Friday 16 January 2015

வீட்டைக் கட்டிப்பார்…… 1 முத்துப்பிள்ளை.





ஒருமனிதன் தன் வாழ்வில் நிறைவான வாழ்வை, அடையவே துடிக்கிறான்.   அவனை ஆண்மகனாகக் காட்டிக்கொள்ள, ஒரு பெண் தேவைப்படுகிறாள். அவன் தனக்காக, தன் குடும்பத்திற்காக குடியிருக்க ஒரு கூடு தேவைப்படுகிறது.

ஜாதகரின் குடும்பம் வசிப்பதற்கான, “வீட்டைஎப்படி அடைகிறார். யார்யாருக்கெல்லாம் வீடுவாசல் உண்டு. அவர்களின் வாழ்க்கைத் தரம் என்ன என்பதைப் பற்றி, வரும் நாட்களில் சில பதிவுகளைக் காண்போம்.

நாம் முந்தையப் பதிவுகளில் சொன்னதுபோல, இலக்கினாதிபதி என்பது ஜாதகனைக் குறிக்கும். இலக்கினத்திற்கு இரண்டாமிடம் என்பது, ஜாதகரின் பணத்தை, குடும்பத்தைக் குறிக்குமிடம். அதேபோல், நான்காமிடம் என்பது, ஜாதகனின் வீட்டைக் குறிக்குமிடமாகும். பத்தாமிடம் என்பது, ஜாதகரின் முயற்சியையும், தொழிலையும் குறிக்குமிடமாகும். இப்போது, ஒன்றாமிடமான ஜாதகர், அவரின் தொழில்வீட்டில் அமர்ந்து இருக்க, ஜாதகரின் பணம், குடும்பத்தைக் குறிக்கும் இரண்டாமதிபதி, குடியிருக்கும் வீட்டைக் குறிக்கும் நான்காமதிபதியும் ஒருவர்வீட்டில் மற்றவராக பரிவர்த்தைப் பெற்று இருக்க, ஜாதகர் பல வீடுகளுக்கும், விவசாயப் பண்ணைகளுக்கும், பல காலியிடங்களுக்கும், தோட்டந் துரவுகளுக்கும், காடுகரைகளுக்கும், ஜாதகர் சொந்தக்கார்ராக இருப்பார்.

ஜாதகனின் பாக்கியத்தைக் குறிக்கும், ஒன்பதாமதிபதியும், ஜாதகனின் இலாபத்தைக் குறிக்கும் பதினொன்றாமதிபதியும், செவ்வாயுடன் கூடி, ஜாதகனின் நான்கெனும் வீட்டைக் குறிக்கும் இடத்தில் அமர, காண்கின்ற பூமிநிலம் எல்லாம் ஜாதகனுக்கே சொந்தமாகும். கணக்கற்ற வீடுகளும், மாடமாளிகைகளும், அதனால், தொழிலும் உண்டாகும். நிலத்தாலும், மனைகளாலும், வீடுகளாலும் ஜாதகன் பெருவாழ்வு வாழ்வான்.                     
 இலக்கினத்திற்கு நான்காமதிபதிதான், வீடு, மனை விவசாய நிலங்களுக்கு அதிபதி என்று அறிந்துள்ளோம். இப்போது, அந்த லக்கினத்திற்கு நான்காம் அதிபதி, சந்திரனின் வீட்டில் இருந்து, பூமிக்காரகனாக செவ்வாயுடன், சந்திரன் கூடி, வீடுமனையைக் குறிக்கும் நான்காம் வீட்டில் அமர, ஜாதகனான நீங்கள் செய்யும் வேளாண்மைத் தொழிலிலால் பெருத்த லாபம் அடைவீகள். அந்த நிலபுலனை வைத்துத்தான் உங்கள் முன்னேற்றமே இருக்கும். உங்களின் விவசாய நுட்பத்தால் அரசின் முதன்மைப் பரிசைக்கூடப் பெறலாம். இதுபோன்ற ஜாதக அமைப்பை உடையவர்கள் குறுகிய அளவில் வேளாண்மை செய்யுங்கள், அல்லது வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பைப் படியுங்கள். வாழ்வில் மிகப்பெரிய இடத்திற்கு வருவீர்கள்.

நம்முடைய கண்ணெதிரே பலபேர், பலவீடுகளுக்குச் சொந்தக்காரர்களாக உள்ளார்கள். அவர்கள் வாடகை பெறுவதன் மூலம் அதில் வருவாயும் ஈட்டிக் கொள்கிறார்கள். இதற்கு என்னகாரணம் என்று ஆராய்ந்து பார்த்தோமானால், வீடுகளைக் குறிக்கும் கிரகமான நான்காமதிபதியும், பணத்தைக் குறிக்கும் இரண்டாமதிபதியும், இவர் வீட்டில் அவரும், அவர் வீட்டில் இவருமாக மாறி அமர்ந்திருந்தால், அந்த ஜாதகர் பலவீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாய் பார்ப்பார். இன்னுமொரு அமைப்பாக, இரண்டாமதிபதியும், வியாழன் எனும் நல்லக்கோளும், இலாபாதிபதியான பதினொன்றாமதிபதியும் கூடி வீட்டைக் குறிக்கும் நான்காம் வீட்டினில் அமர, ஜாதகனான நீங்கள் பலவீடுகளைக் கட்டி அதன்மூலம் வாடகைக்கு விட்டு வருமானம் பார்ப்பீர்கள். இந்த அமைப்பில் கூடுதலாக வருமானம் பெருகி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள்


அந்த நான்காம் வீட்டிற்கு குரு எனும் சுபக்கோள் தொடர்பு ஏற்படுவதால், கற்றவரும், ஞானமிகுந்தவரும் குடி வருவர்

No comments:

Post a Comment