எந்தெந்த
கிரகத்தொடர்பால், வீடுகளால் இலாபமடையும் நிலையைக் காண்போம்.
இலகினத்திற்கு
மூன்றாமதிபதியும், வீடு, வண்டிவாகனத்தைக்
குறிக்கும் நான்காமதிபதியும், ஒன்பதாமிடம் அல்லது
பத்தாமிடத்தினில் கூட, சகோதரனால் தொழில் , இலாபம் அடைவார்கள். நான்காமதிபதியும், மூன்றாமதியும் கூடி பதினொன்றில் அமர, அல்லது,
செவ்வாயும் மூன்றாமதிபதியும் கூடி பதினொன்றில் அமர, வீடுமனையால், சகோதரனால் இலாபமடைவார்கள்.
பூமியைக்குறிக்கும்
நான்காமதிபதியும், தாயாரைக்குறிக்கும் சந்திரனும் கூடி,
இலாபத்தானத்தில் அமரவும், அல்லது
இலாபத்தானாதிபதி இலக்கினத்தில் அமர்ந்தாலும், தன் தாயாரால்
வீடுமனை அடைவார்.
நான்காமதிபதியும், பொன்னவன் என்று அழைக்கப்படும் குருவும் கூடி இலாபவீட்டில் அமர்ந்தாலும்,
அல்லது இவர்களுடன் இலாபத்தானதிபதி இலக்கினத்தில் அமர்ந்தாலும்,
ஜாதகர் நண்பர்கள் மூலம் வீடுமனையால், வண்டிவாகனத்தால்
நன்மையடைவார்.
1,3,4,10 க்குடையவர்கள் ஏதேனும் ஒருவகையில்
ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு, 11 மிடத்திலும் இணைந்தாலோ,
அல்லது தொடர்பு கொண்டாலோ, ஜாதகர்
சுயமுயற்சியால் வீடுமனை தேடிக்கொள்வார்.
இதே
போன்றுதான் மனைவியின் வழியிலும் வீடுமனை தேடிவரும் அமைப்பைக் காணவேண்டும். ஏழாமதிபதியும், நான்காமதிபதியும் பத்தினில் தொடர்பு
கொள்ள, அல்லது பதினொன்றில் தொடர்பு கொள்ள, மனைவியால் இலாபம் அல்லது வருமானமும் கிடைக்கும்.
ஒவ்வொரு
காரகத்தையும், பாவகங்களுடன் தொடர்புபடுத்தி, உங்கள் ஜாதகப்பலன்களைப் பார்த்துக்கொள்ளலாம். நாம்
மேலே கூறிய கிரகங்கள் 6, 8, 12ம் அதிபதிகளின் தொடர்போ,
அல்லது சாரமோ, அல்லது இணைவோ பெற்றிருக்ககூடாது.
உங்களுடைய
ஜாதகத்தில் வீட்டைக் குறிக்கும் நான்காமிடத்தை, சுபக்கிரகங்கள் காணவேண்டும், அவ்வாறு இல்லாமல் சனி
போன்ற பாவக்கோள்கள் பார்க்கக் கூடாது. உங்களின்
இலக்கினத்திற்கு நான்காமிடத்தில் சனியும், சனியின் மகனான
மாந்தியும் அமர்ந்து இருந்தால், அந்த ஜாதகருக்கு வீடே இல்லாத
நிலையே இருக்கும். அவரின் பெயரில் கூட வீடுமனை தங்காது.
அதேபோல, பொன்னவன் என்று அழைக்கப்படும் குரு,
இலக்கினத்திற்கு மூன்றில் இருந்தும், நான்காமதிபதியையும்,
சுக்கிரனையும் சனி பார்க்க, ஜாதகன் பழங்கால
வீட்டில் வாழ்வான்.
இலக்கினத்திற்கு
நான்காம் வீட்டினில் சனியும், மனையைக்குறிக்கும் செவ்வாயும் இருந்தால்,
தீப்பிடித்த வீட்டிலோ, அல்லது, “கன்னங்கறேறென்று” இருக்கும் வீட்டினில்
குடியிருப்பார்.
இலக்கினத்திற்கு
நான்காமிடத்தினில் சனியுடன், பாவக்கோள்கள் இருக்க, ஜாதகன் கூறைவீட்டினில் வாழ்வான். அது தற்சமயம்,
‘அரசுவீடாகவும்” இருக்கலாம்.
இலக்கினத்திற்கு
நான்காமதிபதியும், சுக்கிரனும் 6,8,12 ல்
இருக்க, இவர்களை சுபக்கிரகங்கள் காணாவிடில், அடிக்கடி வீட்டில் துக்கநிகழ்ச்சிகள் ஏற்படும். பொதுவாக,
நான்காமிடத்தினில் கரும்பாம்புக் கிரகமான, இராகு
இருக்க, ஜாதகர் பிறந்த வீடு அழியும் நிலையிலோ அல்லது,
புனரமைக்கப்பட வேண்டிய நிலையிலோ இருக்கும்.
ஒரு
ஜாதகத்தில் 3,6,10,11 இந்த நான்கு இடங்களைத் தவிர,
மற்றைய இடங்களில் பாவக்கிரகச் சம்பந்தம் இருந்தால், அந்த பாவகம் வளர்ச்சியடையாது. ஜோதிடத்தைப் பற்றி
சிலகருத்துக்களை நாம் மேலோட்டமாக தெரிந்து கொண்டாலே, அந்த
கருத்தை வைத்து நாம் உள்நோக்கிப் பயணம் செய்ய வசதியாக இருக்கும். நம்முன் நிற்கும் மாபெரும் மலையாக ஜோதிடத்தை எண்ணாமல், நாமும் அதில் ஏறி பயணிக்க முடியும் என எண்ணுங்கள். மீண்டும்
சந்திப்போம்.
No comments:
Post a Comment