Wednesday 29 October 2014

மந்திரமும்…கோலமும் கேது.


இன்று கேதுவைப்பற்றி அறிந்து கொள்வோம். உங்கள் ஜாதகத்தில் கேது இருக்கும் நிலையில்என்ன பலன் நிகழும் என்பதை இப்போதுகாண்போம் 
இராகுவின் கட்டுரையிலே கேதுவைப் பற்றிய விடயங்கள் பெரும்பகுதி குறிப்பிடப்பட்டு விட்டப்படியால்இனி மற்ற பலன்களைப் பற்றிமட்டும்பார்க்கலாம். 


மனிதனின் உடல் சுகபோகத்தைப்பற்றி இகவாழ்வில் அறிவது என்றால்அது இராகு எனும் நிழல்கிரகத்தை வைத்துதான். அதைப்போலமனிதனின் அகவாழ்வைப் பற்றி கேதுவெனும் ஞானக்காரகனைக் கொண்டு அறிந்துவிடலாம். 
பொதுவாகஞானம் என்பதுவிழிப்பு நிலையைத்தான் தரும். விழிப்பு என்பது தூங்கி விழிப்பதோபுறக்கண்களைத் திறப்பதோ அல்ல. பரிபூரண நிலையில் ஆன்மா நிரம்பி வழிவதை தான் விழிப்பு நிலை என்பர். இது சுத்த ஆன்மாவுக்கு தேவைப்படாத ஒன்று. நம்மைப்போலஅசுத்த ஆன்மாவுக்குள்உட்செல்ல வேண்டிய ஒன்று.


புத்தருக்கு போதி மரத்தடியில் தவமிருந்ததால்ஞானம் கிடைத்ததாக சொல்வார்கள். அவர் ஞானம் பெற்ற போதுஅவர் இருந்த இடம் போதிமரத்தடி. அவ்வளவுதான். புறத்தேடலில் ஞானம் கிடைத்துவிடாது. அது ஆன்மாவுக்குள் நடக்கும் யுத்தம். போதி மரத்துக்கெல்லாம் ஞானம் தரும் வல்லமை இல்லை என்பது தான் உண்மை.


தெளிவான ஆன்மாவுக்குள் தான் ஒடுங்கிய கர்மா இருக்கும். தெளிவான மனமும்பிறப்பற்ற ஜீவனுக்குள்ளும் தான் ஞானம் பிறக்கும். கடப்பதற்கு எதுவுமில்லை என்கிற போதுபெறுவதற்கும் எதுவுமில்லை என்பது தானே பொருள். எனக்குள் ஒளி பிரவாகம் எடுக்கும்போதுஇருள் எங்கே இருக்கும். இதைத்தான் ஒரு மகாசித்தன் சொன்னான். மெய்மறந்து நானே ஒளி” என்றான்.
அன்பே சிவம்” என்பதற்கும், “நானே ஒளி” என்பதற்கும்பெரிய வேறுபாடு இருப்பதாகஎனக்கு தெரியவில்லை. சரிஅன்பும்ஒளியும் ஒன்றானால்அதை ஞானம்தானே தரவேண்டும். 

அந்த ஞானத்தை இருள் கிரகமான கேது எப்படி தரமுடியும். இருள் இருப்பதால் தானே ஒளி பிறந்தது. இதை விஞ்ஞானமும் கூறுகிறது. அண்டத்தின் துவக்கம் இருளில்தான் கிடந்தது என்கிறது. அரக்கத்தனத்தில் இருந்து தானே அன்பு பிறக்கும். கெட்டதைத் தடுக்கவே நல்லது பிறக்கும். 


பரிணாமத்தில் வலுத்தது தானே வாழ்ந்திருந்தது. அந்த மிருககுணத்துக்குள் எப்படி அன்பு சுரந்ததோஅதேபோலஇருளாய் கிடந்த மனதுக்குள்ஒளிபுகுந்தது.

