வாய்ச்சாலம் காட்டி
கோள்சாரம் பழிக்காதே.
அதிகமாய் படிச்சோம்னு
ஆட்டம் தான்
போடாதே.
ஐவரோ ஒருவீட்டில்
கால்நீட்டி அமர,
பசிபஞ்சம் தலைவிரித்து
பேயாட்டம் போடுமடா?
வாய்ச்சாலம்…
அறுவரோ ஒருவீட்டில்
ஆறமர அமர,
ஆளவந்த அரசனுமே
ஐயோனுதான் போவானே.
வாய்ச்சாலம்…
ஒரு ராசிமண்டலத்தில்
எழுவருமே ஏறி
நிற்க,
நிலமகளே நிலைகுலைந்து
பலழிந்து போவாளே.
வாய்ச்சாலம்…..
No comments:
Post a Comment