Thursday 12 November 2015

ஜோதிடத்தில் “நான்” என்பது யார்?. முத்துப்பிள்ளை. 91501 06069, 87548 73378, 89405 29429



இந்த நாள், இந்த நேரம், இந்த நொடியில், இந்த இடத்தில், பிறக்கும் என்மேல் விழும் “நான்” என்கிற குறியீடு தான் இலக்கினமாகும். பஞ்சபூதங்களின் கலவையில், “மனம்” புகுத்தப்பட்டு, ஆன்மா ஈடேற்றத்திற்கான கர்மாப்பிணைப்புகளுடன் ஜீவன் உதிக்கிறது. அண்டங்களின் அணுத் தாக்கலில், அனுதினமும் வினைகள் நடந்தேறி வருகின்றன. இயக்கம் எங்கோ நடக்க, இங்கே இயங்குதல் நடக்கிறது. கர்ப்பவாயில் இருந்து உதிர்த்து விடப்பட்டு, தொப்பூள் கொடி நறுக்கப்பட்டவுடன், நாம் அண்டத்தில் தனித்து விடப்பட்டு, கிரகவீச்சுகளாலும், நட்சத்திர வாயுக்களாலும், தாது, கனிமங்களாலும் இயங்க வைக்கப்படுகின்றோம்.

இந்த சக்தியின் வேதிக்களின் கூடுதல் குறைச்சலே நம் கர்மாக்களையும், மனதையும் ஆன்மா ஓட்டத்திற்காக ஜீவனோடு இழுத்துச் செல்கின்றன. இங்கேதான் “நான்” என்கிற இலக்கினம், காலதேவனின் அண்டத்தில் அடங்கிய பன்னிரண்டு மண்டலங்களிலும் புகுந்து வெளி வருகிறது. ஒவ்வொரு மண்டலங்களிலும், ஒவ்வொருவிதமான தாக்கங்கள் ஜீவனுக்குள் ஏற்படுகின்றன. இங்கே ஆத்மா, மனம், கர்மா மூன்றும், ஒன்றுக்கொன்று இயங்குவதும், இயங்க மறுப்பதுமான நிலை ஏற்படுவதால், “நான்” என்கிற இலக்கினத்திற்கு கிடைக்கவேண்டிய நற்பலன்கள் கிடைத்தும், இயங்க மறுப்பதால் கிடைக்காமலும் போய்விடுகின்றன.

கேந்திரம் என்கிற 1, 4, 7, 10 என்கிற இராசி மண்டலத்திலும் ,

பணபரம் என்கிற 2, 5, 8, 11 என்கிற இராசி மண்டலங்களிலும்,

ஆபோக்கிலீயம் என்கிற 3, 6, 9, 11 என்கிற இராசி மண்டலங்களிலும்,

துர்ஸ்தானம் என்கிற 12 என்கிற இராசி மண்டலத்திலும்,

ஆத்மா, மனம், கர்மா என்கிற மூன்றையும் இழுத்துச் செல்லும் போது ஜீவன்பெறப்போகும், இலாப, நட்டங்களைச் சொல்வதுதான் ஜோதிடம்.

உங்களின் இலக்கினதிபதி ஆண்கிரகமாகி இலக்கினத்திலே இருந்தால், உடல்பலமுள்ளவன், தன் சுயபுத்தியால் இயங்கக்கூடியவன், தனக்கென கொள்கை கோட்பாடுகளைக் கொண்டவன், மனதில் சஞ்சல மிக்கவன், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்டவன். பிறர் மனை நோக்குபவன்.

உங்களின் இலக்கினதிபதி இரண்டிலோ, பதினொன்றிலோ இருந்தால், அதிக வருமானம் கொண்டவன். படித்தவன். பல கலைகள் கற்றவன். நல்லது, கெட்டது அறிந்தவன். தன்மையான குணம் கொண்டவன். மனதுக்குள் அறச்சிந்தனைகள் மிகுந்த, மனிதத் தனமையுள்ளவன். வாழும் மனிதர்களில் உதாரணமாக, இவைச் சொல்லலாம்.

உங்களின் இலக்கினதிபதி மூன்றிலோ, ஆறிலோ இருக்க, தரத்திலும், அறிவிலும், பணத்திலும் எவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவனையும், குறிபார்த்து தாக்கி அழிப்பதில் வல்லவன். நல்லறிவும், நற்சுகமும், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் வாழும் நிலையும் உருவாகும்.

உங்களின் இலக்கினதிபதி நான்கிலோ, பத்திலோ இருக்க, பெற்றவர்கள் அன்பும் அரவணைப்பும் அதிகமிருக்கும்.சகோதர்கள் ஆதரவும், தொழில் மேன்மையும் பெருகும், உடலழகும் உள்ளவனாகவும் இருப்பான்.

உங்களின் இலக்கினதிபதி ஐந்தினில் இருக்க, கவுரவம் மிக்கவன். அதிக மக்கட்பேறு கொண்டவன். முதல் குழந்தை உடல்நலம் பாதிப்போ, இழப்போ ஏற்படும். அதிக கோபம் உள்ளவனாவன். அரசு ஆதரவும், அதில் பணியும் ஏற்படும்.

உங்களின் இலக்கினதிபதி ஏழாமிடத்தினில் இருக்க, மனைவி நட்டமும், விரக்தியுள்ளவனும், அடிக்கடி தேசாந்திரம் செல்பவனாகவும், வறியவனாய் இருப்பான். ஆனால், சுபக்கிரகம் பார்த்தால் நன்மையும், பாவக் கிரகங்கள் தீமையானப் பலன்களும் கிடைக்கும்.