கேதுஞானக்காரகன், 
சூரியன்ஆத்மாக்காரகன்,
சந்திரன்மனதுக்காரகன்,
செவ்வாய்வெற்றிக்கும்,புரட்சிக்கும்காரகன்,
புதன்புத்திக்காரகன்,
குருஜீவக்காரகன்,
சுக்கிரன்களத்திரக்காரகன்,
சனிகர்மக்காரகன்,


இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எந்த கிரகத்துடனும்கேது கூடலாம். அதில்ஞானம் மட்டும் தான் பிரதானமாக இருக்கலாம். அதை தவிர்த்து விட்டு புறவாழ்வுக்காக வாழ எத்தனிக்கும்போதுவிபரிதமான பலன்களே ஏற்படுகிறது. 
நாம் வாழப்போகும் வாழ்க்கை இரண்டு நிலைகளைக் கொண்டது. இந்த இரண்டு நிலைகளில் இருந்து மூன்றாவதாக ஒரு நிலை உருவாகும். முதல் நிலை இல்லறம் மற்றொன்று துறவறம்

. இல்லறத்தில் இருந்து துறவறமோதுறவறத்தில் இருந்து இல்லறமோ உருவாகலாம். இதற்குள் எதை அனுபவிக்கிறோம் என்கிற விகிதாசாரமே கர்மா. இதை அடித்தளமாக்க் கொண்டு எழும்பியதுதான் ஜோதிடம். ஏதோ நீங்களும் நானும் மனித ஜென்மம் எடுத்துவிட்டோம். கண்டிப்பாக இல்லறத்தில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்கிறதாக்கம் நம் மரபணுக்குள் பொதிந்திருக்கிறது. இல்லற நாட்டமில்லாத ஒருவனைஇல்லறத்துக்குள் புகுந்ததும்போதுஅவன் விடுபடவே துடிக்கிறான். 


ஞானமும் (கேதுவும்)ஆன்மாவும் (சூரியனும்)கூடலாம். ஞானமும்மனமும் கூடலாம். ஞானமும்புரட்சிகரமும் கூடலாம்ஞானமும்புத்தியும் கூடலாம். ஞானமும்ஜீவனும் கூடலாம். ஞானமும்காமமும் கூடலாமா? (ஓஷோ என்றழைக்கப்படும் ஞானி காமத்துக்குள் ஞானத்தைத் தேடினார். பிரேமானந்தா என்பவர் ஞானத்துக்குள் காமத்தைத் தேடினார்) ஞானமும்கர்மாவும் கூடலாம்.


எல்லாகிரகங்களும் ஞானத்தோடுஅதாவது அகவாழ்வோடு மட்டும் தொடர்பு உடையதாய் இருந்தால் நல்லதே செய்கிறது. புறவாழ்வோடு தோடர்புடையதாய் இருந்தால்வாழ்வில் சமாதானம் தோலைந்து சச்சரவே மிகுந்திருக்கும்.


இலக்கினத்தில் இராகு இருக்கஏழில் கேது நிற்கும் இந்த ஜாதகர்க்குஇளவயதில் திருமணம் செய்யக்கூடாது. மீறி செய்தால்திருமண வாழ்வு நீடிக்காது. திருமண முறிவினைக் கொடுத்து விடும். இதேபோலஇரண்டாமிடத்தில் கேது நின்றால்அந்த ஜாதகர்க்கு சன்னியாசி யோகத்தை தந்துவிடும்.

 
இலக்கினத்திற்கு 6, 8, 12 ல் தாய்க்குக் காரகனான சந்திரன் நின்றுநான்காம் வீட்டில் கேது நின்றால்தாய்க்கு மரணத்தைத் தந்துவிடும். இதேபோல்நான்காம் வீட்டில் கேதுவும்சனியின் மகனான மாந்தியும் கூடியிருக்கஜாதகரின் கடைசி காலம்வரை குடியிருக்கக்கூடவீடுஇருக்காது. . 
இதுபோன்ற அடிப்படையான விடயங்களை அறிந்துதாங்களும் ஜோதிட ஞானமிக்கவராக மாற விரும்புகிறேன். 

