Friday 19 December 2014

மேளம் கொட்டு….. தாலி கட்டு… 6



எல்லோரும் உடலழகைத்தான் விரும்புகிறீர்கள் என்று, என்னை தொடர்பு கொள்ளும் நண்பர்களின் கேள்விகளில் இருந்து புரிந்து கொண்டேன்.

இலக்கினத்தில் வளர்பிறைச் சந்திரன் இருந்து, அவரை மற்றொரு நல்லக்கிரகமான சுக்கிரன் காண, ஜாதகருக்கு வரக்கூடிய மனைவி பேரழகு மிக்கவளாக இருப்பாள். அதுவும், அந்த லக்கினம் பெண் லக்கினமாக இருந்தால் அவள் பேரழகு மிக்கவளாக இருப்பாள். இவர்கள் இருவரும் ஆறாமதிபதியின் சாரம் அல்லது தொடர்பு பெற்றால், அழகோடு நோயும் இலவச இணைப்பாகப் பெற்றுக்கொள்ளலாம். இவர்கள் எட்டுக்குடையவரின் சாரம் அல்லது தொடர்பு பெற்றால் அழகியாகவும் குறுகுகிய எண்ணம் கொண்டு குதர்க்கமாக பேசுபவளாகவும் இருப்பாள். அவர்களே, பன்னிரண்டுக்குடையவரின் சாரமோ, தொடர்போ பெற்றால், அழகுடன் செலவாளியானவள் மனைவியாக வருவாள்.

இலக்கினத்திற்கு ஏழாமிடத்தின் அதிபதி நல்லக்கிரகமாக இருந்து, அவரே நவாம்சத்திலும் நல்லகிரகங்களுடன் கூடியிருந்தால், ஜாதகர்க்கு வரக்கூடிய மனைவி அல்லது வாழ்க்கைத்துணை அழகுமிக்கவராக இருப்பார்.

உங்களின் ஜாதகத்தில் ஏழாமதிபதி குரு என்கிற வியாழன் சாரமோ, தொடர்போ பெற்றால், தங்கள் இல்லத்தரசி புனிதவதியாக இருப்பாள், அதேபோல் கணவனாக இருந்தால், “பிறர்மனையை ஏறெடுத்தும் பாராதவனாக”  இருப்பான்.
உங்கள் இலக்கினத்திற்கு ஏழாம் வீட்டில், களத்திரகாரகன் எனும் சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்திருக்க, உங்களுக்கு வரக்கூடிய மனைவி, “கைம்பெண்ணாக” இருக்கக் கூடும் என, ஜாதக அலங்காரம் கூறுகிறது. இந்த கருத்து உண்மை என்றாலும், இந்த ஏழில் இருக்கும், சுக்கிரனையும், செவ்வாயையும் பார்க்கும் கிரகங்களைப் பொறுத்தும் பலன்கள் மாறுபடும் அல்லவா?  காலபுருடனின் ஒன்பதாம், மற்றும் விரைய அதிபதியான குரு காண, இவளை மணம்புரிந்தபின் செல்வம் கிட்டும். முற்பிறவிக்கான அனைத்து யோகங்களும் ஜாதகர்க்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதேபோல், காலபுருடனின் பத்தாம் அதிபதியான சனி பார்வை கிடைக்க, வேலையில் உள்ள அல்லது உழைக்கத் துணிந்த பெண்ணே மனைவியாக வர வாய்ப்புள்ளது. இவர்கள இராகு காண, போகமிகுந்தவளையும், அன்னிய மதம், அன்னிய மொழி பேசுபவளாகவும் எதையும் பெரிது படுத்தும் குணமுடையவளாகவும் ஜாதகர்க்கு வாய்ப்புள்ளது. அதேபோல் கேது காண, ஞானமிகுந்தவளாகவும், மிகுந்த சூட்சும்ம் மிகுந்தவளாகவும் இருப்பாள். சூரியன் காண, அதிகாரம் மிக்கவளாகவும், ஆளுமைத்திறன் மிக்கவளாகவும் இருப்பாள். சந்திரன் காண, அழகும், மனலயிப்போடு வாழும் திறன் உள்ளவளாகவும் இருப்பாள்.

உங்களின் இலக்கினத்திற்கு ஏழாமதிபதி சுகவீட்டான நான்கிலோ, அல்லது ஜீவன வீடான பத்திலோ இருக்க, வரக்கூடிய வாழ்க்கைத்துணை, பெரும்யோகமிகுந்தவராக, சொத்து சுகம் அத்தனையும் கொண்டுவருபவராக இருப்பார்.

சந்திரன் நின்ற ராசிக்கு ஏழாம் ராசியையும், இலக்கினம் நின்ற வீட்டுக்கு ஏழாம் வீட்டையும் நல்லகிரகங்களான சுக்கிரன், புதன், வியாழன் முதலிய கிரகங்கள் பார்க்கவேண்டும். அப்படி பார்த்திருந்தால் ஜாதகனுக்கு அவசியம் திருமணம் நடைபெறும். இவர்கள் யாரும் பார்க்காமல், பகைகிரகங்கள் மட்டும் பார்த்தாலோ, அல்லது 6,8,12 மதிபதிகள் பார்த்தாலோ, ஜாதகனுக்கு திருமணம் நடக்கவாய்ப்பில்லை.

இலக்கினத்திற்கு இரண்டாம் வீட்டிலும், ஏழாம் வீட்டிலும் பாவக்கிரகங்கள் நிற்கலாம். ஆனால், இரண்டு, ஏழாம்வீடுகளை பாவக்கிரகங்கள் பார்க்க்க் கூடாது. அப்படிப் பார்த்தால், ஜாதகனுக்கு இருதாரம் ஏற்படும்


முத்துப்பிள்ளை ஆத்தூர். 91501 06069 ; 9345656268

No comments:

Post a Comment