம்வரை குடியிருக்கக் கூட வீடு இருக்காது.
இராகு, கேதுக்களுக்கு வாரநாட்களில் இடம்தரவில்லை. அஷ்டவர்க்க கணிதத்திலும் பரல்கள் ஒதுக்கப்படவில்லை. காரணம், இவையிரண்டும் மாயக்கிரகங்கள் என்பதால், நிழல்களுக்கு தனியாக இயங்கும் தன்மை இருக்காது என்பதை அடிப்படையாகக் கொண்டு வாரநாட்களில் பங்கோ, அஷ்டவர்க்கக் கணிதத்தில் பரல்களோ ஒதுக்கப்படவில்லை. அதனால், கேது தன் தசாகாலத்தை செவ்வாயின் தசாகாலமான 7 வருடத்தைப்போல, தன் தசாகாலத்தை 7 வருடமாக தருகிறான். செவ்வாயைப் போலவே பலன்கள தனக்கு அதிகாரம் கிடைக்கும் காலங்களில் தன் தீர்ப்பை தயங்காமல் வழங்குகிறான். அதனால், கேது தசா, புக்தி,அந்தரம் நடப்பில் உள்ளவர்களும், கேதுவால் பாதிக்கப்பட்டவர்களும், செவ்வாய் கிழமையன்று, மந்திரத்தையும்,சுலோகத்தையும் பாடி வணங்கலாம்.
வீடு வாசலை சுத்தம் செய்தபின், குளித்து முடித்துசெவ்வாய் கிழமை காலையில் 6.00மணிமுதல் 7.00வரை செவ்வாய்க்குரிய ஓரையான செவ்வாய் ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும். ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.
இங்கே கேதுவுக்கு என்று தனிக்கிழமைகள் வருவதில்லை என்பதால் செவ்வாயைப்போல், பலன்தரும் செவ்வாய் ஆளும் செவ்வாய்க்கிழமை அன்று, யாருடைய ஜாதகத்தில் வலுக்குறைந்த கேது உள்ளாரோ அவர் மட்டும், பூஜைநேரத்தில் பல நிறத்தாலான வேட்டியோ, சேலையோ, அணிந்து கொண்டு, ஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய், பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டு, பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும். சார்ட் அட்டையில் கேதுவுக்காக வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல் கொள்ளுவைப் பொடிசெய்து பூஜை அறையிலோ, வழிபாட்டுத்தளத்திலோ, கால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும்.
மேலும், பாம்பு போல் துருக்கம்கல்லில் வரைந்த, அல்லது, செதுக்கியோ மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக செம்மரப்பொடியை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கொள்ளு சாதத்தை, நாம் இதுவரை புலங்காத, பயன்படுத்தாத தட்டில் நிவேதனப் படையலாக வைக்கவும். கேதுவின் அதிதேவதையான பிரம்மா படத்தையும், அதனருகில் தர்ப்பைப் புல்லையும் மந்திரக் கோலம் அருகில் வைக்கவும்.
செவ்வாய்க்கிழமையன்று ஒருவேளை உணவாக கொள்ளுவை வேகவைத்து சாதத்துடன் உண்ணவும். மறுவேளை கொள்ளுவையும் உணவாக்கிக் கொள்ள, தங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது மனமுறுகி மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல், பார்த்துக் கொண்டே, எத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டு தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் கேது பகவானே! என கேதுவின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்க, பனிபோல் பிறவித்துன்பம் விலகும்.
கேதுபொன்னங் கிரிஇடமாப் போதுவான்; மோகினியால்முன்னம் தலையிழந்த மூர்த்தியான் – மன்னுகையில்மோதுகதை அஞ்சல் உள்ளான் மூண்ட கருநிறத்தான்கேதுஎன்று சொல்வர் கிளந்து.
கேது துதி.
பொன்னையின் னுரத்தில் கொண்டோன் புதல்வர்தம்பொருட்டால் ஆழிதன்னையே கடந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்றபின்னைநின் கரவால் உண்ட பெட்பினில் சிரம்பெற்றுஉயர்ந்தாய்என்னை ஆள கேதுவே இவ் விருநிலம் போற்றத் தானே!!
அபிராமி அந்தாதி.
என்குறைதீர நின்றே ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்நின்குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்!
தன்குறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே. 72.
தங்குவார் கற்பகத் தாருவின் நீழலில் தாயரின்றிமங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்பொங்குவார் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தவுந்திக்கொங்கிவர் பூங்குழலால் திருமேனி குறித்தவரே! 76.
வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
No comments:
Post a Comment