உங்களுக்குள் உங்களைத் தேடுங்கள். கண்டடைவீர்கள்.இராகுவின் கட்டுரையிலே கேதுவைப் பற்றிய விடயங்கள் பெரும்பகுதி குறிப்பிடப்பட்டு விட்டப்படியால்இனி மற்ற பலன்களைப் பற்றிமட்டும்பார்க்கலாம். மனிதனின் உடல் சுகபோகத்தைப்பற்றி இகவாழ்வில் அறிவது என்றால்அது இராகு எனும் நிழல்கிரகத்தை வைத்துதான். அதைப்போலமனிதனின் அகவாழ்வைப் பற்றி கேதுவெனும் ஞானக்காரகனைக் கொண்டு அறிந்துவிடலாம். 

பொதுவாகஞானம் என்பதுவிழிப்பு நிலையைத்தான் தரும். விழிப்பு என்பது தூங்கி விழிப்பதோபுறக்கண்களைத் திறப்பதோ அல்ல. பரிபூரண நிலையில் ஆன்மா நிரம்பி வழிவதை தான் விழிப்பு நிலை என்பர். இது சுத்த ஆன்மாவுக்கு தேவைப்படாத ஒன்று. 

நம்மைப்போலஅசுத்த ஆன்மாவுக்குள்உட்செல்ல வேண்டிய ஒன்று.புத்தருக்கு போதி மரத்தடியில் தவமிருந்ததால்ஞானம் கிடைத்ததாக சொல்வார்கள். அவர் ஞானம் பெற்ற போதுஅவர் இருந்த இடம் போதிமரத்தடி. அவ்வளவுதான். புறத்தேடலில் ஞானம் கிடைத்துவிடாது. அது ஆன்மாவுக்குள் நடக்கும் யுத்தம். 

போதி மரத்துக்கெல்லாம் ஞானம் தரும் வல்லமை இல்லை என்பது தான் உண்மை.தெளிவான ஆன்மாவுக்குள் தான் ஒடுங்கிய கர்மா இருக்கும். தெளிவான மனமும்பிறப்பற்ற ஜீவனுக்குள்ளும் தான் ஞானம் பிறக்கும். கடப்பதற்கு எதுவுமில்லை என்கிற போதுபெறுவதற்கும் எதுவுமில்லை என்பது தானே பொருள். எனக்குள் ஒளி பிரவாகம் எடுக்கும்போதுஇருள் எங்கே இருக்கும். இதைத்தான் ஒரு மகாசித்தன் சொன்னான். மெய்மறந்து நானே ஒளி” என்றான்.

 “அன்பே சிவம்” என்பதற்கும், “நானே ஒளி” என்பதற்கும்பெரிய வேறுபாடு இருப்பதாகஎனக்கு தெரியவில்லை. சரிஅன்பும்ஒளியும் ஒன்றானால்அதை ஞானம்தானே தரவேண்டும். அந்த ஞானத்தை இருள் கிரகமான கேது எப்படி தரமுடியும். இருள் இருப்பதால் தானே ஒளி பிறந்தது. இதை விஞ்ஞானமும் கூறுகிறது. அண்டத்தின் துவக்கம் இருளில்தான் கிடந்தது என்கிறது. அரக்கத்தனத்தில் இருந்து தானே அன்பு பிறக்கும். கெட்டதைத் தடுக்கவே நல்லது பிறக்கும். பரிணாமத்தில் வலுத்தது தானே வாழ்ந்திருந்தது. 

அந்த மிருககுணத்துக்குள் எப்படி அன்பு சுரந்ததோஅதேபோலஇருளாய் கிடந்த மனதுக்குள்ஒளிபுகுந்தது.கேதுஞானக்காரகன், சூரியன்ஆத்மாக்காரகன்,சந்திரன்மனதுக்காரகன்,செவ்வாய்வெற்றிக்கும்,புரட்சிக்கும்காரகன்,புதன்புத்திக்காரகன்,குருஜீவக்காரகன்,சுக்கிரன்களத்திரக்காரகன்,சனிகர்மக்காரகன்,இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எந்த கிரகத்துடனும்கேது கூடலாம். அதில்ஞானம் மட்டும் தான் பிரதானமாக இருக்கலாம். அதை தவிர்த்து விட்டு புறவாழ்வுக்காக வாழ எத்தனிக்கும்போதுவிபரிதமான பலன்களே ஏற்படுகிறது. நாம் வாழப்போகும் வாழ்க்கை இரண்டு நிலைகளைக் கொண்டது.