உங்களின் இலக்கினதிபதி எட்டு, பனிரெண்டாமிடங்களில் இருக்க, மறைவான சாத்திரங்களை நிறைவாகக் கற்றவனும், சிற்பவித்தைக் கற்றவனும், அதிகக் கோபமுள்ளவன், பிறமகளிரை விரும்பிப் புணர்பவனாக இருப்பான்.

உங்களின் இலக்கினதிபதி ஒன்பதாமிடத்தினில் இருக்க, பாக்கியம் மிக்கவன், எல்லோரிடமும் அதிகாரம் மிக்கவன். இறைபக்தி மிக்கவன், நாவன்மை மிக்கவன், மக்கட்செல்வமிக்கவன்.

உங்களின் இலக்கினத்திற்கு இரண்டுக்குடையக் கிரகம், இரண்டாமிடத்தினிலே இருந்தால், பார்க்கிறப் பொருட்களின் மேலும் ஆசை கொண்டு, அதை அடைய முயற்சி எடுப்பான். தன்னைப் போல் எவனுமில்லை என்கிற கர்வம் கொண்டவன். ஒன்றுக்கும் மேற்பட்டப் பல பெண்களை அடைவான், அல்லது அவர்களோடு குடும்பம் நடத்துவான். புத்திரர் இருக்காது. ஒருவேளை இருந்தாலும் உதவாக்கரையாக இருப்பான்.
 
இரண்டுக்குடையவன் மூன்றாமிடமான வீரியஸ்தானத்திலும், நான்காமிடமான சுகஸ்தானத்திலும் இருந்தால், வெற்றிக்கு மேல் வெற்றியை அடைபவனாகவும், அறிவுத்திறன் கூடியவனாகவும், கஞ்சத்தனம் மிக்கவன், தன் முயற்சி இருந்தால் போதும், வாழ்வில் மாற்றங்களைக் காண முடியும் என்கிற நம்பிக்கை கொள்வதால், இறைசக்தி மேல் பற்று இல்லாதவனாகவும் இருப்பான். அடுத்தவன் மனைவியின் மேல் வெறி கொண்ட புணர்ச்சி ஆசை கொண்டவன்.

இரண்டுக்குடையவன் ஆறில் இருந்தால், பகைவர்களால் செல்வ இழப்பைச் சந்திப்பார். எதிரிகளிடம் பணிந்து ஊதியம் பெறும் நிலையும், விருப்பமே இல்லாமல் அலுவல் செய்யும் நிலையும் ஏற்படும். மலத்துவாரங்களிலோ, அடிவயிறு, மற்றும் நெஞ்சுப் பகுதியிலும் வலி அல்லது நோய் இருக்கும்.

இரண்டாமதிபதி ஏழாமிடத்தினில் இருந்தால், மருத்துவமுறைகள் தெரிந்தவன். பிறர் மனை நோக்குபவன். இவனைப் போலவே இவன் மனைவியும் இருப்பாள். அன்னையின் மேல் அவதூறு கருத்துக்களும் இருக்கும்.

இரண்டாமதிபதி எட்டாமிடத்தினில் இருந்தால், சொத்துக்கள் சேரும். பூமி, செல்வம் உள்ளவன். மனைவினால் அளவான சுகம் கூட இருக்காது. மூத்த சகோதரனால் ஆதரவிருக்காது.

இரண்டாமதிபதி பாக்கியஸ்தானமெனும் ஒன்பதிலோ, இலாபஸ்தானமெனும் பதினொன்றிலோ இருக்க, செல்வச்செருக்குடன் வாழ்பவன். அதிகமாக தானதர்மங்களில் ஈடுபடுபவன். தன் வாழ்நாள் முழுதும் சுகபோகமாக வாழ்பவன். உடல் உறுதியுள்ளவனாக இருந்தாலும், இளவயதிலே நோய் தாக்கம் அதிகமிருக்கும்.

இரண்டாமதிபதி ஜீவனஸ்தானமெனும் பத்தினில் இருந்தால், காம எண்ணம் அதிகமிருக்கும். சமூகசெல்வாக்குடையவனும், அதிகம் படித்தவனும், அனுபவமும் மிக்கவனும், பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பவனும், மக்கட் செல்வம் குறைவாய் பெற்றவனுமாகவும், அதிகச் செல்வங்களைக் கொண்டவனுமாக இருப்பான்.

இரண்டாமதிபதி பனிரெண்டாமிடத்தில் இருந்தால், அன்புடையவன், இனியதன்மை கொண்டவன், வறுமை உள்ளவன். அரசாங்கத்தால் ஊதியம் பெற்று அதனால், ஜீவனம் நடத்துபவனாகவும் இருப்பான். தன் கொள்கை எதுவோ, அது மட்டுமே சிறப்பானது என்று இறுமாப்புடன் இருப்பான்.


இரண்டாமதிபதி இலக்கினத்திலும், ஐந்தாமிடத்திலும் இருந்தால், தன் குடும்ப மேன்மைக்காக ஓடாய் உழைப்பான். அதிக செல்வங்கள் உடையவன். பிறர் முயற்சிக்கு பேருதவி புரிபவனாகவும் இருப்பான். ஆனால், இவன் பழிபாவம் சுமந்தவனாக வாழ்ந்து முடிப்பான்.   

No comments:

Post a Comment