 இந்த இரண்டு நிலைகளில் இருந்து மூன்றாவதாக ஒரு நிலை உருவாகும். முதல் நிலை இல்லறம் மற்றொன்று துறவறம். இல்லறத்தில் இருந்து துறவறமோதுறவறத்தில் இருந்து இல்லறமோ உருவாகலாம். இதற்குள் எதை அனுபவிக்கிறோம் என்கிற விகிதாசாரமே கர்மா. இதை அடித்தளமாக்க் கொண்டு எழும்பியதுதான் ஜோதிடம். ஏதோ நீங்களும் நானும் மனித ஜென்மம் எடுத்துவிட்டோம். கண்டிப்பாக இல்லறத்தில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்கிறதாக்கம் நம் மரபணுக்குள் பொதிந்திருக்கிறது. இல்லற நாட்டமில்லாத ஒருவனைஇல்லறத்துக்குள் புகுந்ததும்போதுஅவன் விடுபடவே துடிக்கிறான்.

 ஞானமும் (கேதுவும்)ஆன்மாவும் (சூரியனும்)கூடலாம். ஞானமும்மனமும் கூடலாம். ஞானமும்புரட்சிகரமும் கூடலாம்ஞானமும்புத்தியும் கூடலாம். ஞானமும்ஜீவனும் கூடலாம். ஞானமும்காமமும் கூடலாமா? (ஓஷோ என்றழைக்கப்படும் ஞானி காமத்துக்குள் ஞானத்தைத் தேடினார். பிரேமானந்தா என்பவர் ஞானத்துக்குள் காமத்தைத் தேடினார்) ஞானமும்கர்மாவும் கூடலாம்.எல்லாகிரகங்களும் ஞானத்தோடுஅதாவது அகவாழ்வோடு மட்டும் தொடர்பு உடையதாய் இருந்தால் நல்லதே செய்கிறது. 

புறவாழ்வோடு தோடர்புடையதாய் இருந்தால்வாழ்வில் சமாதானம் தோலைந்து சச்சரவே மிகுந்திருக்கும்.இலக்கினத்தில் இராகு இருக்கஏழில் கேது நிற்கும் இந்த ஜாதகர்க்குஇளவயதில் திருமணம் செய்யக்கூடாது. மீறி செய்தால்திருமண வாழ்வு நீடிக்காது. திருமண முறிவினைக் கொடுத்து விடும். இதேபோலஇரண்டாமிடத்தில் கேது நின்றால்அந்த ஜாதகர்க்கு சன்னியாசி யோகத்தை தந்துவிடும். இலக்கினத்திற்கு 6, 8, 12 ல் தாய்க்குக் காரகனான சந்திரன் நின்றுநான்காம் வீட்டில் கேது நின்றால்தாய்க்கு மரணத்தைத் தந்துவிடும்.

 இதேபோல்நான்காம் வீட்டில் கேதுவும்சனியின் மகனான மாந்தியும் கூடியிருக்கஜாதகரின் கடைசி காலம்வரை குடியிருக்கக்கூடவீடுஇருக்காது. . இதுபோன்ற அடிப்படையான விடயங்களை அறிந்துதாங்களும் ஜோதிட ஞானமிக்கவராக மாற விரும்புகிறேன். உங்களுக்குள் உங்களைத் தேடுங்கள். கண்டடைவீர்கள். 

இலக்கினத்தில் இராகு நிற்க:
 மெலிந்தநெடிய உடல்இளமையில் வறுமைஎதையும் சுயமாக செய்யமுடியாதவர்வஞ்சமும்குரூரமும்படபடத்த மனமும்சிவந்த கண்களும்சாப்பாட்டுப் பிரியனும்மறைமுகமாக வேறொருவர் மனைவியை எவருக்கும் தெரியாமல்  அடைபவன்.

இலக்கினத்தில் கேது நிற்க:
குறுகிய உருவமும்கெளரவ பதவி அடைதல்காடுமலை சுற்றும் ஞானியாய்இலைதழைகளை தின்று திரிபவன்பெரும் பொருள் தேடிவைப்பவன்பெண்களுக்கு நேசன்ஆளடிமைகொஞ்சம் பொய் பேசுதல்,

இரண்டில் இராகு நிற்க:
கண்நோய்இருமனைவிகள் ஏற்படும்சரளமாய் பேசும் நகைச்சுவை பேச்சாளன்மத்திய வயதில் யோகசாலிபெண்களின் மேல் விருப்பமுள்ளவன்கர்ப்பிணிப்பெண்ணின் சாபத்தைப் பெற்றவன்.

இரண்டில் கேது நிற்க:
பொருள் தேடி செலவழிப்பான்ஞானமிகுந்தபேச்சாளிமனைவி அமைவதில் ஏதாவது கோளாறு இருக்கும்பலவித புராணங்கள்இதிகாசங்கள் கற்பான்அறிவான வார்த்தைகள் பேசுபவன்.

மூன்றில் இராகு நிற்க:
தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவர்காதுநோய் உள்ளவர்தைரியமுள்ளவன்அரசாங்க ஆதரவு மிக்கவன்அரசு ஆதரவு கிட்டும்பெண்ணால் வாழ்வில் முன்னேறுவான்பலபெண்களுடன் போகம் கொள்வான்புத்திரம் குறைவானவன்உள்ளொன்று வைத்து புறம் பேசுபவன்.

மூன்றில் கேது நிற்க:
தயவு தாட்சண்யமற்றவர்இளைய சகோதரமற்றவர்உண்மையை பேச மாட்டார்பிடிவாதக்காரன்பெண் சுகமற்றவன்தாமதங்களுடையவன்.

நான்கில் இராகு நிற்க :
தாய்க்கு கண்டம்பூமி மனை உண்டாகும்தகப்பன் சொத்தை விரும்பாதவன்.அமைச்சன் போல் அறிவுரை சொல்வான்வாகனங்கள் உடையவன்ஆளடிமைபெருங்கீர்த்தி உடையவன்விஷபயம் உள்ளவன்ஜென்ம பகை உடையவன்பக்தி உடையவன்.

நான்கில் கேது நிற்க:
பலவித்தைகளை உடையவன்மனைவியிடம் சுகமற்றுபரத்தையர் மேல் பிரியமுள்ளவன்ஜோதிடமறிந்து பலன் சொல்பவன்.

ஐந்தில் இராகு நிற்க:
அறிவும்கல்வியும் மிகுந்தவன்ஆண்குழந்தையற்றவன்சுற்றத்தாருக்கு ஆகாதவன்அடக்க ஒடுக்கமானவன்பருவமடையாத பெண் இவனுடன் தொடர்பில் இருப்பால்அதனாலேஉலகில் தப்பானவனாக கருதப்படுவான்குணம் கெட்டவன்மனவழுத்தம் மிகுந்தவன்தாய் மாமனுக்கு தோஷம்ஊர் ஊராகத்திரிபவர்.

ஐந்தில் கேது நிற்க:
அறிவுடையவன்குழந்தைகள் பிறந்து இறக்கும்ஊரில் கெட்டபெயர் இல்லாமல் வாழ்பவன்பெண்களின் பேச்சைக் கேட்பவன்சொத்துள்ளவர்களுக்கு விரோதிதாய் மாமனுக்கு தோஷம்அலைச்சல் உள்ளவர்.

ஆறில் இராகு நிற்க:
பலசாலிதந்திரசாலிபிணியற்றவர்எதிரிகளை வெல்லும் திறன் பெற்றவர்தாய்மாமன் விடு கெடும்ஆட்சியாளர்களுக்கு விருப்பமானவன்கம்பீரமும்மேனி அலங்காரமும்பெண்களைக்கண்ட உடன் மோகம் கொள்வதும்,

ஆறில் கேது நிற்க:
விவசாயிகாணி நிலம்பயிர்பச்சை என்று வாழ்பவன்இளம்பெண்களுக்கு விருப்பமானவன்பலவகையில் பொருள்தேடிஅண்டியவர்க்கு ஆதரவளிப்பவன்ஆச்சாரமும்தற்பெருமையும் உள்ளவர்உண்ணாமல் இருப்பவர்.

ஏழில் இராகு நிற்க:
மனைவிக்கு தீமைகண்டம் ஏற்படும்இருமனைவிகள்பூமி பொருள் தேடுவான்பெண்களை நம்பாதவன்மனைவியின் சொத்து கிட்டும்கபடுகுணம்எவரையும் நம்பாதவன்தொட்ட காரியத்தை முடிப்பதில் தீரன்நோயுடையவளோபகை குணம் கொண்டவளோ மனைவியாக வாய்ப்பாள்.

ஏழில் கேது நிற்க:
கணவன்மனைவி பிரிவினைகாலதாமத திருமணத்தையும் தரும்நோயுள்ள மனைவியும்பகையோடு பேசுபவளாகவும்ஆனால்புகழுடையவன்இவன்மேல் புத்திரர்கள் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள்.
எட்டில் இராகு நிற்க:
உற்சாகன்கம்பீரமுள்ளவன்படபடப்பை வெளியில் காட்டாதவன்விஷபயம் உடையவன்வாய்பேச்சில் வல்லவன்பலபேருடன் விருப்பமுள்ளவன்மனைவியின் சாபத்தைப் பெற்றவன்வெறுப்பும்குரோதமும்பிணியும் ஏற்படும்வாக்கு பலிதமுடையவன்.

எட்டில் கேது நிற்க:
எடுத்த பணியை முடிப்பவன்நோயுள்ள மனைவிமனைவி விரும்பும் மனிதன்அதிக கீர்த்தியும்பல பூமியும் உடையவன்தேய்வக்குற்றத்தால் வாழ்வில் ஏற்றத்தாழ்வு இருக்கும்.

ஒன்பதில் இராகு நிற்க:
தந்தைக்கு கண்டம்பாக்கிய இழப்புகுலத் துரோகிகுடும்பத்தை கலைக்கும் குரூப எண்ணம் கொண்டவன்பொருளும் செல்வமும் ஆயுள் மட்டும் இருக்கும்அண்டியோரைக் காப்பவன்சர்ப்பதோஷம் உண்டு.

ஒன்பதில் கேது நிற்க:
நாளுக்குநாள் விருத்திதந்தை சொத்து வந்து செரும்.  நட்டமான பொருளும் கைக்கு வந்து சேரும்புத்திர தோஷம் உண்டுசிறிய தகப்பனுக்கு தோஷம்.

பத்தில் இராகு நிற்க:
வேதங்கள் முதற்கொண்டு ஜோதிடம் வரை கற்று தேர்வான்பல தொழிகள் பார்ப்பான்இவனுடன் பல ஜனங்கள் இணைவார்கள்ஆட்சியாளர்களுக்கு இணக்கமானவன்வாக்கு பலிதமுள்ளவன்மனைவி சுகமற்றவன்.உயர்பதவியை அடைவான்சதா பிரயானமும் வீண்செலவும் உடையவன்.

பத்தில் கேது நிற்க:
பெரும் பொருள் தேடிவைப்பான்மனைவியின் சொல்லை தட்டாதவன்.தானதருமங்கள் செய்பவன்யாருக்கும் அடங்காதவன்.  கம்பீரமாக சிரிப்பவன்மருத்துவம்இர்சாயனம் சார்ந்த துறையில் இருப்பார்இளகிய மனம் உடையவர்.

பதினொன்றில் இராகு நிற்க:
 கலைத்துறையில் இருப்பார்அதில் வருவயும்இலாபமும் அடைவார்திடீர் பணக்காரராகவும்புறம்போக்கு நிலத்தை தனதாக்கிக் கொள்பவர்போட்டி பந்தயங்களில் வெற்றிபெறுபவர்மனைவியை நம்பாதவன்வேறொரு பெண் துணை உண்டாகும்.

பதினொன்றில் கேது நிற்க:
செல்வந்தர்.பொருள் தட்டுப்பாடு இருக்காதுநண்பர்களிடம் நல்ல செல்வாக்கு உண்டுநிலபுலத்தால் இலாபம்தானாக பொருள் கூடும்வார்த்தையில் கள்ளமில்லை.உலகில் நல்ல பேர் எடுப்பான்.அண்டியவர்க்கு ஆதரவளிப்பான்தியாகம் உடையவன்எவர்க்கும் அஞ்சாதவன்.

பனிரெண்டில் இராகு நிற்க:
முதுமையில் நோயுடையவன்புண்ணியங்கள் செய்பவன்தீய சகவாசம்நீச்ச சகவாசத்தால் அதிக செலவுவருவாய் குறைவு இருக்காதுஉறவுகளும்நண்பர்களும் உதவுவார்.

பனிரெண்டில் கேது நிற்க:
முக்திக்கு வழி வகுக்கும் இது கடைசி பிறவி என்பர்மறுபிறவி இல்லைபிறவித்துன்பத்தில் இருந்து விடுதலைகடைசி காலத்தில் பிணிகள் இல்லைபுனிதன்உத்தமன்நினைத்ததை முடிப்பவன்வெளியுலகில் உள்ளோர்க்கு நல்லவனாய் இருப்பார்


இலக்கினத்தில் இராகு இருக்கஏழில் கேது நிற்கும் இந்த ஜாதகர்க்குஇளவயதில் திருமணம் செய்யக்கூடாதுமீறி செய்தால்திருமண வாழ்வு நீடிக்காதுதிருமண முறிவினைக் கொடுத்து விடும்இதேபோலஇரண்டாமிடத்தில் கேது நின்றால்அந்த ஜாதகர்க்கு சன்னியாசி யோகத்தை தந்துவிடும்.


இலக்கினத்திற்கு 6, 8, 12 ல் தாய்க்குக் காரகனான சந்திரன் நின்றுநான்காம் வீட்டில் கேது நின்றால்தாய்க்கு மரணத்தைத் தந்துவிடும்இதேபோல்நான்காம் வீட்டில் கேதுவும்சனியின் மகனான மாந்தியும் கூடியிருக்கஜாதகரின் கடைசி காலம்வரை குடியிருக்கக் கூட வீடு இருக்காது.


 இராகுகேதுக்களுக்கு வாரநாட்களில் இடம்தரவில்லைஅஷ்டவர்க்க கணிதத்திலும் பரல்கள் ஒதுக்கப்படவில்லைகாரணம்இவையிரண்டும் மாயக்கிரகங்கள் என்பதால்நிழல்களுக்கு தனியாக இயங்கும் தன்மை இருக்காது என்பதை அடிப்படையாகக் கொண்டு வாரநாட்களில் பங்கோஅஷ்டவர்க்கக் கணிதத்தில் பரல்களோ ஒதுக்கப்படவில்லைஅதனால்,  கேது தன் தசாகாலத்தை  செவ்வாயின் தசாகாலமான 7 வருடத்தைப்போலதன் தசாகாலத்தை 7 வருடமாக தருகிறான்செவ்வாயைப் போலவே பலன்கள தனக்கு அதிகாரம் கிடைக்கும் காலங்களில் தன் தீர்ப்பை தயங்காமல் வழங்குகிறான்அதனால்கேது  தசாபுக்தி,அந்தரம் நடப்பில் உள்ளவர்களும்,   கேதுவால் பாதிக்கப்பட்டவர்களும்,    செவ்வாய் கிழமையன்றுமந்திரத்தையும்,சுலோகத்தையும் பாடி வணங்கலாம்.


வீடு வாசலை சுத்தம் செய்தபின்குளித்து முடித்துசெவ்வாய் கிழமை காலையில் 6.00மணிமுதல் 7.00வரை          செவ்வாய்க்குரிய ஓரையான செவ்வாய் ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும்.  ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்

இங்கே  கேதுவுக்கு என்று தனிக்கிழமைகள் வருவதில்லை என்பதால் செவ்வாயைப்போல்பலன்தரும் செவ்வாய் ஆளும்   செவ்வாய்க்கிழமை அன்றுயாருடைய ஜாதகத்தில் வலுக்குறைந்த  கேது உள்ளாரோ அவர் மட்டும்பூஜைநேரத்தில் பல நிறத்தாலான வேட்டியோசேலையோஅணிந்து கொண்டுஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய்பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டுபஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும்சார்ட் அட்டையில்  கேதுவுக்காக  வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல்  கொள்ளுவைப்   பொடிசெய்து பூஜை அறையிலோவழிபாட்டுத்தளத்திலோகால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும்.

 மேலும்,   பாம்பு போல் துருக்கம்கல்லில் வரைந்தஅல்லதுசெதுக்கியோ மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும்தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்துஅதில் இடுவதற்காக செம்மரப்பொடியை எடுத்து வைத்துக் கொள்ளவும்பின்னர் கொள்ளு சாதத்தைநாம் இதுவரை புலங்காதபயன்படுத்தாத தட்டில் நிவேதனப் படையலாக வைக்கவும்.    கேதுவின் அதிதேவதையான பிரம்மா படத்தையும்அதனருகில் தர்ப்பைப் புல்லையும் மந்திரக் கோலம் அருகில்  வைக்கவும்.


செவ்வாய்க்கிழமையன்று ஒருவேளை உணவாக  கொள்ளுவை வேகவைத்து சாதத்துடன் உண்ணவும்மறுவேளை கொள்ளுவையும் உணவாக்கிக் கொள்ளதங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.


இப்போது மனமுறுகி  மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல்பார்த்துக் கொண்டேஎத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டு தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய்        கேது பகவானே!    என   கேதுவின்     துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்கபனிபோல் பிறவித்துன்பம் விலகும்.


கேதுபொன்னங் கிரிஇடமாப் போதுவான்மோகினியால்முன்னம் தலையிழந்த மூர்த்தியான் – மன்னுகையில்மோதுகதை அஞ்சல் உள்ளான் மூண்ட கருநிறத்தான்கேதுஎன்று சொல்வர் கிளந்து.       
                    

கேது துதி.
பொன்னையின் னுரத்தில் கொண்டோன் புதல்வர்தம்பொருட்டால் ஆழிதன்னையே கடந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்றபின்னைநின் கரவால் உண்ட பெட்பினில் சிரம்பெற்றுஉயர்ந்தாய்என்னை ஆள கேதுவே இவ் விருநிலம் போற்றத் தானே!!

அபிராமி அந்தாதி.
 என்குறைதீர நின்றே ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்நின்குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்!
தன்குறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே. 72.
தங்குவார் கற்பகத் தாருவின் நீழலில் தாயரின்றிமங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்பொங்குவார் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தவுந்திக்கொங்கிவர் பூங்குழலால் திருமேனி குறித்தவரே! 76.  

உங்களின் ஜென்ம நட்சத்திரம்  கேது சாரம் பெற்றிருந்தால்அதாவது  அசுவினிமகம்மூலம்என இந்த மூன்றில் ஒன்றுஜென்ம நட்சத்திரமாக இருந்தால்அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும்அது  அசுவினியில்   பிறந்திருந்தால் எட்டிமரத்தையும்மகத்தில் பிறந்திருந்தால்ஆலமரத்தையும்மூலத்தில் பிறந்திருந்தால்மாமரத்தையும்நட்டுபராமரித்து வந்தால்கேதுவால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.
 இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் கேது இருந்தால்பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம்இது மட்டுமல்லஇரிடபத்தில் நீசம் பெற்ற   அமைப்பையுடையவர்களும்இலக்கினத்துக்கு  8, 12 ல்  கேது மறைந்துள்ளவர்களும்இலக்கினாதிபதிக்கு 8, 12 ல் கேது   மறைந்து உள்ளவர்களும்,  பாவியானசூரியன்சந்திரன்செவ்வாயுடன் கூடியகேது எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும்இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.   கேது தசைகேது புக்தி,அல்லது கேது அந்தரம்இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும்கேது தசையோ,   கேது புக்தியோ நடப்பில் இருப்பவர்களோஅல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும்இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும்சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.


வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர்அஞ்சல்.624 701
 ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.
          

No comments:

Post a Comment